~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அட பார் ரா... லுக் - 3

அட பார் ரா ..

இந்த மண்டை கூட ஏதோ யோசிக்குது என்று கணேஷ் குமாரை பார்த்து கிண்டல் அடித்தான்.
அவன் சொன்ன பிளானை கேட்ட பிறகு கூட கணேஷ் எப்படி இவள்ளவு ஜாலியா கிண்டல் பண்ணுறான் என்றுதான் புரியவில்லை.
மச்சி உண்மைய சொல்லு உனக்கு பயமா இல்லையாடா ?? என்று கணேஷ் பார்த்து கேட்டேன்.

" இப்ப எனக்கு இருக்குது எல்லாம் வெறிதான் டா . என்னைய எப்படி அரஞ்சன்னு எனக்குதான் தெரியும்" என்று அவன் கன்னத்தை தடவி சொல்லும் போதே அவன் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.

ஓகே கோதாவுல இறங்கிடலாம் ,, ஏன் டா மச்சி அடி வாங்குனது 5 பேருக்கு மேல இருக்கும் அவனுகள விட்டுட்டு என்னையும் கணேஷ்யும் மட்டும் ஏன்டா தனியா வர சொன்ன?

மச்சி மத்த பசங்க முஞ்சிய நாம ஸ்டிரைக்ன்னு சொல்லும் போதே பார்த்தேன் பேய் அறஞ்ச மாதுரி முழிகுரங்க, இந்த மாதுரி நாம பண்ண போறோம்ன்னு சொன்னா அவ்வளவு தான் நாளா போல சீனியர் பசங்க கேட்டா அடிக்கு பயந்துட்டு நம்மள போட்டு குடுத்துடுவாங்க. சரி வாங்கடா நாம ரமேஷ் ரூம்க்கு போலாம் அவன் கூட இருந்தா நமக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் .

ரமேஷ் ரூம்ல முக்காடு போட்டுக்கிட்டு நல்ல துங்கிட்டு இருந்தான். அவன எழுப்பி மேட்டர் சொன்ன உடனே பயபுள்ள ஏதோ கறி சோறு சாப்பிட கிளம்பினவன் மாதுரி ஒரு போர்வைய தூக்கிட்டு கிளம்பிட்டன்..

இரவு 11 மணி ஆகிவிட்டது, ஊருல நடமாட்டமே இல்ல, சீனியர் பசங்க தங்கி இருக்கும் ரூம்க்கு எதிர்ல இருக்குற புதர் மண்டில ஒளிஞ்சி இருந்தோம். ரமேஷ் விட்டா அங்கயே தூங்கிடுவன் போல மண்டைய மண்டைய ஆடிட்டு இருந்தான். கணேஷ் கொலை வெறில உக்காந்துட்டு இருந்தான்... கொஞ்சம் கூட பயமே இல்லாத மாதுரி நான் நடித்து கொண்டு இருந்தேன்.

இருந்ததுக்கு கை மேல பலன் கிடைத்தது.. கணேஷ் காமிச்ச ஒரு பையன் மேலே இருந்து பாத்ரூம் போவதற்கு கீழே வந்து கொண்டு இருந்தான்.. எல்லோரும் சுதாரித்து கொண்டோம் ரமேஷ் போர்வையை எடுத்து நன்றாக அவன் முகம் தெரியாத படி முடிகொண்டு முதலில் சென்றான், எங்களது பிளான் படி அவன் பாத்ரூம்யில் இருந்து வெளியேறி மாடிக்கு செல்லும் போது அவனை தூக்கிட்டு செல்ல வேண்டும். அவனை வெறி தீர அடிக்க வேண்டும் ..

ரமேஷ் முதல் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்தான் நாங்கள் ஆளுக்கு ஒரு புறம் பிரிந்து ஒளிந்து கொண்டோம். அவன் கதவை திறக்கும் சதம் கேட்டது .. அவனின் காலடி சத்தம் மாடி படி ஏற சென்றது ... ரமேஷ் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவனை எதிர் கொள்ள துணித்து விட்டன் என்பது போல அவன் கையில் இருந்த போர்வையை பிடித்து இருந்தான்..

எங்களின் ஒவ்வொரு இதயமும் சாதரண நிலையில் இருந்து இருமடங்கு துடித்து கொண்டு இருந்தது... இன்னும் சிறு வினாடிகளில் அவன் ரமேஷ்யை நெருங்க போகிறான் என்று தெரிந்தது .. நாங்கள் கொஞ்சம் முன்னேறி சென்றோம் ... அவன் படிக்கட்டில் கால் எடுத்து வைத்த உடன் போர்வை கொண்டு அவனை அமுகினான் ரமேஷ் .. பின்னாளில் இருந்து நான் , குமார் மற்றும் கணேஷ் வேகமாக ஓடி சென்று அவனை அலேக்காக தூக்கினோம்.. கணேஷ் அவன் வாய்யை துண்டு கொண்டு அமுத்தினான்.. நான் அவனின் கால்களை பிடித்து தூக்கினேன், அவனின் கைகளை குமார் கெட்டியாக பிடித்து கொண்டான் அப்படியே அவனை புதர் மண்டிக்கு தூக்கி சென்றோம், கை , கால்கள் கட்ட பட்டு இருந்ததால் நகற முடியாமல் அங்கயே முனகி கொண்டு இருந்தான் .. கணேஷ் முதலில் அவனை நன்கு நன்கு என்று மேதிதான் .. பலம கொண்டு அவனின் கணங்களில் அறைந்தான்.. கணேஷ் அடி வாங்கினவன் என்பதனால் நாங்கள் அவனை ஏதும் பண்ணவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் அவனை கணேஷ் அடித்து இருந்தால் கண்டிபாக அவன் மூர்ச்சை ஆகி விடுவான் என்று தெரிந்தது .. ரமேஷ் மற்றும் நான் கணேஷ்யை போதும் என்று இழுத்து வந்தோம் ...

குமார் அவனை துக்கி கொண்டு படிக்கட்டு சென்றான் எங்களின் துணிகளால் கட்ட பட்டு இருந்த கை மற்றும் கால்களை விடுவித்து அங்கு துணி காய போட இருந்த நைலான் கயிர் கொண்டு கால்கள் மற்றும் கையை கட்டினான், கணேஷ் அவனின் லுங்கி உருவி முகத்தை கட்டினான் ....
எல்லோரும் அங்கு இருந்து வேகமாக ரமேஷ் ரூம் நோக்கி சென்றோம் ... அடுத்த நாள் நடக்க போகும் விபரிதம் தெரியாமல் நான்கு பேரும் சிரித்த படி புகைத்து கொண்டு இருந்தோம் .. ..