~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ரயில் பயணங்கள் - 2

பயணங்கள் - 2






சென்ற கட்டுரையில் கோவைக்கு சென்றதை எழுதி இருந்தேன், இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி கோவையில் இருந்து சென்னைக்கு வந்தது.

கும்பலாக இருந்து கும்மி அடித்து கொண்டு இருந்தோம் கல்யாணத்தில் , அத்தை மகள் ஒருத்தியை பார்த்ததும் ரொம்ப ஆச்சரியப்பட்டு போனேன். அவளின் கலயாணத்துக்கு முன்பு தேவதை போல இருந்தாள். நல்ல வளத்தி, ஒல்லியாக ரொம்ப அழகாக இருப்பாள். அவளின் இரண்டு கன்னங்களில் விழும் அந்த குழியை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதற்காகவே அவளை சிரிக்க சொல்லுவேன் அது பள்ளி காலத்தில். அப்போது அவளின் மேல் எந்த ஒரு ஆசையும் இல்லை ஒரு சிறுவன் சிறுமி விளையாட்டு போல இருந்தது . அவள் கல்யாணம் முடிந்து போன பிறகு அவளை பார்க்கவே இல்லை கிட்டதட்ட 3 வருடங்கள் கழித்து இந்த கல்யாணத்தில் சந்தித்த போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. உடம்பில் சதை போட்டு இருந்தாள் பார்ப்பதற்கு 30 வயது போல இருந்தாள். என்னால் நம்பவே முடியவில்லை இவளா என்று. நான் இருப்பதை எங்கிருந்தோ பார்த்தவள் ரொம்ப சந்தோசமாக வந்து என்னருகில் வந்து அமர்ந்தாள் குழந்தையுடன். வெகு நாட்களுக்கு பிறகு பார்த்ததினால் வார்த்தைகள் ஆதிகமாக வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரமித்தோம். பேச்சு நீண்டு கொண்டு இருந்தது எங்களின் தற்போது வாழ்கை எப்படி செல்கிறது என்கிற கேள்வி எழும் போது அவள் உச் கொட்டினாள் சென்னை போன்ற பரபரப்பு நகரத்தில் வளர்ந்தவள் குமாரபாளையத்தில் கல்யாணம் கட்டி கொண்டு சென்றதால் வந்த விரக்தி. . இந்த தருணத்தில் எதாவது பேசி சங்கட பட வைக்க வேண்டம் என்று வேறு பேச்சு பேச ஆரமித்தோம். கடைசியாக விடைபெறும் நேரத்தில் அவளை சிரிக்க சொன்னேன் எதற்கு என்றவளின் கன்னங்களை பார்த்தேன் அந்த குழி மட்டும் மாறவில்லை.


அன்று மதியமே கோவை எக்ஸ்பிரஸ்ல் அப்பா, அம்மா உடன் கிளம்ப வேண்டிய கட்டாயம். முன்பே முன்பதிவு செய்ததினால் இந்த தடவை டிக்கெட் பரிசோதகரை எதிர் பார்க்காமல் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சொந்த பந்தங்கள் உடன் நிறைந்து இருந்த கல்யாண மண்டபத்தில் இருந்த சந்தோஷம் இப்பொது காணாமல் போனதை உணர்ந்தேன். இந்த மாதிரி மதியம் செல்லும் ரயில் பயணத்தில் ஒரு சவுகரியம் ரயில்க்குள்ளே விற்றுக்கொண்டு வரும் திண்பண்டங்கள் தான். கட்லெட், சமோசா , வடை, நிமிடத்துக்கு ஒரு முறை வரும் டீ, காபி , கூல் ட்ரிங்க்ஸ், மாலை வேளையில் வரும் தக்காளி சூப் , மசால் தோசை, பிரட் அம்லேட் தின்னுவதற்கே 200 ருபாய் அழவேண்டும். ரயிலில் வரும் மற்ற விற்பனையாளர்கள் புத்தகங்கள் , குழந்தைகளுக்கு ஆனா விளையாட்டு பொருட்கள், முறுக்கு, கண் தெரியாதவர்கள் விற்றுக்கொண்டு இருந்த டோர கலரிங் புக் இவைகளுடன் புது படங்களை கூட ஒருவர் விற்றுக்கொண்டு வந்தார்.



தூக்கம் கண்ணை முடியதால் திருப்பூர் தாண்டி சேலம் வரை நன்றாக தூங்கி கொண்டு வந்தேன் உட்கார்ந்தபடியே. சேலத்தில் கூட்டம் கொஞ்சம் ஏறியது படிப்பதற்கு புத்தகம் ஏதும் இல்லாமல் ரொம்ப எரிச்சலாக இருந்தது. பகல் நேர பயணங்களில் புத்தம் இல்லாமல் நான் புறப்படமாட்டேன் அன்று அவசரம் காரணமாக ஏதும் எடுத்து கொண்டு வரவில்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது சிறிது நேரம் கதவு அருகில் நின்று கொண்டு வருவது என்று நேரத்தை கழித்து கொண்டு வந்தேன். வண்டி ஆம்பூர் தாண்டி சென்று கொண்டு இருந்தது. கழிவறை செல்ல எழுந்தேன் அதன் அருகில் சிலர் கீழே எதோ பார்த்து கொண்டு இருந்தார்கள் என்னவாக இருக்கும் என்கிற ஆவலில் நானும் பார்த்தேன் பார்வையற்றவர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் என்னவென்று விசாரித்தேன். கதவுக்கு நடுவில் இருக்கும் ஜன்னல் முடும் போது இவரின் விரல்கள் அடி பட்டு விட்டது என்றார். ரயில்களில் இரண்டு ஜன்னல்கள் இருக்கும் ஒன்று கண்ணாடியால் ஆனது , மற்றொன்று இரும்பால் ஆனது. இரும்பால் ஆனா ஜன்னல் தான் இவரின் விரல்களை பதம் பார்த்து இருந்தது.


கூடி இருந்த ஒருவர் கூட அவருக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. அந்த விரல்களை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு சுற்றி இருந்தார். ரத்த போக்கு அதிகமாக இருந்ததை அவர் பேன்ட் காமித்தது , ரத்தத்தை அவர் பேண்டில் துடைத்து இருந்தார் போல. பார்த்ததும் என்னால் இவர்களை போல வேடிக்கை பார்க்க முடியவில்லை. கும்பலில் இருந்த ஒருவர் முதலுதவி பெட்டி எங்கு இருக்கும் என்று டீ விற்கும் ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார். இது எல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவர் எழுப்பி விரல்களில் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் கவர்யை நீக்கினேன். ரத்தம் உறைந்து போய் இருந்தது அவர் கை முழுக்க ரத்த கறைகள். சுற்றி இருந்தவர்களின் அலச்சியம் அப்போது தான் தெரிந்தது. அவரின் உடை ரொம்ப அழுக்காகி இருந்தது ஒருத்தரும் உதவிக்கு வராதது கண்டு என்னை அறியாமல் கோவப்படேன். ஒரு இளைஞர் கொஞ்சம் போல பஞ்சு கொண்டு வந்தார் அதை தண்ணிரில் நனைத்து உறைந்து போன ரத்த கறைகளை சுத்தம் பண்ணினேன். அந்த பஞ்சு போதுமானதாக இல்லை. எனது கைக்குட்டையை தண்ணிரில் நனைத்து முடிந்த வரை சுத்த படுத்தினேன். பிறகு அதை வைத்தே அவரின் கைகளை சுற்றி விட்டேன். காட்பாடி சென்றதும் ஸ்டேஷன் மாஸ்டர் ரூம்ல முதலுதவி பெட்டி இருக்கும் அவர்களிடம் மருந்து வைத்து கொள்ளுங்கள் என்றேன். "அது எல்லாம் வேண்டம் சார் அவங்க எங்களுக்கு எல்லாம் உதவ மாட்டாங்க" என்றார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தது அதை சொல்லும் போதே ஒரு வித விரக்தியை அவரின் பேச்சில் தெரிந்தது. சரி டாக்டர் போய் பாருங்க காயம் ஆழமாக இருக்கும் போல இருக்கு என்றேன். சரி என்றார் இதிலும் அதே விரக்தி.

எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன் மனம் அவரின் இந்த நிலைமையை நினைத்து கேள்விகளை அடுக்கிக்கொண்டு சென்றது. தனக்கு எங்கு காயம் பட்டு இருக்கிறது என்று கூட தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியாமல் , ரத்த கரைகளை எப்படி சுத்தபடுத்துவது தெரியாமல் அவரின் கண்களை பறித்த இறைவனை திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் திட்ட மனம் வரவில்லை அதற்கு பதில் நன்றியை தான் சொன்னேன் அவருக்கு என்னால் முடிந்த உதவி செய்ததுக்கு.

காட்பாடி ரயில் நிலைத்தில் அவர் இறங்கினர் , ஓடி சென்று வலியின் திவிரத்தை கேட்டேன். இப்ப வலி இல்ல சார் என்றார். பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு டாக்டரிடம் செல்லுமாறு சொன்னேன். வேண்டாம் சார் என்று எதோ ஒரு ஆயில்மேன்ட் பெயரை சொல்லி அதை பூசினால் சரியாகிடும் என்றார். காயம் ஆழமாக இருக்கிறது எதுக்கோ நீங்க டாக்டர் பாருங்க என்றேன், இப்போதும் அதே போல விரக்தியின் சிரிப்பு. பார்க்கலாம் சார் உங்க உதவிக்கு நன்றி என்றார்.

எனக்கு புரிந்தது அவரிடம் பணம் இல்லை என்று. எனது பாக்கெட்யில் கைவிட்டேன் 120 ருபாய் இருந்தது. 100 ருபாய் எடுத்து அவரிடம் குடுத்தேன், வேண்டாம் என்று ரொம்ப மறுத்தார் , நான் விடாமல் அவரின் சட்டை பாக்கெட்யில் திணித்தேன். முதலில் டாக்டர் பாருங்க என்றேன் ரயில் கிளம்பியது. அவரிடம் இன்னொரு முறை இதே ரயிலில் வரும் போது சந்திக்கலாம் என்று சொல்லி விடைப்பெற்றேன்.

இறைவனுக்கு இன்னொரு முறை நன்றி சொன்னேன் அவருக்கு திரும்ப உதவி செய்ய வைத்ததற்கு.

படித்து முடித்த புத்தகம் - நான் வித்யா


நான் வித்யா

ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த போது உங்களுக்கு என்ன தோன்றும்?? சுவாரசியமா இருக்கு என்று அடுத்த அத்தியாயம் படிக்க செல்வோம், ஆரம்பமே அதிரடி திருப்பம் வருதே என்று ஆச்சரியப்படுவோம் அல்லது ஒண்ணுமே புரியல என்று திரும்ப முதலில் இருந்து ஆரமிப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த உடன் மேலும் படிக்க வேண்டுமா என்று எனக்கு தோன்றியது. ஆரம்பமே நம்மை உலுக்கி எடுக்கும் பால் மாற்று அறுவை சிகிச்சை! (அதை சிகிச்சை என்று சொல்வது அபத்தம்) அந்த வலி வேதனைகளை வெறும் சொற்களால் படிக்கும் நமக்கே இவ்வளவு வேதனை தரும் போது அதை அவர் எப்படி தாங்கி கொண்டார் என்கிற கேள்வி நம்முன் கண்டிப்பாக எழும்.


ஓவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்தன்மை அதிகம் ஆவதால் அவர்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை. அப்படிப்பட்ட உணர்வுகளை வாய் வழியில் மட்டுமே கேட்டு தெரிந்து இருப்போம், அதுவே ஒரு புத்தக வடிவில் ரொம்ப ஆழ் சென்று ஒரு திருநங்கை அனுபவித்த வேதனைகள், கொடுமைகள், சந்தோசங்கள், அடிகளை கொஞ்சமும் தயங்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் சரவணன் என்கிற இந்நாள் வித்யா. அந்த பெண் தன்மை அதிகமாக இருகிறவர்களின் வேதனை சாதரண மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை அவர்கள் தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதும் இல்லை. அவர்களுக்கு கொஞ்சமாவது அதை பற்றி தெரிந்து கொள்ள செய்யும் ஒரு முயற்சி என்றே சொல்லலாம் இந்த "நான் வித்யா" புத்தகம்.


முன்று வருடங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் கௌதம் மேனன்னை சாரமாறியாக திட்டி இவர் அளித்த பேட்டியின் முலமாக இவரின் வலை பூவை வாசிக்க நேர்ந்தது . இவரின் வலை பூவிலும் கௌதம் பற்றி இவ்வளவு தைரியமாக கடும் சொற்கள் உபயோகித்து உள்ளதை படிக்கும் போது இவர் மற்ற திருநங்கை போல் இல்லை வேறு மாதிரியானவர் என்று என்னை ரொம்ப ஆச்சரிய பட வைத்தார்.


முன்றாம் பாலினம் எப்படி உருவாகுகிறது என்று அறிவியல் ரீதியாக புட்டு புட்டு வைக்கலாம். ஆனால் அவர்களின் மன வேதனையை எந்த ஒரு அறிவியலாலும் சொல்ல முடியாது. ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இவர் பட்ட வேதனைகளை மிகவும் வலியுடன் எழுதி உள்ளார். வித்யாவின் ஆரம்ப கால வாழ்கை என்பது சராசரி மனிதர்களை போன்று அம்மா, சகோதிரிகளின் அன்பு , அப்பாவின் அடி உதை மிரட்டல் என்று இருந்தாலும் சிறு வயதிலே பெண்தன்மையை இவர் அடையாளம் கொண்டு அந்த வயதில் இருந்தே ஒரு பெண்ணாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு இப்பொது பெண்ணாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு ஆண் உருவில் இருக்கும் பெண்ணை எப்படி எல்லாம் கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று இவர் விலகி அதற்கு அவரின் எதிர் கருத்துகளை படிக்கும் போது ஏன் இவர்களை நாம் கிண்டல் செய்கிறோம் என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் கேள்வி எழத்தான் செய்கிறது.


பள்ளி படிப்பு , பிறகு கல்லூரி கணினியில் இளங்கலை பின்பு நாடகத்தின் மேல் இருந்த காதலால் முதுகலையில் மொழியியல், அதன் பிறகு நாடகம் , ஆண் உருவை அறுத்து ஏறிய வேண்டும் என்கிற வெறியால் புனே சென்று பிச்சை எடுக்கும் அவலம், நிர்வாணம், பின்பு திரும்ப திருச்சி , பிறகு மதுரை, இப்பொழுது சென்னை. இவ்வளவு இளவயதில் சுயசாரிதம் எழுவது என்பது யாருக்கும் பாக்கியம் கிடைக்காது. கிடைத்தாலும் அவர் இந்த அளவுக்கு தன்னை பற்றி உண்மையை சொல்லுவார என்கிற கேள்வியும் எழும் கண்டிப்பாக. கடைசியாக இவரின் புத்தகத்தில் எழுதி உள்ள இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.


"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன். எனக்காகவும் என்னைப் போன்ற பிற திருநங்கைகளுக்காகவும் . புரிந்துகொள்விர்களா?""

புரியாதவர்கள் இந்த புத்தகத்தை படியுங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்விர்கள்.

திருநங்கைகள் வாழ்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது , சேலத்தில் கூட திருநங்கைகள் மட்டுமே வேலை செய்யும் ஒரு உணவு விடுதியை திறந்து உள்ளார்கள்.


இந்த புத்தகத்தை படித்ததும் இவரின் பிடிவாதம் எவ்வளவு வலிமையானது , இதை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்து முடித்து விட வேண்டும் என்கிற வெறி அதற்காக எது வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்பதை முதுகலை படம் பெற்ற பிறகு கொஞ்சம் கூட கூச்சம் படாமல் பிச்சை எடுத்தது, இந்த வேலைக்கு தான் செல்வேன் என்று அதில் சாதித்தது என்று தான் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்த காரியம் முடியும் வரை இடையில் வந்த தடைகளை உதறி தள்ளி அசிகங்களை சகித்து கொண்டு வாழ்கையில் எதிர் நீச்சல் போட்டு கொண்டு இருக்கும் வித்யாவுக்கு என்னுடைய நேச கரங்கள் காத்து கொண்டு இருக்கிறது அவருடன் கை குலுக்க.



ரயில் பயணங்கள் - 1

சென்ற வாரம் தங்கையின் கல்யாணத்தில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் சென்று இருந்தேன். மாலையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலையில் இருந்ததால் காலையில் நடக்கும் முகுர்த்தத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள சென்றேன். முன்பதிவின் இடம் கிடைக்காததால் பொது பெட்டியில் அமர்ந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். ரயில் நிலையம் சென்ற போது நீலகிரி எக்ஸ்பிரஸ் பொது பெட்டி நிரம்பி இருந்தது. அதில் பாதிக்கு பாதி வட மாநில ஆண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். உட்கார்வதற்கு இடம் இல்லாததால் முன்பதிவு பெட்டியில் ஏதேனும் இடம் காலியாக இருக்குமா என்று நப்பாசையில் ஒவ்வொரு பெட்டிளையும் ஒட்டி இருக்கும் சார்ட்யை பார்த்து கொண்டு வந்தேன். எல்லாம் புக் ஆகி இருந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி பார்க்கலாம் என்று அவர் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன்.

அடிக்கும் வெப்பத்திலும் கோட் போட்டு கையில் பெட்டியுடன் வருபவரை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம் இவர் தான் டிக்கெட் பரிசோதகர் என்று. அவ்வாறே ஒருவர் வந்தார் யாரேனும் முந்தி கொள்வார்களோ என்கிற பயத்தில் அவர் பெட்டியில் ஏறும் முன்னரே " சார் ஓபன் டிக்கெட் தான் ஏதேனும் பர்த் கிடைக்குமா" என்று பொய்யான சிரிப்பு சிரித்து கேட்டேன். "S9ல உட்காருங்க வரேன்" என்றார், அவருக்கு என்று ஒதுக்க பட்டு இருக்கும் சைடு சீட்டில் எனக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் காலியாக இருந்த ஒரு இடத்தில உட்கார்ந்தேன். அவரை பார்த்தேன் அவரின் கையில் ராஜேஷ்குமார் க்ரைம் நாவல். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒருவர் ராஜேஷ்குமார் நாவல் படிப்பதை பார்க்கும் போது என்னை அறியாமல் சந்தோஷ சிரிப்பு வந்தது. அதை அவர் கவனித்து விட்டார் போல ஏன் சார் சிரிகிரிங்க என்று கேட்டு தனது கைகுட்டையால் முகத்தில் துடைத்து கொண்டார். எனக்கு கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது " ஒன்னும் இல்ல சார் ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் நாவலை ஒருத்தர் படிக்கிறத பார்க்கும் போதும் நான் ராஜேஷ்குமார் நாவல் படித்த நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சேன்" என்ற உண்மையை சொன்னேன்.


ரசனை ஒற்றுமையோ என்னவோ இரண்டு பேரும் அரகோணம் வரும் வரை எங்களை பற்றி அறிமுகம், சொந்தபந்தம், வேலை, சேமிப்பு, படிப்பு, பொழுதுபோக்கு என்று இடைவேளை இல்லாமல் நீண்டு கொண்டு இருந்தது எங்கள் பேச்சு. அவரின் வயது 35 அல்லது 40 இருக்கும், ரொம்ப மரியாதையை குடுத்து பேசினார், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து இருந்ததால் அவரின் பேச்சில் மரியாதையை அவர் அறியாமல் வந்தது. டிக்கெட் பரிசோதகர் எனக்கு அடுத்த பெட்டியில் இடம் ஒதுக்கி தந்தார் இந்த முறை உண்மையான சிரிப்பு சிரித்து அவருக்கு நன்றி சொன்னேன். விடைபெறும் நேரம் என்பதால் அவரிடன் கை குலுக்கி சென்றேன். எனது சீட் நம்பர் தெரிந்து கொண்டவர் நிம்மதியாக துங்குங்க என்று சொல்லிவிடு அவர் தூங்காமல் பயணத்தை மேற்கொண்டார். அறிமுகம் இல்லாத ஒருவரிடம் அந்த ஒரு மணிநேரம் பேசியது நெருங்கிய நண்பன் இடம் பேசியதை போன்று இருந்தது.


எனக்கு குடுத்தது லோயர் பர்த் அங்கு சென்று பார்த்த போது வேறு ஒருவர் படுத்து கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் , இது என்னுடைய இடம் சார் என்றேன் மனிதர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் போல எழுந்ததும் என்னை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தார். " அது எல்லாம் முடியாது வேற எங்கயோ போய் படு" என்று அவர் பேசி கொண்டு இருந்தார். எனக்கு ஒன்றும் புரியல " சார் இது எனக்கு ஒதுக்கிய இடம் நீங்க படுத்து இருக்கிங்க தப்பு உங்க மேல தான் இருக்கு முதல்ல எழுந்துரிச்சு உங்க பர்த்ல போயப்படுங்க" என்று நானும் எரிச்சலுடன் பேசினேன். எனக்கு எந்த சங்கடமும் இல்லை படுப்பதற்கு. அதை அவர் கனிவாக சொல்லி இருந்தால் கண்டிப்பாக சரி என்று சொல்லி இருப்பேன் ஆனால் ஏதோ அவரின் இடத்தை நான் கேட்டது போல என்மீது கோவபட்டது என்னையும் கோவமடைய செய்தது . அவருக்கு எதிரில் படுத்து இருந்த ஒரு பெண்மணி என்னிடம் மேல் பர்த்ல படுத்கொங்க சார் இவரால மேல ஏற முடியாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக தெரிந்தார், " வேண்டுகோள சொன்ன கேக்குறேன் இவர் என்னமோ அதிகாரம் பண்றாரே?? . "மன்னிச்சிகோபா கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்ல இவருக்கு" என்று சொன்னார்.

ஓ நாம கூட கொஞ்சம் அவரசப்பட்டோம் என்று அவரிடம் வருத்தம் தெரிவித்து மேல் ஏறி படுக்க சென்றேன்.


என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்களை திறந்தால் அந்த போலீஸ்காரர் "வடகோயம்புத்தூர் ஸ்டேஷன் வந்துடுச்சு சார் எழுந்துருங்க" என்றார். மணி பார்த்தேன் காலை 4. நன்றி கூறி கீழே இறங்கினேன் சிலர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள். போலீஸ்காரர் வந்து எழுப்பியதை பார்த்தது நாளவோ இல்லை வேறு மாதிரி நினைத்தார்களோ என்னவோ ??


இறங்கிய பின் பார்த்தேன் அந்த பெரியவர் தலைக்கு அந்த பெண்மணி குல்லா மாட்டி விட்டு கொண்டு இருந்தார் பாசத்தின் பிணைப்பு ..

திரும்பி பார்க்கிறேன் - 26/10/2009

இரவை கண்டு பயபடாதவர்கள் பத்தில் இரண்டு பேர் தான் இருபார்கள். எனக்கு தனியாக இரவில் தூங்குவது என்பது கொஞ்சம் அல்ல நிறையவே கிலி. எல்லா விளக்குகளையும் எரிய விட்டே தூங்குவேன். எனது சிறிய வயதில் நாங்கள் குடியிருந்த இடத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நான் படித்த டியூஷன் சென்டர். நடந்தே சென்று வந்து விடுவேன். வழி எங்கும் தெரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தாலும் ஒரு குறிப்பிட இடத்தில மட்டும் கும் இருட்டு மையம் கொண்டு இருக்கும் அது ஒரு 50 அடி தூரமே இருந்தாலும் எனக்கு அந்த இடம் தாண்டி தனியாக செல்ல ரொம்ப பயம். அந்த இருட்டு துடங்கும் இடத்தில நின்று கொண்டு இருப்பேன், ஏதேனும் வண்டி வந்தால் அந்த வண்டியை வேகமாக பின்னாடியே ஓடுவேன் அந்த இடம் கடக்கும் வரை. போன வாரம் அந்த வழியாக நான் பைக்கில் சென்றேன் அதே இடம் ஆனால் அங்கு வேறொரு பையன் நின்று கொண்டு இருந்தான் அவனை நான் கடந்து செல்லும் போது எனக்கு பின்னாடி ஓடி வந்தான். எனக்குள் நானே சொல்லி கொண்டேன் "என்னை போல் ஒருவன்".


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதற்கு வாங்கினேன் என்று தெரியாமல் வாங்கிய படங்கள் பலது ரொம்ப நன்றாக இருக்கும். விரும்பி வாங்கிய படங்கள் ரொம்ப சொத்தையாக இருக்கும். அதில் இந்த படத்தை எதற்காக வாங்கினேன் என்று தெரியாமலே வாங்கி வைத்து அது CD pouch ரொம்ப நாட்களாக இருந்தது. போர் அடித்ததால் இதை பார்க்கலாம் என்று படத்தை பார்த்தேன். படத்தின் பெயர் Roman Holidays - 1953 ஆம் ஆண்டு வெளிவந்தது ,


Wow .. Super ...
படத்தின் சுருக்கம் : இளவரசி ஆனி தனக்கு இருக்கும் வேலை பளுவை தாங்கிக்க முடியாமல் ஒரு நாள் அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி விடுகிறார். வந்தவர் ஒரு நாள் முழுவதும் அரண்மனைக்கு செல்லாமல் ரோம் நகரை ஹீரோவுடன் சந்தோசமாக வளம் வருகிறார். பின்பு ஹீரோவிடம் காதல கொண்டு வெகு சிரமத்துடன் அவரை பிரிந்து தனது அரண்மனைக்கு செல்கிறார்.


படத்தில் எனக்கு பிடித்து முன்று விஷயங்கள்
1. ஒளிப்பதிவு . 1953 எடுத்த படம் கருப்பு வெள்ளையில் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து இருப்பது அருமை. கண்டிபாக ஜக்கி சேகர்க்கு இந்த படத்தை பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன்.

2. படத்தில் உள்ள நகைச்சுவை. ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லாவற்றிலும் நகைச்சுவையை அழகாக கையாண்டு இருகிறார்கள்.

3. படத்தில் கிளைமாக்ஸ் , தமிழ் அல்லது இந்திய சினிமா போன்று இல்லாத ரொம்ப எதார்த்தமான கிளைமாக்ஸ். நாம் எதிர் பார்ப்பை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அழகாக முடித்து உள்ளார்கள் .


அருமையான படம் . DVD கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கவும் .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் நண்பன் சந்தோஷ் உடன் தம் அடிக்க அடிகடி செல்வேன். போன வாரத்தில் நாங்கள் தம் அடித்து விட்டு லிப்டில் ஏறினோம் எங்கள் உடன் எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் உடன் வந்தார். நாங்கள் இறங்க வேண்டிய ப்ளோர் வந்ததும் சந்தோஷ்யிடம் இருந்த மொபைல் போன் பார்த்து அவர் இது Nokiaவா இல்ல blackberryயா என்று கேட்டார். நான் அவன் பதில் சொல்வதற்கு முன் " சார் இது கொரியன் செட் " என்று உண்மையை சொல்லி சிரித்து விட்டேன் . கேட்ட உடன் அவரும் சிரித்துவிட்டார் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. நண்பனை டம்மியாகியத்தில் . ஹா ஹா ஹா என்று ஹால் அதிர சிரித்து கொண்டு வந்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் சொல்லி கொஞ்ச நேரம் வாய் விட்டு சிரித்தேன். பாவம் சந்தோஷ் தான் கொஞ்சம் கடுபாகிடான். மேட்டர் நடந்தது மாலையில் அடுத்த நாள் ஆபீஸ்க்கு மதியம் வந்த போது காலை ஷிபிடில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஒரு தோழி " என்ன ராஜன் நேத்து சந்தோஷ் மானத்த வங்கிடிங்க போல" என்று கேட்டார். மேட்டர் அதுக்குள் இந்த ஷிபிட் ஆளுக்கு எல்லாம் தெரிஞ்சுடிச்சா என்று சிரித்து கொண்டே அந்த கதையை மறுபடியும் சொன்னேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரயில் பயணங்கள் என்கிற தலைப்பில் வாரம் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் அவ்வளவு கதைகள் , சம்பவங்களை உள்ளது என்னிடம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் ஒரு மொக்கை + விடுகதை.
" ஒரு தகர பெட்டிக்குள் 50 மோகினி பிசாசுகள் "

அது என்ன ?
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


"லேடீஸ் காலேஜ் பஸ் "


நான் இப்ப எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

தனி மனித சுதந்திரம், MP3 Player அல்லது ஊளையிடுவது


தனி மனித சுதந்திரம் என்றால் என்ன ? உனது செயல் மற்றவர்களை துன்புருத்தாத எந்த ஒரு செயலும் அது தனி மனித சுதந்திரம். ஆனால் ஒருவர் தனது இஷ்டம் போல ஒரு பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு தெரியாமல் செய்யும் செயல் தனி மனித சுதந்திரம் ஆகுமா?

FM ரேடியோ, MP3 பிளேயர் உள்ள மொபைல் போனில் இருக்கும் சௌகரியம் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். தொலைதூர பயன்களில் நம்மை சுட்டு எரிக்கும் வெயிலோ அல்லது இரவில் தூக்கம் வராமல் பயணத்தை மேற்கொள்ளும் போது நமக்கு மட்டுமே கேட்கும் படி நமக்கு பிடித்த பாடல்களை ஹியர் போனில் கேட்டவாறு பயணத்தை ரசித்து கொண்டே செல்லலாம். ஆனால் இந்த மாதிரியான வரமே நமக்கு இம்சை ஆனால் ??

மின்சார ரயிலில் தினமும் பயணம் செய்வதால் புத்தகம் இல்லாத சமயங்களில் அவ்வபோது ஹியர் போனில் பாடல்கள் கேட்டு செல்வேன். கையில் எதாவது புத்தகம் இருக்கும் எனில் அன்று எனது சிந்தனை எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கும்.

நேற்று இரவு பணி முடித்துக்கொண்டு கிண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார வண்டியில் ஏறினேன். கையில் சாரு எழுதிய "முடு பனி சாலை". இந்த புத்தகத்தை இதற்கு முன்னர் இரண்டு முறை படித்து இருந்தாலும் திரும்ப படிக்க துண்டியது. புத்தகத்தை இரண்டு பக்கங்கள் கூட படித்து இருக்க மாட்டேன் எனக்கு பின்னால் இருந்த ஒரு அன்பர் "அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று தனது மொபைல் போனில் லௌட் ஸ்பீக்கர்ல போட்டுவிட்டார்.அவர்கள் பார்ப்பதற்கு முரட்டு ஆசாமி போல இருந்தார்கள். சந்தோசமாக பாடலை ரசித்தார்கள் என்பதை அவர்களின் வாய் முணுமுணுபு காட்டியது.

அவர்களின் சந்தோசம் என்பது என்னை எரிச்சல் அடைய வைத்தது. பெட்டியில் இடம் காலியாக இருந்ததினால் வேறு ஒரு இடம் மாறி உட்கார்ந்தேன். விட்ட இடத்தில் இருந்து ஆரமித்தேன், 10 பக்கங்கள் கூட தாண்டி இருந்து இருக்க மாட்டேன் "கருத்த மச்சான் " காதில் வந்து விழுந்து மண்டை காய வைத்தது. இப்பொழுது எனக்கு எதிரில் இருந்த இன்னொரு அன்பர். இங்கயுமா என்கிற கேள்வியுடன் அவரை ஒரு பார்வை பார்த்தேன், என்னை ஏற்எடுத்து பார்த்தவர் அந்த பாட்டுக்கு தனது கால்களில் தாளத்தை போட்டார். அவருடைய தாளம் என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தியது.

அவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒலியை அதிகமாக வைத்து பாடல் கேட்டு கொண்டு இருந்தார். எனது சிந்தனை எல்லாம் இப்பொழுது அந்த பாடலில் வரும் "ட்ட்யே ட்ட்யே" என்கிற BGM மேல் இருந்தது. இவரும் அந்த கோஷ்டி ஆள் போலவே இருந்தார். இரவில் செல்லும் அனைத்து ரயில் வண்டிகளிலும் பெண்கள் பெட்டியில் ஒரு போலீஸ்காரர் இருப்பார் இது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இதை பேசாமல் பொது பெட்டியிலும் அமல்படுத்தினால் தேவலாம் இந்த மாதிரியான இம்சைகளிடம் இருந்து நம்மை காப்பற்றி கொள்ள. கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு அவரிடம் படலை நிப்பாட்ட சொல்ல நினைத்தேன். அதற்கு வேலையில்லை என்பது போல அவருக்கு யாரோ போனில் கூப்பிட்டர்கள்.
அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது எனக்கு அவரின் வாயால் "ஹல்லோலோ" என்று அவர் போட்ட சத்தம் அந்த பெட்டியில் இருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு அவரின் பேச்சை அந்த பெட்டியே கேட்கும் படி ஊளையிட்டார் . படிக்கும் சுவாரசியமே எனக்கு போய்விட்டது , புத்தகத்தை மூடி வைத்து கதுவு அருகில் வந்து நின்று கொண்டேன். ரயில் செல்லும் வேகத்துக்கு காற்று பலமாக எனது முகத்தில் மோதியது இருந்தாலும் அந்த காற்றில் இருந்த ஈர பசையை ரசித்தேன்.


திரும்பி பார்த்தேன் ஊளை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ...

அட பார் ரா... லுக் - 6


அட பார் ரா ஹா ஹா ஹா என்று கிளாஸ் ரூம் அதிர சிரித்து மச்சி அப்ப எஸ்கேப்ன்னு சொல்லு, இனி எவனும் நம்ம கிட்ட வேலை காட்ட மாட்டாங்க என்று சந்தோஷத்தில் இருந்தான் கணேஷ்

அப்படி சொல்ல முடியாது மச்சி யாருன்னு தெரியாத வரைக்கும் நாம எஸ்கேப் தெரிந்தன்னு வை அப்பயும் நாம எஸ்கேப் தான் காலேஜ் விட்டு. சரி விடு அடி வாங்கினவனே போலீஸ் கிட்ட ஏதும் சொல்ல வேண்டம்ன்னு சொல்லிட்டான் அப்பறம் என்ன.
சரி அந்த பையன் ஏன்டா உங்கிட்ட அடிவாங்கினது யாருகிட்டையும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்னு தான் தெரியலையே.
எங்க ஊரு பசங்க சில பேரு அவனுக்கு தெரியுமா டா அதனால்தான் யார்கிட்டையும் சொல்லிடாதன்னு சொன்னான்.
எங்களின் பேச்சு கொஞ்ச நேரம் நிடித்து அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்ததும் நின்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு எங்க சீனியர் பசங்க கொஞ்சம் அடக்கியே வசித்தார்கள் . அவர்களை குறிவைத்து தாக்க நினைத்து வேறு ஒருவன் மாட்டி கொண்டது அவர்களிடம் கொஞ்சம் பயம் கொள்ள வைத்தது. அதன் பிறகு எங்களை ராக்கிங் என்கிற பெயரால் யாரும் தொந்தரவு செய்ய வில்லை.
முதலாம் ஆண்டு முடியும் வரை நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எங்களுக்கு பிறகு வந்த ஜூனியர் மாணவர்களிடம் நாங்கள் நட்புடனே பழகினோம். அதே சமயம் சீனியர் என்கிற கேத்து கொஞ்சம் கூட குறையாமல் வளம் வந்தோம்.
பிரிவு உபசார விழாவின் கண்களை கசக்கி கொண்டே விடை பெற்றோம். சரக்கு என்றால் அரை கிலோமீட்டர் ஓடும் அப்புராணி பசங்க கூட ஒரு பெக் அடித்து எங்கள் உடன் ஒரு இரவு வாந்தியுடன் அடுத்த நாள் காலை பிரிந்தது எங்கள் நினைவின் இருந்து நீங்கா இடம் பெற்றது.
இன்று எங்கள் உடன் படித்த நண்பர்கள் வட்டம் ரொம்ப சுருங்கி போய்விட்டது. குமார் மற்றும் கணேஷ் மட்டுமே எப்போதும் தொடர்பு எல்லைக்கு உள்ளே இருகிறார்கள். மற்றவர்கள் அவுட் ஆப் ரீச் தான்.
வேலை நிமித்தமாக நான் சென்னை வந்தது குமார் இருக்கும் தைரியம் தான். அவன் என்னை போல் இல்லாமல் கல்லூரி படிப்பு முடித்தவுடன் கம்ப்யூட்டரில் VB, Java, C, C++ என்று படித்து இப்பொது முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்கிறான். மேன்சன் வாசியா இருந்தாலும் அவன் தங்கி இருக்கும் அறை ரொம்ப சுத்தமாக இருந்தது. ஹிந்து நாளிதழில் வந்த வேலை வாய்ப்பு பகுதியை எனக்காக எடுத்து வைத்து இருந்தான். அதில் எனக்கு எது செட் ஆகும் என்று தேடி 10 கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
அவன் மேன்சன் மேனேஜர்யிடம் ஏற்கனவே பேசி எனக்கான ஒரு ரூம் தேர்வு செய்து வைத்து இருந்தான். அவர் வந்ததும் என்னிடம் பெயர் , விலாசம் என்று எல்லா குறிப்புகளையும் வாங்கி கொண்டு குமார் ரூம்க்கு இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூம்மை எனக்காக ஒதுக்கி தந்தார்.

ரூம் பிரச்சனை திர்ந்தது.

அடுத்தது வேலை ..

திரும்பி பார்கிறேன் - 19/10/09

தீபாவளிக்கு எப்படிடா ஊருக்கு போறதுன்னு தெரியமா இருந்தது பஸ்ல ட்ரைன்ல எதுலையும் டிக்கெட் இல்லையே அந்த கவலைதான், வியாழன் காலை நேர பணியில் இருந்தேன் மதியம் அப்படியே கோயம்பேடு சென்று திருச்சி செல்லும் எதாவது ஒரு பேருந்தில் சென்று விடலாம் என்று. மேனேஜர்யிடம் இரண்டு மணிநேரத்துக்கு முன்னதே கிளம்புவதற்கு அனுமதி வாங்கி கோயம்பேடு வந்து அடைந்தேன். எவ்வளவு கூட்டம் இருக்குமோ என்கிற பயத்துடன் திருச்சி செல்லும் பேருத்தை அருகில் சென்றேன்.


எதிர் பார்த்தற்கு நேர் எதிராக இருந்தது பேருந்து நிலையம். சார் மதுரையா?? , சார் நாகர்கோவில்லா?? , சார் திருச்சியா ?? வாங்க வாங்க சீட் இருக்கு வாங்க என்று இழுக்காத குறையாக அழைகிறார்கள். ஓவர்ரா கற்பனை பண்ணிட்டோமோ என்கிற நினைப்புதான் இருந்தது. ஒரு பேருந்து கிளம்ப தயாராக இருந்தது அதில் ஜன்னல் ஓர சீட் அமர்ந்து கொண்டேன். மதியம் 1 மணிக்கும் கிளம்பின வண்டி 3.30 மணிக்கும் ஒரு ஹோட்டலில் நின்றது (கையேந்தி பவனே நன்றாக இருக்கும் அந்த ஹோட்டல்லை ஒப்பிட்டு பார்க்கும் போது) சாப்பிடுவதற்கு மனசே வரவில்லை ஒரு காபி மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கி சாப்பிட்டேன். திருச்சி வருவதற்கு இரவு 8.30 மணி இத்தனைக்கும் நான் ஏறியது எக்ஸ்பிரஸ் பஸ்சில். பிரைவேட் பஸ்காரங்கதான் டிக்கெட் விலையை அதிகமா வைத்து விற்கிறார்கள் என்றால் அரசு பேருந்தில் இந்த மாதுரி எக்ஸ்பிரஸ் என்று சொல்லி டப்பா பஸ்சை காட்டி கல்லா கட்டி விடுகிறார்கள். அங்கு இருந்து கருர் செல்லும் பேருந்தில் ஏறி இரவு 10.30க்கு வீட்டுக்கு சென்று அடைந்தேன்.

ஒரு மாதமாக மனைவியை பார்க்காமல் இருந்த ஏக்கம் அவளை பார்த்தும் திறந்தது. அந்த ஒரு மாதமாக போனில் கொஞ்சல் , சண்டை என்று மாறி மாறி பரிவர்த்தனைகள் நடந்தாலும் அவை எல்லாம் அவளை பார்த்தும் மறந்தது. ஒரு மாதம் இருந்த ஏக்கம் எல்லாம் அந்த ஒரு நாள் இரவில் சந்தோசமாக கழிந்தது. அடித்து போட்டது போன்ற தூக்கம் கண்ணை திறந்தால் மணி காலை 11 .

தீபாவளிக்கு என்னவளுக்கு பரிசு ஒன்றும் தர முடியவில்லை. இந்த மாதம் கொஞ்சம் அல்ல நிறையவே பண முடக்கம். தீபாவளி பரிசாக அவளுக்கு நான் வாங்கி தந்தது ஒரு பொட்டு பாக்கெட் மட்டுமே.

பட்டாசு வெடிப்பதில் இருந்த ஆர்வம் எல்லாம் எப்போதோ மலை ஏறி விடத்தினால் அதன் சத்தம் கூட கேட்க பிடிக்கவில்லை. புது துணி உடுத்தி கொண்டு கோவிலுக்கு சென்று வந்தோம் மாலை நேரம் பக்கத்துக்கு வீட்டில் ராக்கெட் , பூந்தொட்டி, சங்கு சகரம் , அணுகுண்டுடை பற்ற வைக்க பயந்து கொண்டு இருந்த சின்ன பையன் என்று அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்ந்தேன்.


நேற்று சாயங்காலம் 6 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டேன் திருச்சி வழியாக,

இரவு 9 மணி அளவில் திருச்சியில் இருந்தது கிளம்பி பேருந்து காலை 4 மணி அளவில் சென்னை வந்து அடைந்தது .

என்னவளுக்கு சென்னை வந்து விட்ட செய்தியை குறுந்செய்தி அனுப்பினேன். அவளிடம் இருந்தது அப்பவே திரும்ப கிடைத்தது பதில்.

"அடுத்து எப்ப வருவிங்க " நிறை மாத கர்ப்பிணியான என்னவளின் கேள்வி.
"சிகிரமே" என்று பதில் அனுப்பினேன்.

அடுத்தது சின்ன பிரிவு மட்டுமே இருக்கும் என்கிற நம்பிக்கையில் வீடு வந்து அடைந்தேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு வலி ஆகி போனா தீபாவளி.

இது நடந்து 15 வருடங்கள் ஆகி இருக்கும் இப்பொது நினைத்தாலும் இன்று நடந்தது போன்று இருக்கிறது.

நாங்கள் குடி இருந்த இடத்தில் என் வயது ஒத்த பசங்க நிறைய பேர் இருபார்கள். மூலைக்கு ஒரு குரூப் என்று இரு பக்கம் ஆட்கள் எதிர் எதிர் துர்வம் போல நின்று கொண்டு இருப்போம். எதுவென்றாலும் ஏட்டிக்கு போட்டி தான் நடக்கும். விளையாட்டு , பிகர் கரெக்ட் பண்றது, பஸ்ல சீட் புடிக்குறது என்று ரணகளம் ஆகத்தான் இருக்கும்.



தீபாவளி டைம்ல எங்க சைடு பசங்க பட்டாசு வெடிச்சிட்டு இருந்தோம் அந்த சைடுல இருக்குற பையன் ஒருத்தன் ஜிகு ஜிகுன்னு டிரஸ் பண்ணிட்டு வந்தான். அத புடிக்காத ஒருத்தன் அவன் கிட்ட பேச்சு குடுக்குற மாதுரி அவன் சட்டை பாகெட்ல ஒரு மிளகா பட்டாச கொளுத்தி போட்டுட்டான். அதுபட்டுன்னு வெடிச்சு பாக்கெட் சிதறவும் அவன் நெஞ்சு பகுதி தீயால் கருகி . பய புள்ள ஐயோ அம்மான்னு கத்திகிட்டே ஓடினான்.



எங்களுக்கு ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் அவன் அந்த சைடு பசங்கள கூடிட்டு வந்தா எப்படி சமாளிக்கிறது?

கொஞ்ச நேரத்துல நாங்க நினைத்து போலதான் நடந்தது. அந்த சைடுல இருந்து 10 பசங்க கூட கிழிஞ்சி போனா சட்டைய போட்டுட்டு அந்த பையன் கண்ணுல கொலை வெறியோட வரான் . நாங்க இருந்ததோ 4 பேரு அவனுக அடிச்சா நாங்க தப்பிச்சி ஓட கூட முடியாது. என்ன பண்றதுன்னு தெரியல அப்ப தான் அந்த பட்டாச கொளுத்தி போட்ட அந்த கபோதி குடு குடுன்னு அவன் வீட்டு குள்ள ஓடி போய் ராக்கெட் பாக்ஸ் ஒண்ண துக்கிட்டு வந்தான் அது பாம் ராக்கெட். நல்லா பெரிய ராக்கெட் அது அவங்க ஒரு 100 அடி முன்னால இருக்கும் போது அவங்க யோசிக்க கூட டைம் குடுக்காம ராக்கெட் படுக்க வச்சி அவங்க மேல பாயுற மாதுரி கொளுத்தி விட்டன்.


அது நேரா கிழிஞ்ச சட்ட பையன் மேல பட்டு வெடிக்கவும் சட்டை ரைட் சைடு கிழியவும் மத்த பசங்க எல்லாம் தேறிச்சி ஒடுனானுக. கொஞ்ச தூரம் லக்ஷ்மி வெடி பத்த வச்சி தூகி தூகி அவனுக மேல போட்டு ஓட ஓட விரட்டினோம்.


அதை நினைத்து சிரி சிரின்னு ஒரு வாரத்துக்கு மேல சிரித்தோம்.
அது எல்லாம் ஒரு காலம். அன்று இருந்த நண்பர்கள் வட்டம் எல்லாம் இப்பொது எங்கு இருகிறார்கள் என்றே தெரியவில்லை. வீட்டில் பட்டாசு வாங்கி 5 தீபாவளி ஆகிவிட்டது பலகாரம் என்பதே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான் என்று ஆகிவிட்டது மனைவியிடம் உனக்கு என்ன ஸ்வீட் பண்ண தெரியும் என்று கேட்டேன். திரு திரு என்று முழித்தாள் அப்பவே தெரிந்துவிட்டது என்னவளின் அருமையை.
அம்மாவிற்கு பிறகு அதிரசம் , முறுக்கு போன்ற பலகார வகைகளின் வாசனை எல்லாம் மறந்துவிடுமோ என்கிற பயம் வருவதை மறுக்க முடியவில்லை .

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..


தலை தீபாவளிக்கு ஊருக்கு போறேன் ஹி ஹி ஹி

திரும்பி பார்கிறேன் - 12/10/09

வேட்டைக்காரன் பாட்டு ரிலீஸ் ஆனாலும் ஆனது எங்க ஏரியால பசங்க ஸ்பீக்கர்ல போட்டு கலக்கிட்டு இருக்காங்க. சீனா மற்றும் கொரியா மொபைல் யூஸ் பண்ணுறவங்க புலி வருது பாட்ட ரிங்க்டோனே வச்சிக்கிட்டு செம ரகள பண்ணுறாங்க.


பக்கத்துக்கு ஏரியா கோவில்ல எதோ விசேஷம் நண்பன் வீடும் அங்கதான் இருக்கு. அவன பார்க்கலாம்ன்னு போனேன் பத்து ஸ்பீக்கர்ல புலி வருது பாட்டு பிச்சிக்கிட்டு பாடுது. அவன் இருக்குற தெருல ஒருத்தர் வீடும் திறந்து இல்ல எல்லா கதவு , ஜன்னல் எல்லாம் முடி இருக்கு அங்க இருந்தா பேச முடியாதுன்னு அவனும் நானும் கொஞ்சம் தூரம் இருக்குற ஒரு டீ கடைக்கு போனோம்.
"ஏன்டா மச்சி இந்த மாதுரி சவுண்ட் அதிகமா வச்சி பாட்ட போடுறாங்களே ஏன் இப்படி பண்ணுரிங்கன்னு அவங்கள கேட்க மாட்டிய?? பாரு உன் வீட்டுக்கு முன்னாடிதானே ஸ்பீக்கர் கட்டி இருக்காங்க!! சரியான காட்டு மிராண்டி பசங்கள இருப்பானுக போல" என்று கண்ட மேனிக்கு அவங்களை திட்டினேன். அதுக்கு அவன் சொன்னான், இந்த ஸ்பீக்கர் செலவ இவங்க ஏரியா விஜய் ரசிகர் மன்றம் ஏத்து இருக்கு அதும் இல்லாம இவன மாதுரி பசங்க 10 பேருக்கு வேட்டைக்காரன் படம் முதல் ஷோக்கு ப்ரீயா டிக்கெட் தராங்களாம் அதனால இவனுக ஏதும் கண்டுகிறது இல்ல". பேசி முடிச்சி அவன வீட்டுல டிராப் பண்ணலாம் என்று வீட்டு அருகில் சென்றோம்.


ஒலி பெருகியில் ஒருவர் கோவில் திருவிழாக்கு ஸ்பன்செர் பண்ணவங்க பெயர் சொல்லிடு இருந்தாரு. " மைக் , ஸ்பீக்கர் மற்றும் மின்சார உபகரணம் ஸ்பன்செர் செய்த நமது விஜய் ரசிகர் மன்ற தலைவர் நண்பர் சரவணனை மனமார வாழ்த்துகிறோம்"

எனது நண்பன் பெயர் சரவணன்.

என்னை பார்காமலே வீட்டுக்குள் சென்றான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேத்து The Taking of Pelham 1 2 3 இந்த படத்த பார்த்தேன் . Denzel Washington மற்றும் John Travolta நடிச்சது . படம் ஆரமிச்ச 5 ஆவது நிமிடத்தில் இருந்து திரைகதை செம வேகத்தில் செல்கிறது.
கதையின் சுருக்கம் : John மற்றும் அவரின் சகாக்கள் முன்று பேரு சேர்ந்து லோக்கல் ட்ரைன் கடத்துகிறார்கள். கடத்திய பிறகு John லோக்கல் ட்ரைன் கண்ட்ரோல் சென்டர்க்கு தொடர்பு கொள்கிறான். அந்த தொடர்பை ரயில்வே கட்டுபாடு அறையில் இருக்கும் சாதாரண ஊழியர் Denzel யிடம் ரயில் கடத்த பட்டு இருப்பதையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் 10 மில்லியன் டாலர் பணம் வேண்டும் அப்படி வர வில்லை என்றால் அங்கு பிணைகைதி யாக இருக்கும் 19 நபர்களில் 61வது நிமிடத்தில் இருந்து கொலை செய்யப்படும் என்று மிரட்டுகிறான். இதற்கு பிறகு நடக்கும் பர பர கதை சூப்பர்.

Denzel Washington நடிப்பு அருமை ரயில் கடத்தப்பட்டு இருப்பதில் இருந்து இவரின் முக மாற்றங்கள் மாறும் ஒவ்வொரு சீன்லையும் கலக்கி உள்ளார்.
John Psycho வில்லன் என்றே சொல்லலாம். ஹிஸ்டிரிய நோயாளி போல சில சமயம் காட்டு கத்தல் கத்துவதும். பின்பு அருமையாக சிரிப்பதும் என்று கலக்கி உள்ளார்.

Dont miss the chance to watch this Movie.

இந்த படம் ஆரமிக்கும் போது தட்டில் சாப்பாடு போட்டு உட்கார்ந்தேன் படம் முடியும் வரை பாதி கூட சாப்பிடவில்லை. ஒரு சீன் கூட மிஸ் பண்ண முடியாமல் பார்த்து கொண்டு இருந்தேன். அம்மாவிடம் சரியான டோஸ் வாங்கினேன். பின்ன சாப்பாடு போட்டு ஒரு மணி நேரம் ஆகியும் பாதி சாப்பாடு கூட சாப்பிட வில்லை என்றால்??
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் நமக்கு தலை தீபாவளி. மாமனார் மாமியார் தீபாவளிக்கு வந்து அழச்சிட்டு போய்டாங்க ஆனா எப்படி போறதுன்னு தான் தெரியல. எப்பயும் ரயில தான் போவேன் டிக்கெட் சுத்தம்மா இப்ப இல்ல ஸ்பெஷல் ட்ரைன் டிக்கெட் எல்லாம் வைடிங் லிஸ்ட் 300க்கு மேல இருக்கு. நாளைக்கு தக்கல் டிக்கெட் ஒபெனிங் இதுக்காக காலைல 5 மணிக்கும் எல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போகலாம்ன்னு இருக்கேன். பதிவர்கள் யாராவது தக்கல் டிக்கெட் எடுக்குறவங்க இருந்திங்கன சென்னை சென்ட்ரல் அல்லது சென்னை பீச் ஸ்டேஷன் வரதா இருந்த சொல்லுங்க சேர்ந்தே போகலாம். ஆன்லைன்ல புக் பண்ணல்லாம் என்று ஐடியா குடுகத்திங்க IRCTC சர்வர் எல்லாம் 8 to 9am சுத்தமா அவுட் ஆகிடும். அனுபவம் தான் வேற என்ன ....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவர் சுந்தர்ரை பதிவர் ரோசா தாக்கி சம்பவம் நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு. அவர் நலமுடம் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக்

போன நூற்றாண்டு மில்லியன் டாலர் வேள்வி ஆனால் இது வரைக்கும் யாராலயும் பதில் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே..




""கார் வச்சி இருந்த சோப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சி இருக்காங்க"" ??