~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அட பார் ரா... லுக் - 6


அட பார் ரா ஹா ஹா ஹா என்று கிளாஸ் ரூம் அதிர சிரித்து மச்சி அப்ப எஸ்கேப்ன்னு சொல்லு, இனி எவனும் நம்ம கிட்ட வேலை காட்ட மாட்டாங்க என்று சந்தோஷத்தில் இருந்தான் கணேஷ்

அப்படி சொல்ல முடியாது மச்சி யாருன்னு தெரியாத வரைக்கும் நாம எஸ்கேப் தெரிந்தன்னு வை அப்பயும் நாம எஸ்கேப் தான் காலேஜ் விட்டு. சரி விடு அடி வாங்கினவனே போலீஸ் கிட்ட ஏதும் சொல்ல வேண்டம்ன்னு சொல்லிட்டான் அப்பறம் என்ன.
சரி அந்த பையன் ஏன்டா உங்கிட்ட அடிவாங்கினது யாருகிட்டையும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்னு தான் தெரியலையே.
எங்க ஊரு பசங்க சில பேரு அவனுக்கு தெரியுமா டா அதனால்தான் யார்கிட்டையும் சொல்லிடாதன்னு சொன்னான்.
எங்களின் பேச்சு கொஞ்ச நேரம் நிடித்து அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்ததும் நின்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு எங்க சீனியர் பசங்க கொஞ்சம் அடக்கியே வசித்தார்கள் . அவர்களை குறிவைத்து தாக்க நினைத்து வேறு ஒருவன் மாட்டி கொண்டது அவர்களிடம் கொஞ்சம் பயம் கொள்ள வைத்தது. அதன் பிறகு எங்களை ராக்கிங் என்கிற பெயரால் யாரும் தொந்தரவு செய்ய வில்லை.
முதலாம் ஆண்டு முடியும் வரை நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எங்களுக்கு பிறகு வந்த ஜூனியர் மாணவர்களிடம் நாங்கள் நட்புடனே பழகினோம். அதே சமயம் சீனியர் என்கிற கேத்து கொஞ்சம் கூட குறையாமல் வளம் வந்தோம்.
பிரிவு உபசார விழாவின் கண்களை கசக்கி கொண்டே விடை பெற்றோம். சரக்கு என்றால் அரை கிலோமீட்டர் ஓடும் அப்புராணி பசங்க கூட ஒரு பெக் அடித்து எங்கள் உடன் ஒரு இரவு வாந்தியுடன் அடுத்த நாள் காலை பிரிந்தது எங்கள் நினைவின் இருந்து நீங்கா இடம் பெற்றது.
இன்று எங்கள் உடன் படித்த நண்பர்கள் வட்டம் ரொம்ப சுருங்கி போய்விட்டது. குமார் மற்றும் கணேஷ் மட்டுமே எப்போதும் தொடர்பு எல்லைக்கு உள்ளே இருகிறார்கள். மற்றவர்கள் அவுட் ஆப் ரீச் தான்.
வேலை நிமித்தமாக நான் சென்னை வந்தது குமார் இருக்கும் தைரியம் தான். அவன் என்னை போல் இல்லாமல் கல்லூரி படிப்பு முடித்தவுடன் கம்ப்யூட்டரில் VB, Java, C, C++ என்று படித்து இப்பொது முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்கிறான். மேன்சன் வாசியா இருந்தாலும் அவன் தங்கி இருக்கும் அறை ரொம்ப சுத்தமாக இருந்தது. ஹிந்து நாளிதழில் வந்த வேலை வாய்ப்பு பகுதியை எனக்காக எடுத்து வைத்து இருந்தான். அதில் எனக்கு எது செட் ஆகும் என்று தேடி 10 கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
அவன் மேன்சன் மேனேஜர்யிடம் ஏற்கனவே பேசி எனக்கான ஒரு ரூம் தேர்வு செய்து வைத்து இருந்தான். அவர் வந்ததும் என்னிடம் பெயர் , விலாசம் என்று எல்லா குறிப்புகளையும் வாங்கி கொண்டு குமார் ரூம்க்கு இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூம்மை எனக்காக ஒதுக்கி தந்தார்.

ரூம் பிரச்சனை திர்ந்தது.

அடுத்தது வேலை ..