~~ROMEO~~

Everyday Starts with Happy :)

கேட்டாள் . . .

உனக்கு எத்தனை முறை சொல்லுவது
என்றாள்
தயவுசெய்து என் பின்னால் சுத்தாதே
என்றாள்
கடிதம் குடுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்
என்றாள்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்றாள்
கண்ணில் நீர்த்துளி படர
கேட்டாள்
ஏன் ரெண்டு நாளாவரல ??

சாருவின் புத்தக வெளியிட்டு விழா : பாகம் 2

இந்த தொகுப்பை விழாவில் நடந்த சிறு சிறு சம்பவங்களை கொண்டது , அதனால் இதை விழா துளிகள் என்று வைத்து கொள்ளலாம்.

விழா ஆரம்பம் ஆனது மாலை 6 மணிக்கு, நான் அரங்கத்துக்கு 5 மணிக்கே சென்றுவிட்டேன். கூட்டம் அவ்வளவு இல்லை. அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் கடைசில் உட்கார்ந்து இருந்ததால் சாரு பேசுவதை என்னால் சரியாக கேட்க முடியவில்லை இந்த முறை முன்னாடி உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கைகளை ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள். அன்பர் ஒருவர் சிற்றுண்டி தயாராக இருக்கிறது சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார். கேசரி, வடை , பணியாரம் என்று ரசனைகார மனிதர் ரசனையாக உபசரித்து இருந்தார். கரும்பு திண்ண கூலி என்பார்களே அது இதுதான்.


தல கேபிள் சங்கர்க்கு போன் பண்ணினேன், என்ன தல எப்போ வருவிங்க என்றேன். கிளம்பி கொண்டே இருக்குறேன் என்றவர் , என்ன அரங்கத்தில் ஒரு 100பேர் இருப்பார்களா என்றார், அந்த சமயத்தில் கூட்டம் அவ்வளவு கூட இல்லை நானும் ஆமாம் என்றேன். விழா ஆரமித்து மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது, உட்கார இருக்கை இல்லாமல் நிறைய அன்பர்கள் நின்று கொண்டே விழாவை பார்த்துகொண்டு இருந்தார்கள். பதிவர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள், சிறிது நேரத்தில் கேபிள் சங்கர் வந்தார் எனது பேச்சை நம்பி லேட் ஆகா வந்தாரா என்று தெரியவில்லை அவரும் நின்று கொண்டே விழாவை கண்டுகளித்தார். பதிவர்கள் Butterfly சூர்யா, முரளிகண்ணன், லக்கி லுக், அதிஷா, நர்சிம், நிலாரசிகன், அடலேறு, தண்டோரா என்று எனக்கு நன்கு தெரிந்த முகங்களை பார்த்ததில் கொஞ்சம் சந்தோசம்.

விழா ஆரமிப்பதற்கு முன் கவிஞர் மனுஷ புத்திரன் அவர்களின் புத்திரன் புத்திரி போட்ட ஆட்டம் அரங்கை கொஞ்ச நேரம் ரசிக வைத்தது. மகன் இவரை ஹமிது ஹமிது என்று எல்லோருக்கும் கேட்கும் படி உரக்க கத்திகொண்டே இருந்தார். குழந்தைகளை பார்பதற்கு என்றே செல்வி , பெரியம்மா ஒருவர் மற்றும் 2 அன்பர்கள் என்று மாறி மாறி இவர்களை அரங்கத்தை விட்டு வெளியே கூட்டி செல்வதும், பிறகு உள்ளே வருவது என்று இருந்தார்கள்.

எதாவது விழா அல்லது எங்காவது செல்லவேண்டும் என்று கிளம்பும் போது கண்டிப்பாக கேமரா எடுத்து வைத்து கொள்ளவேன். ஏன் என்று தெரியவில்லை அன்று எடுத்து வைக்க மறந்துவிட்டேன், கொஞ்சம் கவலையில் ஆழ்ந்து இருந்தேன் அந்த நேரம் பார்த்து நண்பன் ஒருவர் போன் செய்தான், அவன் மீது கொஞ்சம் எரிச்சல் அடைந்தேன், ஏன் என்றால் என் கையில் கேமரா இருப்பதை அவன் பார்த்துவிட்டால் அவ்வளவுதான் என்னை போட்டோ எடு போட்டோ எடு என்று நச்சரிப்பான். இவனை எல்லாம் போட்டோ எடுத்தோமே சாருவை போட்டோ எடுக்க முடியாம போய்விட்டதே என்கிற கவலை.

எனது அருகில் ஒரு அன்பர் உட்கார்ந்து கொண்டு இருந்தார், விழா ஆரமித்து நெடு நேரம் கை தட்டவில்லை அரங்கமே கை தட்டும், சிரிக்கும் ஆனால் இவர் தேமே என்று உட்கார்ந்து கொண்டு இருந்தார். கையில் ஒரு நோட் எடுத்து சுருக்கெழுத்து மூலம் விழாவை தனது பேனாவின் துணையுடன் பதிவு செய்துகொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவரும் கை தட்டுவது, சிரிப்பது என்று இருந்தார். இவருக்கு நேர் மாறாக இருந்தார் எனக்கு பின்னால் இருந்தவர் , இவர் சிரிப்பது அரங்கமே கேட்க வேண்டும் என்று சிரித்தாரா தெரியவில்லை, செம பேஸ் வாய்ஸ் அவருக்கு. எனது அருகில் இருந்தவர் அனைத்து விருந்தினர்கள் பேசையும் குறிப்பேடுத்தவர் சாரு பேச ஆரமிக்கும் போது தனது இருக்கையை விட்டு எழுந்து போய்விட்டார். விழாவின் நாயகனே சாருதான் ஆனால் அவரின் பேச்சை மட்டும் குறிப்பேடுக்காமல் அப்பறம் என்ன இதுக்காக வந்தார் என்று தெரியவில்லை.

4 மணிநேரம் எப்படி விழா சென்றது என்று தெரியவில்லை. கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருந்தது அனைவரின் பேச்சும். விழா 5 மணிக்கு ஆரமித்து இருந்தால் என்னை போன்று தூரத்தில் இருந்து வரும் அம்பர்களுக்கு கொஞ்சம் சவுகரியமாக இருக்கும் வீட்டுக்கு செல்ல. அடுத்த வருடம் இதே மாதிரி 10 புத்தகங்களை வெளியிடமாட்டேன் ஒரே ஒரு புத்தகம் தான் அதும் நாவல் என்றார் சாரு. அந்த புத்தகம் வெளியாவதற்கு முன்பே இந்த புத்தகங்களை படித்து விடவேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்குறேன். பார்க்கலாம்.