~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அட பார் ரா... லுக் - 5

அட பார்ரா இந்த காமெடிய . ஏன்டா உங்க ஊருகாரன் எல்லாம் இங்க படிக்கிறதா நீ இது வரைக்கும் சொல்லவே இல்லையே என்று குமார் கேட்டான்.

டேய் அவன் எங்க ஊரு இல்லடா பக்கத்துக்கு ஊரு, நேத்து தான் எனக்கே தெரியும். எக்ஸாம் பீஸ் கட்ட போன இடத்துல இவன் நின்னுட்டு இருந்தான். நான் சீனியர் பையன்னு பயந்து ஒதுங்கி போனேன், அவனே கூப்பிட்டு பேனா கேட்டான். நான் பயந்துடே போனேன், ஆனா அவன் சிரிச்சிட்டு இருந்தான், அப்பறம் தான் சொன்னான் காலேஜ் முடிச்சி ஒரு வருஷம் ஆச்சாம் இப்ப அர்ரியர்ஸ் எழுத வந்து இருக்கான். நான் எந்த ஊருன்னு கேட்டான் சொன்னனேன் இவன் பகத்து ஊரு. டைம் ஆச்சுன்னு நான் கிளம்பிட்டேன். இங்க என்னடானா இவன் அடி வங்கி இருக்கான்.

சரி ரமேஷ் வரான் என்னன்னு கேளு.

"மச்சி செயின் கிடைச்சிடுச்சு டா தலைகாணி குள்ள இருந்துச்சு. என்னடா ஒரே கும்பலா இருக்கு?? எசகு பிசகா அடிச்சதுல படாத எடத்துல பட்டு மண்டைய போடுடான இவன் ? சொல்லுடா எப்படியும் காலேஜ் லீவ் விடுவாங்கள" என்று ஸ்கூல் பசங்க லீவ்க்கு அலையுற மாதுரி கேட்டான்.


"டேய் ஓவர்ரா பேசாத கொஞ்ச நேரம் பொத்திட்டு இரு" என்று மடக்கினேன் .

கணேஷ் எங்கடா ?

அவன் ரூம்ல இருக்கான், இருட்டுல அந்த அடி அடிச்சான்ல இப்ப கூப்பிட்டா இவனுகள பார்த்து பயபடுறான். நான் வரல நீ போய் உங்கள கூட்டிடு வான்னு ஜகா வாங்கிட்டான் .

சரி வா நாம இடத்த காலி பண்ணலாம் போற வழில நான் சொல்லுறேன் இப்ப கொஞ்சம் அமைதியா வா.

"சரி அடி வாங்கினவன் முஞ்சிய பார்த்துட்டு வரேன் இரு" என்று கிளம்பினவனை குமார் அவனின் தோல் பட்டையை அழுத்தி இழுத்து கொண்டு வந்தான்.

போகிற வழியில் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னேன். பயபுள்ள ஏற்கனவே பீதில இருகுறவனையும் பேதி வரவசிடுவான் போல அந்த மாதுரி பயப்படுத்தி விட்டுட்டான்.


மச்சி இந்த மேட்டர் நம்ம நாலு பேருக்கு தான் தெரியும் இத தப்பி தவறி யாரும் யார்கிட்டையும் சொல்லிட கூடாது. கடுகு அளவு மேட்டர் கசின்ஜாலும் நம்ம நாலு பேருக்குதான் ஆப்பு அத தெரிஞ்சிகோங்க.


ரூம்க்கு வந்தா கணேஷ் எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான்.

"டேய் வெளிய போய்டாதடா நீ அடிச்ச அடில அவன் மண்டைய போட்டுடான். போலீஸ் அங்க இருக்குறவங்க கிட்ட எல்லாம் விசாரணை பண்ணிட்டு இருகாங்க" என்று கணேஷிடம் பெரிய குண்டு தூகி போட்டான் கேட்ட உடனே கணேஷ் முகம் அம்மாவசை கணக்காக இருண்டு போனது.

"டேய் மச்சி என்னடா சொல்லுர ??"

"ஆமா டா நீ அடிச்ச அடில அவன் மண்டைய போட்டன். போலீஸ் எல்லாம் வந்து இருக்கு. நி எதுக்கோ கொஞ்சம் உசார இருந்துக்கோ."


"டேய் ஏன்டா அவன பயபடுத்துற. மச்சி அது எல்லாம் ஒன்னும் இல்ல" என்று அவனை சமாதானம் படுத்திவிட்டு நடந்த உண்மையை முதலில் இருந்து சொன்னேன்.

டேய் நாயே கொஞ்ச நேரத்துல என்னைய ஒரே அடியா ஆட வச்சிடேயே என்று அவன் மீது செருப்பை துக்கி வீசினான் .


சரி விடுங்கடா காலேஜ்க்கு டைம் ஆச்சு கிளம்பலாம்.

ரமேஷ் கிட்ட இருக்கிற டிரெஸ் எடுத்து நானும் குமாரும் போட்டு கொண்டு கிளம்பிநோம்.

காலேஜ் போனதும் கொஞ்ச நேரத்தில் ஆபீஸ் பாய் வந்து என்னை ஆபீஸ்ல வர சொல்லி கூப்பிட்டார், பக்கத்தில் இருந்த குமார் பயப்படாத எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லு.

என்னை மட்டும் ஏன் வர சொன்னாங்க என்று புரியாமல் சென்றேன்.


திரும்ப கிளாஸ்ரூம் போகும் போது சிரித்து கொண்டே வந்ததை பார்த்து ரமேஷ் , குமார் எல்லாம் ஒரு மாதுரியாக பாத்தார்கள் ...

அவங்களுக்கு எப்படி தெரியும் அங்க நடந்த கூத்த ???