~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சின்ன சின்ன கதைகள் - 1/25



கோபி எப்படியும் இந்த காரியத்தை முடித்துவிடுவான் என்கிற  நம்பிக்கையில் அவன் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். எங்கள் சங்கத்தில் அவனை போல தைரியசாலி யாரும் இல்லை, இந்த வேலை செய்ய அவன் ஒருவனைவிட்டால் வேறு ஆள் முன்வரமாட்டார்கள். 

எங்களை பார்த்தாலே சுடுவிடுவதை போல பார்க்கும் அந்த மீசைக்காரர்க்கு இதைவிட வேறு அதிர்ச்சி ஏதும் இருக்காது. 


இதோ கோபி வந்துவிட்டான்.

மச்சி காரியம் கச்சிதமா முடிஞ்சிடுச்சு - சொல்லும் போதே மிக பெரிய சாதனை செய்தவன் போல நெஞ்சை நிமிர்த்தி சொன்னான். அவன் கைகளில் அது இருந்தது.

ஆள் ஆளுக்கு அவனை பாராட்டினோம். நாளைக்கு காலைல யாரும் அந்த சைடு போகாதிங்க என்று எல்லோருக்கும் அறிவுரைதான். 

அடுத்த நாள் காலனியில் எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. சங்கத்தின் உறுபினர்கள் மொட்டைமாடியில் கூடி தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்று விவாதித்தோம்.. கோபி ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டான், தான் தவறு ஏதும் செய்யவில்லை சந்தோஷ் சொல்லி குடுத்த முறையைத்தான் பின்பற்றினேன் என்றான். 

சரி மணி ஆகிவிட்டது எல்லோரும் அவர் அவர் வீட்டிற்கு சென்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு டியூஷன் சென்றோம் மீசைகாரரிடம்.

எங்கள் யூகம் தவிடுபொடி ஆனது , மீசைக்காரர் முகத்தில் அது . 

அப்ப கோபி எடுத்துட்டு வந்தது?? 

மீசைகாரரின் அம்மா கோபியின் கால்களை மிதித்துவிட்டார். 

"யப்பா என்னோட கண்ணாடி எங்கையாவது இருக்கானுபாரேன். கண்ணு சரியா தெரியல" 

"அம்மா நீ அந்த பக்கம் எல்லாம் போகாதா நான் நாளைக்கு புதுசா கண்ணாடி வாங்கிதரேன் சொன்னேன்ல. இப்படி வாமா , கண்ணாடிய எங்கையாவது வச்சிட்டு ஏன் எங்க உசுர வாங்குற. போய் படு அந்தாண்ட "

சரி பசங்களா எல்லோரும் அஞ்சாவது வாய்பாட்டை படிங்க. டேய் கோபி மூணாவது வாய்பாட்டை படிச்சியா??  வாடே இங்க,  எங்க உன்னோட கூட்டாளிங்க எல்லாம் ?? 

மவுனமாய் நின்று கொண்டு இருந்தான் கோபி. அவன் கால்சட்டை பையில் அந்த கண்ணாடி.  




With Love
Romeo ;)

சில திரைபடங்களும் ஒரு புத்தகமும்


The Red Cliff  I & II

ஆங்கில ஆக்ஷன் படங்களை மிகவும் நேசிக்கும் ரசிகர்களுக்கு டைரக்டர் John Woo தெரியாமல் இருக்காது. 

Mission Impossible - 2 , Face off , Broken Arrow போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த படமே The Red Cliff 






சீனா நாட்டில் மிக பெரிய அரசாட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கோகோ குறுநில மன்னர்களை அடிமைப்படுத்த நினைக்கிறார்.  அதன் பொருட்டு அவரின் தலைமையின் கீழ் மிக பெரிய படையோடு   Sun Quan and Liu Bei என்கிற இரண்டு நாட்டை கைப்பற்ற கிளம்புகிறார்.

இவரின் பெரும் படையை எப்படி எதிர்கொள்கிறார்கள் இந்த அரசர்கள் , எப்படி எல்லாம் யுகம் அமைத்து வெற்றிகண்டார்கள் என்பதை வெண்திரையில் அல்லது DVDயில் காண்க.


படத்தில் இருப்பது இரண்டே இரண்டு சண்டை காட்சிகள். ஒன்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் மற்றொன்று இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ்.  இரண்டும் வெகு அருமை, சீனா படங்களில் நடைபெறும் சண்டை காட்சிகள் போலவே இருந்தாலும் அந்த சண்டை துடங்குவதற்கு முன் அவர்கள் செய்யும் போர் தந்திரங்கள், குறைந்த அளவே உள்ள படைகளை வைத்துகொண்டு எப்படி அவ்வளவு பெரிய படையை அழித்தார்கள் என்பது ரொம்ப சுவாரசியமாக விறுவிறுப்பாக  சொல்லி இருக்கிறார் இயக்குனர். 


முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் நிலத்தில் நடக்கிறது , இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் நீரில். 

ஒரு பெரும் படையை அழிக்க தேவைப்படுவது வீரம் மட்டும் அல்ல ராஜதந்திரமும் கூட. படத்தை பார்த்தல் உங்களுக்கே தெரியும் அந்த ராஜதந்திரம் என்ன என்று. 


Don't Miss  to Watch this Movie.


-------------------------------------------------------------------------------------------------------

ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ருத்ர தாண்டவம் படத்தை பார்க்க நேர்ந்தது. வி.கே.ராமசாமி, நாகேஷ் நடித்த படம் படத்தில் வி.கே.ராமசாமி சிவனாகவும், நாகேஷ் கோவில் பூசாரி ஆகவும் நடித்து உள்ளனர். 

படத்தில் சிவன் வெகு இயல்பாக பேசியது தான் அருமை. கடவுள் எல்லாம் வரத்தை குடுக்கணும் அல்லது உபதேசம் மட்டுமே பண்ணவேண்டும் என்கிற கொடுமையை அப்பவே உடைத்து எரிந்துள்ளர்கள்.    ஒரு இடத்தில நாகேஷ் இந்திய பெரிய நாடுதானே பேசாமல் மாநிலங்களை எல்லாம் பிரித்துவிடலாம் என்று யோசனை சொல்லுகிறார் அதற்கு வி.கே.ராமசாமி சொல்லும் பதில் அருமை. இன்றைய காலகட்டத்துக்கு ஒத்துபோகிற நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளது.  

படத்தில் ஒரு காட்சி :-

கோவிலில் இருக்கும் பார்வதி சிலையை கடத்திவிடுகிறார்கள் அதை தெரிந்து சிவன் ரொம்ப சோகமாக கோவிலில் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்லும் நாகேஷ் தனது துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். ஆனால் சிவனோ ரொம்ப பயந்து போய் இருக்கிறார், பூசாரி இப்போ பார்வதியை அமெரிக்காக்கு கடத்திட்டு போய்ட்டாங்க, நாளைக்கு என்னைய சீனாக்கு கடத்திடான்கனா அதுக்கு அப்பறம் நானும் பார்வதியும் ஒண்ணு சேரவே முடியாதே. சீனா அமெரிக்க ஒண்ணு சேர்ந்தாதான் நாங்க சேருவோம். அதற்கு நாகேஷ் சொல்லுவர் நான் இருக்குறார் வரைக்கும் உங்க மேல ஒரு கை வைக்கவிடமாட்டேன். 

இந்த வசனத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம் சாமியோட  நிலைமை என்னனு.
     

-------------------------------------------------------------------------------------------------------

போர்க்களம் - நண்பன் ஒருவன் ரொம்ப வற்புறுத்தி சொல்லியதால் பார்த்த படம், நிஜமாலுமே படத்தை தியேட்டர்ல பார்க்காதது பெரும் தவறு :(.  பாண்டி சரோஜ் குமார் இயக்கம் சிம்ப்லி சூப்பர். 

எல்லா இடத்திலையும் ஏதோ ஒரு வித்தியாசத்தை ஆங் ஆங்கே புகுத்தி அசத்தியுள்ளார். கேமரா கோணம் எல்லாம் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத புதுவித கோணம். 



படத்தின் கதைக்களம் அருமை,  மாஸ் ஹீரோ யாரவது நடித்து இருந்தால் படம் செம ஓட்டம் ஓடி இருக்கும், கிஷோர் ஹீரோவாக ஏற்றுகொள்ள தான் முடியவில்லை. சத்யன் படத்தில் அருமையாக நடித்துள்ளார்.  இயக்குனர்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது .இவரின் அடுத்த படத்தை கண்டிப்பாக முதல் காட்சிளையே  பார்த்துவிடவேண்டும்.


-------------------------------------------------------------------------------------------------------








நான் சிறுகதைகளை முழு மூச்சாக படிக்கமாட்டேன், எந்த ஒரு புத்தகத்தையும் அப்படி படிப்பதுயில்லை. காரணம் அதன் தாகம் என்னில் கொஞ்ச நேரமே இருக்கும் அதனால் கொஞ்சம் கொஞ்சமாக படித்து அந்த புத்தகத்தின் தாக்கத்தை என்னுள் பல நாட்கள் இருக்கும் படி செய்துகொள்வேன். கேபிள் புத்தகம் வெளிவந்து பல நாட்கள் ஆகிறது ஆனால் நேற்றுதான் கடைசி பக்கத்தை படித்து முடித்தேன். 

புத்தக வெளியிட்டு விழா அன்று அஜயன் பாலா புத்தகத்தை பற்றி பேசும் போது துரை.. நான்.. ரமேஷ்சார் என்கிற கதை ரொம்ப அருமையாக இருக்கிறது என்று சொன்னார். அவரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். மற்ற எல்லா கதைகளைவிட இந்த கதை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அந்த பெண்மணி மூலம் கதையை நகர்த்தி கொண்டு சென்றது நல்ல உக்தி. சமிபத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி நாவல் படித்தேன், அதற்கு வெகு அருகில் செல்கிறது இந்த கதை. இந்த புத்தகத்தை பற்றி எழுதவேண்டும் என்றால் தனி பதிவே போடவேண்டும். 


புத்தகத்தில் இருக்கும் பலகதைகள் பாலியல் அல்லது காதலை மையப்படுத்தியே இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு கதைகள் தான் வேறுதளத்தில் அருமையாக பதிகப்படுள்ளது. 


பிடித்தது என்று ஒன்று இருக்கும் எனில் பிடிக்காதது என்று ஒன்று இருக்கத்தானே செய்யும் 
அது என்னை பிடிக்கவில்லையா..? தான் . கள்ளகாதல் என்றுமே ஏற்புடையது அல்ல இது எனது வாதம்.

மற்றபடி 15+ படிக்கவேண்டிய புத்தகம். 

இந்த ஆண்டுக்குள் சீக்கிரம் அடுத்த புத்தகத்தை ரிலீஸ் பண்ணிவிடுவார் போல இருக்கிறது. புத்தகம் வெளியாகி 10 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் 3 சிறுகதைகளை எழுதிவிட்டார். 



With Love
Romeo ;)

கிரிக்கெட் - பிடித்ததும் பிடிக்காததும்

பதிவர் நண்பர் மணிகண்டன் அன்புடன் கிரிக்கெட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவு.
--------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. யார் வேண்டுமாலும் எழுதலாம். ( நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டாங்க அதான்)




1. பிடித்த கிரிக்கெட் வீரர்?  ஸ்டீவ் வாக் , சச்சின்

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
(கள்)? பாகிஸ்தான் வீரர்கள் 

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் 
மெக்ராத் மற்றும் அம்ப்ரோஸ் 

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்
 ஆசிப் 


5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, ஹர்பஜன் 

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் 
அஜந்தா மெண்டிஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் 
சச்சின்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் 
மிஸ்பா உல் ஹக், ஆம்லா 

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் 
கில்க்ரிஸ்ட், ஜெயசூரியா 

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர்
 மைக்கல் பெவன் 

11. பிடித்த களத்தடுப்பாளர் 
ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் 
கிளார்க் 

13. பிடித்த ஆல்ரவுண்டர் 
காலிஸ், பிளின்டாப் 

14. பிடித்த நடுவர் 
 டேவிட் ஷெபெர்ட 

15. பிடிக்காத நடுவர் 
 இந்தியன் டீம்க்கு அவுட் குடுக்குறவங்க

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் 
 ஹர்ஷா போகலே, டோனி கிரெய்க்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் 
சித்து, சுனில் கவாஸ்கர்  

18. பிடித்த அணி 
இந்தியா, நியூசிலாந்து

19. பிடிக்காத அணி 
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் 


20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- 
இந்தியா ஆடும் அணைத்து போட்டிகளும்


21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- 
பாகிஸ்தான் - இங்கிலாந்து 

22. பிடித்த அணி தலைவர் 
 டோனி, வெட்டோரி 


23. பிடிக்காத அணித்தலைவர் 
பாண்டிங்  

24. பிடித்த போட்டி வகை
 ட்வென்டி ட்வென்டி

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி 
கங்குலி சச்சின் 

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி 
மொக்கை போடும் வீரர்கள் 

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் 
சச்சின், டிராவிட் 

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் 
சச்சின், பிரட்மன் 





நான் முதலே சொன்னது போல இதை தொடர நினைக்கும் நண்பர்கள் யார்வேண்டுமாலும் எழுதலாம். நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். 

விட்டுவிட்டேன்








  இதே போன்று உங்களுக்கும் ஏற்படலாம் அல்லது  ஏற்படாமலும் போகலாம் 




சி நாட்களாக வலது காலில் வலி அதிகமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக சில நாட்கள் காலில் வலி வந்து பாடாய் படுத்திவிடும். தூங்கும் போது கால்களை நேராக வைத்து படுக்க முடியாது. வலது கால் முழுக்க வலி இருந்து கொண்டே இருக்கும். எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் வலியுடன் தூங்கிய நாட்கள் அதிகம். ஏன் எதனால் என்று தெரியாமல் இருந்தேன். 5 மருத்துவர்களை மாற்றி மாற்றி சந்தித்த போது அனைவரும் வலிநிவாரணி மருந்தையே தந்தார்கள். ஒருவர் இது கண்டிப்பாக யானைக்கால் வியாதின் ஆரம்பம் என்றார். அவர் எழுதி குடுத்த மாத்திரையை ஒரு மாதம்  உட்கொண்டேன் ஒரு ப்ரோஜனமும் இல்லை. சென்ற இடம் எல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  நண்பர்கள் சிலரிடம் இதை பற்றி பேசியபோது இது நரம்பு சம்பந்தபட்டது அதனால் அதற்குண்டான மருத்துவரை பார்க்க சொல்லி பரிந்துரைத்தார்கள். 





மருத்துவர்களை பார்த்து பார்த்து ரொம்ப சலித்து போனதால் நரம்பியல் மருத்துவரை சந்திப்பதை சிறிது காலம் தள்ளி போட்டு கொண்டு வந்தேன். இன்நிலையில் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருவதை நிறுத்த முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். டீ , காபி, டிபன், சாப்பாடு என்று எதை சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது வாந்தியாக வெளிவந்துவிடுகிறது. வெளியே எங்கு சென்றாலும் தண்ணி கூட குடிப்பது இல்லை. வர வர உடல் நிலை மோசமாவதை கண்கூடாக பார்த்தேன் முன்றே வாரங்களில் 4 கிலோ கம்மியாகி போனேன். 

 ஏன் எதற்கு என்று தெரியாமல் வெறுப்பின் உச்சியில் சிலநாட்கள் இருந்தேன் , மாத்திரை சாப்பிட சாப்பிட அதன் மேல் ஒரு வித வெறுப்பு உண்டானது .  மனைவி ரொம்ப பயந்துவிட்டாள் சென்ற முறை ஊருக்கு சென்ற போது இதன் தாகம் அதிகமாக இருந்தது. அங்கு இருக்கும் ஒரு மருத்துவரை பார்க்கும் படி என்னை வற்புறுத்தினாள், சரி என்று அவரை சந்திதேன் அதும் இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். எனது உடன் நிலையை பற்றி அவரிடம் முழுவதுமாக சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.  

"நீங்க புகைபிடிபவரா  ?" 

ஆம் என்று ஒத்து கொண்டேன்.  உங்களது  அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம் என்று அவர் சொல்லிய விளக்கங்களை  கேட்ட போது என்னை அறியாமல் உயிரின் மேல் ஒரு வித பயம் வந்துவிட்டது.

புகைபிடிப்பதால் கேன்சர் மட்டுமே வரும் என்று நிறைய பேர் நினைத்து கொண்டு இருகிறார்கள். அது தவறு உங்களுக்கு அல்சர், அஜீரண கோளாறு, முச்சு விடுவதில் சிரமம், கால் வலி போன்று நிறைய வியாதிகள் வருவதற்கு முக்கியமான காரணம் இதுதான் .  உங்கள் கால் நரம்புகளில் செல்லும் இரத்தம் தடைபடும் போது தான் வலியை உணருவீர்கள். இதற்கு ஒரு வழி புகைபிடிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்றார். 

உடனே நிறுத்துவது சிரமம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுகிறேன் என்றேன்.  அது எல்லாம் கூடாது நீங்கள் இப்பவே நிறுத்த வேண்டும், இல்லை என்றால் உங்கள் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றவர் உதரணத்துக்கு ஒன்றையும் சொன்னார். என்னை போன்றே ஒருவர் கால் வலி  சிகிச்சைக்காக வந்தார் அவருக்கும் இதே போன்று வலி இருந்தது. மருத்துவர் எவ்வளவோ முறை எடுத்து சொல்லியும் புகைப்பதை அவர் நிறுத்தவேயில்லை அதனால் அவரின் ஒரு கால் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, எடுத்தும் விட்டார். 

இதை கேட்கும் போதே நினைத்து கொண்டேன் இந்த சனியனை விட்டோழிய வேண்டும் என்று. 

அதை செயல்படுத்த என்னால் முடியவில்லை. கண்டிப்பாக நான் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறேன். எப்பொழுதும் மனம் புகைப்பதை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறது . எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை, காலையில் எழுந்தது முதல் சிந்தனைகள் எல்லாம் அதிலே முழ்கி இருக்கும். எப்போது வெளியே போகலாம் புகைக்கலாம் என்று சிந்தனைகள் சிதறடித்து இருக்கும். எனது நிலையில் நான் உறுதியாக இருக்கவேண்டும் என்று மிக தீவிரமாக இருக்கிறேன். புகைப்பதை நிறுத்துவது அவ்வளவு எளிது அல்ல என்பதை 3  நாட்களில் தெரிந்துகொண்டேன். குடும்பத்தை நினைக்கும் போது எனது செயலில் நான் உறுதியாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பு அதிகமாகி கொண்டு இருக்கிறது. வெகு சிரமத்துக்கு பிறகு இப்பொழுது முழுவதுமாக நிறுத்தி விடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.  நிறுத்தியவுடனே எனது உடலில் பல பல மாற்றங்களை நான் சந்திப்பேன் என்றால் அது சுத்த பொய். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேரும். அதே சமயம் மனதை கட்டுபாடுடன்  வைத்துகொள்ள வேண்டும். தவறை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை நான் பயன்படுத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 

 நண்பர்களுடன் நானும் ரவுடி தான் என்கிற திமிரில் ஆரமித்த பழக்கம், 15 ஆவது வயதில் இருந்து தினமும் என்னுடன் வந்துகொண்டு இருக்கிறது. இது தவறு என்று தெரிந்தே அதனுடன் உறவாடிய நாட்கள் அதிகம். வாழத்தான் வேண்டும் என்கிற நிலை வரும் போது பிரிவது நன்று தான். 

விட்டுவிடுவோம் புகையை  


With love
Romeo ;)

ன்னை!!!!!!!!!!



காதலர் தின ஸ்பெஷல் கவிதை






திண்ணையில் உட்கார்ந்து கொண்டு
பார்த்தேன் எதிர்வீட்டு பெண்ணை
எரித்துவிடுவது போல
பார்த்தாள் என் கண்ணை
தலை தூக்கி பார்த்தேன் விண்ணை
முகத்தை அசிங்கம் பண்ணியது
பறக்கும் அன்னை
சிரிப்பு சத்தம் கேட்டு
பார்த்தேன் அந்த பெண்ணை
முகத்தை அலம்புடா வெண்ணை
என்றாள் என்னை!!!


With Love
Romeo ;)

படித்து முடித்த புத்தகம் - சேலஞ்ச்


ரொம்ப விறு விறுப்பாக உண்மை சம்பவங்களை படிக்க வேண்டுமா??
கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருக்க வேண்டுமா??
அடுத்தது என்ன என்று தெரிந்துகொள்ள பரபரப்பாக படிக்க வேண்டுமா?
அப்ப உங்களுக்கு ஏத்த புத்தகம் இதுதான்.









ஒரு புத்தகம் என்னை இத்தனை தூரம் ஈர்த்தது இல்லை. அவ்வளவு வேகம் ஒவ்வொரு அத்தியாமும் வரி விடாமல் சுவாரசியம் குறையாமல் படுவேகமாக செல்கிறது.

90'களில் ஜெ அரசால் நக்கீரன் பத்திரிகை எப்படி எல்லாம் பழி வாங்கபட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறது இந்த புத்தகம்.

ஆட்சியாளர்களால் ஒரு பத்திரிகையை எந்த வழிகளில் எல்லாம் முடக்க முடியுமோ அதை எல்லாம் கொஞ்சம் கூட வஞ்சனை வைக்காமல் செய்ததை தோலுரித்து காட்டி இருக்கிறார் ஆசிரியர் நக்கீரன்.

ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரு பத்திரிகையை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்பதை படிக்கும் போது நம்மை அறியாமல் இவர்களின் மேல் ஒருவித பரிதாபம் எழுகிறது.
மன தைரியம் மட்டும் இல்லை என்றால் இவர்கள் என்றோ காணாமல் போயிருபார்கள்.

நக்கீரனுக்கு எதிராக ஜெ அரசு செய்த அடக்குமுறைகள், பத்திரிக்கைகள் வெளிவராமல் இருக்க இவர்கள் செய்த தகிடுதடங்கல் , போலீஸ்காரர்களை ஏவிவிட்டு நடத்திய ரெய்டுகள், அதை எப்படி எல்லாம் முறியடித்து ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை தாமதிக்காமல் குறிபிட்ட நாளில் வெளிக்கொண்டு வந்தது, இவை எல்லாவற்றையும் படிக்கும் போது வெகு ஆச்சரியமாக இருக்கிறது.

ஆட்டோ சங்கரின் வாக்குமுலம் வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் அதை இவர்கள் எதிர்கொண்ட விதம், வீரப்பனை சந்திக்க எடுத்த முயற்சிகள் அதிரடி படையினரை ஏமாத்தி இவரின் நிருபர்கள் எடுத்த துணிச்சல்கள், நிதிமன்ற சம்பவங்கள் , பொய் வழக்குகள் அதை இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு முறை,சிறைச்சாலையில் நடைபெற்ற கொலை. இதை எல்லாம் படிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

சாதாரண நடையில் தான் இருக்கிறது பக்கங்கள் எல்லாம், ஆனால் அதில் இருக்கும் விஷயமோ அசாதாரமானது.


ஒரு தொடராக வெளிவந்ததை புத்தக வடிவில் கொண்டு வந்து இருகிறார்கள்.

நல்ல தீனி உள்ள புத்தகம்.

புத்தகம் கிடைக்கும் இடம்
சேலஞ்ச்
விலை - ருபாய் 190/-
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
105,ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை-600 014.
Ph: 44 - 4399 3007
Ph: 44 - 4399 3000

With Love
Romeo ;)

அப்படி இப்படி





தமிழ்படம் பார்த்து வயறு வலிக்க சிரித்தேன். படம் வெளிவருவதற்க்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு, அதை மறக்காம பூர்த்தி பண்ணி இருக்காங்க.
இந்த படத்தை பார்த்த 95% மக்கள் சூப்பர்ன்னு தான் சொல்லுறாங்க. சிலர் மட்டும் படம் குப்பைன்னு சொல்லுறாங்க. வேட்டைக்காரன் படத்தை சூப்பர்ன்னு சொன்ன ஒரு நண்பருக்கு இந்த படம் குப்பையாம்!!!!
அட ராமா நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா ??? அவன் சொன்ன ஒரு கண்டுபுடிப்பு தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"மச்சி படத்துல கதையே இல்லடா. மத்த படத்தோட சீன் எல்லாம் உருவி இதுல சேர்த்து இருக்காங்க" எவ்வளவு நாள் கழிச்சு இந்த படத்தை பத்தி ஒரு கண்டுபுடிப்பு !!!!!

"இனிமேல நீ எந்த படத்தையாவது பத்தி பேசுன அன்னைக்கே நமக்குள்ள இருக்குற நட்பு முறிஞ்சிடும்டா" சொல்லி போன் கட் பண்ணினேன்.

--------------------------------------------------------------------------------------------

இந்த மெகா சீரியல் தொல்லை வர வர ஓவரா ஆகிட்டு இருக்கு. சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது. வீட்டுல அப்பா கூட அடிமை ஆகிட்டாரு என்பதுதான் வேதனை :(. ஊருக்கு போனபோது தங்கமணி சொன்னா "7.30 - 8.30 நான் சீரியல் பார்ப்பேன் நீங்க குழந்தையை பார்த்துகோங்க"

அப்பவே பையனுக்கு ஒரு பாட்ட பாடி காமிச்சேன்

"உன்னை சொல்லி குதம் இல்லை,
என்னை சொல்லி குதம் இல்லை
காலம் செய்த கோலமடா "

என்ன?? என்றாள் தங்கமணி.

மீ தி எஸ்கேப்ன்னு ஓடிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------

சென்னை மாநகர் பேருந்துல நடத்துனர் என்று ஒரு சீட் இருக்கும். எவன் டிக்கெட் வாங்கினா என்ன வாங்காட்டி என்ன நம்ம சீட் நல்லா இருக்கான்னு பார்த்து உட்கார்ந்து இருப்பாங்க. போன வாரம் நான் வந்த பஸ்ல கூட்டம் இல்ல டிரைவர் சீட்க்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு பேமிலி உக்கார்ந்து இருந்தாங்க. அவங்க டிக்கெட் வாங்க கைல காசு வச்சு இருந்தாங்க ஆனா நடத்துனர் அவர் சீட்ல இருந்தபடியே காசு குடுத்து விடுங்க என்றார். அந்த நபர் அது எல்லாம் முடியாது நீங்க இங்க வந்து வாங்கிகோங்க என்றார், இதுல என்ன தப்பு இருக்கு?? அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார்!!. நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.

கொஞ்சம் கூட டென்ஷன் பண்ணாம அந்த நபர் தன்னோட ID கார்டு எடுத்து காமிச்சு சொன்னார். இப்ப எனக்கு டிக்கெட் தரலைனா அப்பறம் நீ கன்சூமர் கோர்ட்க்கு வரவேண்டி இருக்கும். அவ்வளவு தான் அந்த நடத்துனர். கப்சிப்ன்னு ஆகிட்டார். அப்பறமா தான் தெரிஞ்சது அவரு ஒரு லாயர்ன்னு.

எனக்கு ஒரு கேள்வி எழுந்துச்சு. தமிழ்நாட்டுல சென்னைல மட்டும் தான் நடத்துனர்க்கு என்று தனியாக ஒரு சீட் குடுத்து இருக்காங்க. அது ஏன் ?? மத்த மாவட்டதில் இந்த மாதிரி எல்லாம் இல்லையே. ஏன் ??

--------------------------------------------------------------------------------------------
அடுத்த இடைதேர்தல்க்கு ஆளும் கட்சி ரெடி பண்ணிடாங்க. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு பொதுதேர்தலுக்கு அதுக்குள்ள இன்னும் எத்தனை பேரு கோபாலபுரம் வீடுக்கு மாற போறாங்கன்னு தெரியல. தனது கட்சி ஆளுங்க ஜகா வாங்குறத பொறுக்காமல் அம்மாவே ரோடுக்கு வந்துட்டாங்க.
அட நான் சொல்லுறது விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் அம்மையார் கலந்துகொள்ள போறாராம். கட்சிய காப்பாத்த எப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டியதா இருக்கு பாருங்க .

--------------------------------------------------------------------------------------------

தல படம் ரிலீஸ் ஆகிடுச்சு.
எப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் "அசல்" படம் பதிவர்களுக்கு "அவல்".

--------------------------------------------------------------------------------------------
போன பதிவை படிச்சிட்டு நண்பன் பேசும் போது கேட்டான் " நீ உண்மையிலே அந்த லேடி கிட்ட பேரு கேக்கலையா?? என்னால நம்ப முடியலையே" ரொம்ப டவுடா கேட்டான்.
ஊரபட்ட பொய் சொன்னா நம்புறாங்க ஒரு உண்மைய சொன்னேன் அத நம்பமாட்டேன்னு சொல்லுறாங்க. நம்புங்கபா நம்புங்க எனக்கு அவங்க பேரு தெரியாது.

--------------------------------------------------------------------------------------------

ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவரும் ராஜேஷ்குமார் தொடர்கதை இனி, மின்மினி படிக்க படிக்க சுவாரசியாம இருக்கு. என்னோட கணிப்பு எல்லாம் தோற்று கொண்டு இருக்கிறது என்பது உண்மையே.
நாவலா இருந்தா சுவாரசியம் தாங்காம கடைசி பக்கம் போய் படிச்சிடுவேன். இது தொடர்கதை என்பதால் வாரா வாரம் காத்து கொண்டு இருக்கவேண்டியதா இருக்கு. ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் கதையை படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.

--------------------------------------------------------------------------------------------