~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 27/09/09

இந்த வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தது. மனைவி இல்லாததாள் துணி துவைக்கும் வேலை இருந்தது . எப்போதும் எனது துணிகளை நான் தான் துவைப்பேன் இது பள்ளி பருவத்தில் இருந்து இருக்கும் ஒரு பழக்கம் ஆனால் கல்யாணத்துக்கு பிறகு இந்த வேலையை அவள் எடுத்து கொண்டாள் . இப்பொது அவள் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்றதினால் இந்த வேலையை நான் செய்ய வேண்டியதாக ஆனது. ரொம்ப நாட்களுக்கு பிறகு துணி துவைதத்தினால் கொஞ்சம் இல்லை நிறையவே அசதி ஆகிவிட்டது. லீவ் என்றால் மனைவி உடன் படத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளவன் நான். அந்த இரண்டு நாட்களும் தனிமையில் பிறக்க போகுமா குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றே யோசித்து கொண்டு இருந்தேன் சரி பிறந்த பிறகு பார்த்து கொள்ளலாம் இந்த வேலை எல்லாம் என்று செல்லமாக கூப்பிடும் பெயர் மட்டும் முடிவு பண்ணி உள்ளேன்.

ஆண் என்றால் : சிண்ணு
பெண் என்றால் : சிண்ணி
பெயர் ஓகே தானே ..


முடிவில் கண்டிப்பாக வால் பையனிடம் என்ன பெயர் வைப்பது என்பதை மட்டும் கேட்க கூடாது என்கிற முக்கிய முடிவை எடுத்தேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------

சே பற்றிய ஒரு படம் பார்த்தேன். சே எழுதிய "The Bolivian Diary" என்கிற நாட்குறிப்பு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட Biography படம் என்றே கூரலாம். (முதல் பாகத்தை இன்னும் பார்க்க வில்லை. இரண்டாம் பாகம் தான் கிடைத்தது). படம் அவர் கியூபா நாட்டை விட்டு செல்ல ஆரமிகிறது, அதன் பிறகு அங்கு நடக்கும் கொரில்லா போர் முறைகள் பின்பு அவர்கள் நாட்டில் நடந்த மிலிட்டரிக்கு எதிரான யுத்தத்தில் அவர் சிக்குவது பின்பு அவரை சுட்டு கொள்வது என்று படம் Documentary போல எடுத்து உள்ளார்கள். படத்திற்கு பின்னணி இசை தேவையான இடத்தில மட்டுமே உபயோக படுத்த பட்டு உள்ளது. சே வாக நடித்து இருக்கும் நடிகர் அருமையான நடிப்பை வெளி படுத்தி உள்ளார். அதும் அவர் ஆஸ்துமா தொந்தரவு காரணமாக அவதிப்படும் இடம் அருமை. படம் முழுக்க காடுகள் மற்றும் கிராமங்கள் சுற்றியே செல்கிறது.

ஒரு புரச்சியாளனை புத்தகமாகவோ இல்லை படமாகவோ கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிது அல்ல.


சேவுக்காக பார்க்கலாம் .

--------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று நடந்த பதிவர் சந்திப்புக்கு கண்டிப்பாக ஆஜர் ஆகி விடவேண்டும் என்கிற முனைப்புடன் சென்றேன். காந்தி சிலைக்கு பின்பாக சிலர் நின்று கொண்டு இருந்தார்கள் அருகில் சென்ற உடன் ஒரு நபர் வாங்க சார் என்று கை குலுக்கினர். நீங்க கார்க்கி தானே என்று கேட்டேன் இல்லை நான் அதிஷா என்று தன் பெயர் சொன்னார். அடுத்து நின்று இருந்த சிலரிடன் கை குலுக்கி என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். மிகவும் எதிர் பார்த்த தல கேபிள் சங்கர் கார்கோ பேன்ட் போட்டு கொண்டு தன்னை யூத் என நிருபிக்க வந்தார். அப்படி இப்படி என்று கூட்டம் சேர்ந்து முரளிகண்ணன் பேச ஆரமிக்கும் போது மழை வேகமாக கொட்ட தொடங்கியது. எல்லோரும் ஒரு மரத்து அடியில் நின்று கொண்டோம் இருந்தாலும் அனைவரும் மழையில் நனைந்தே நின்று கொண்டு இருந்தோம்.

மழை சிறிது நின்ற பிறகு கூட்டம் தொடங்கியது புதிய பதிவாளர்கள் அறிமுகம் என்று சிலர் அறிமுகப்படுத்தி கொண்டோம். அதில் இலங்கையில் இருந்து ஒரு பதிவாளர் வந்து அறிமுகப்படுத்தி கொண்டது என்னை ஆச்சரிய பட வைத்தது அதும் அவரின் அழகிய தமிழ் சொற்களை கேட்கும் போது நாம் பேசும் தமிழ் உடன் ஒப்பிட்டு பார்க்க தூண்டியது.

மழையின் காரணமாக பதிவாளர் சந்திப்பு என்பது ஒரு அறிமுக படலமாக தான் இருந்தது.

----------------------------------------------------------------------------------------------------------

மாச கடைசி என்றாலும் டிராபிக் போலீஸ்க்கு மற்றும் எங்கள் ஏரியாவில் இருக்கும் தூசிக்கு பயந்து புதிதாக ஒரு ஹெல்மெட் வங்கிவிட்டேன்.
---------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக்

3 J A P A 6 = ??


என்னன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம் ???










இது கூட தெரியலையா ?


























'MOONJA PAARU'
(3JA , PA6)
'மூஞ்ச பாரு'
ஐயோ ஐயோ ..

கவிதை எழுதுவதில் முதல் முயற்சி.


கவிதை எழுதுவதில் சிறு முயற்சி


அழகி என்றேன் வலது கன்னத்தில் முத்தம் கிடைத்தது ,

பேரழகி என்றேன் இடது கன்னத்தில் முத்தம் கிடைத்தது .

என் உயிரே என்றேன் போங்க அப்பா என்று சிளிங்கி கொண்டே உன் அம்மாவிடம் சென்றாய்.

படித்து முடித்த புத்தகம் - சே குவேரா வேண்டும் விடுதலை

சே குவேரா - வேண்டும் விடுதலை

அன்று நான் ஒரு முதியவரை மின்சார ரயில் வண்டியில் சந்தித்தேன். எனது நண்பன் சே புகைப்படம் அச்சிடப்பட்ட பனியன் அணித்து இருந்தான். நாங்கள் கொஞ்ச நேரம் மற்ற நண்பர்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். எதிரில் இருந்த அந்த முதியவர் எனது நண்பனிடன் பேச்சு குடுத்தார். எங்கள் பெயரை கேட்டு கொண்டு அவன் அணிந்து இருக்கும் பனியன் எங்கு வாங்கினிர்கள் என்று வினாவினர் . நண்பன் ரொம்ப பெருமையாக அதை Tnagarயில் வாங்கியதாகவும் கடைகாரர் 200ருபாய் என்று கூறியதை இவன் 100ருபாய்க்கு பேசி வாங்கி வந்ததாக சொன்னான்.

சரி தம்பி இந்த படத்தில் உள்ள நபரை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? நண்பன் பெயரை மட்டுமே சொன்னான் .

அதற்கு பிறகு அவர் கேட்ட கேள்விகளுக்கு திரு திரு என்று முழித்தான்.


உண்மையில் சே படம் போட்ட பனியன் அணிந்து இருக்கும் நிறைய பேர் அவரை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களா தான் இருகிறார்கள்.



எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லுகிறோமே அது இவருக்கு சரியாக பொருந்தும்.
ஒரு உலக புகழ் பெற்ற போராளியை நிறைய தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது ஆசிரியர் மருதன் எழுதிய சே குவேரா - வேண்டும் விடுதலை.

இவர் பிறகும் போதே ஒரு போராளியாதான் பிறந்தாரா ? இல்லை!!

கொஞ்சம் சொகுசு வாழ்கை தான் இவரின் குழந்தை பருவம். படித்தது மருத்துவர் படிப்பு பின் எதற்காக இவர் போராளியனார் ?
அர்ஜென்டினா நாட்டில் பிறந்தவர் ஏன் க்யூபாவின் விடுதலைக்காக ஃபிடல் காஸ்ட்ரோ உடன் போராடினார்.


எல்லாம் அவர் எதிர்த்த அமெரிக்க ஏகதியபதியம் தான். இவர் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுபயணம் தான் இவர் அமெரிக்க ஏகாத்தியபதியத்தை எதிர்க்க சென்றது .

காஸ்ட்ரோவின் அறிமுகம் இவரை புரச்சி படைக்கு சிப்பாயி ஆக்கியது.
புத்தகத்தில் கூறி உள்ள தொகுப்பு படிக்கும் போது அவர் இப்படி எல்லாம் கஷ்டபடுவதை நாமும் அவருடன் பங்கு பெற்றது போல உள்ளது.
ஒரு நாட்டுக்கே முக்கிய மந்திரியாக இருக்க வேண்டியவர் ஏன் பொலிவியா சென்றார் என்கிற கேள்வி நமக்குள் எழுவதை மறுக்க முடியாது. அவரிடம் இருந்த போர் குணத்தை ஏன் ஒரே இடத்தில இருந்து வீண் அடிக்காமல் மற்றவர்களுக்கு பயன் பெறட்டும் என்கிற எண்ணம் இருக்கலாம். அமெரிக்காவின் CIA ஆட்கள் இவரை சல்லடை போட்டு தேடி கடைசில் இவரை கொன்ற பிறகு அவரின் கைகளை வெட்டி செல்லும் அளவுக்கு இவரை அவர்கள் எப்படி வெறுத்தார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள் .

சே பற்றி முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் அவரை பற்றி அருமையாக எழுதி உள்ளார் ஆசிரியர்.

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது

புத்தகம் கிடைக்கும் இடம்
சே குவேரா
ISBN 978-81-8368-244-2
ஆசிரியர்: மருதன்
விலை: Rs. 90.00
கிழக்கு பதிப்பகம்
New Horizon Media Private Limited
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018,
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701

திரும்பி பார்கிறேன் 21/09/09

இந்த வாரம் கொஞ்சம் டல் தான் . இந்த வாரம் எல்லாம் காலை நேர வேலை என்பதினால் காலை 4 மணிக்கே எழுந்து குளிச்சி கிளம்பி விடுகிறேன். 2 பஸ் , 1 ட்ரைன் புடிச்சு ஆபீஸ்க்கு வரதுகுள்ள கண்ணுல பாதி துக்கம் வந்துடும் . என்ன தான் கிளபினாலும் 6 மணி ஷிபிட்க்கு 6.30 மணிக்கும் தான் ஆபீஸ் போறேன். கிண்டில என்னுடன் ட்ரைன்ல வருகிற வேற கம்பெனி பெண்கள் கையில் சாப்பாடு பையை பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் எத்தனை மணிக்கும் எழுந்து சமைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை . நடுத்தர வர்க்க பெண்கள் தான் அனைவரும் காசோட அருமை தெரிந்தவர்கள் . .

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் முழுக்க பிரபல பதிவாளர்கள் உன்னை போல ஒருவன் விமர்சனம் எழுதி ஹிட் மேல ஹிட் வங்கிடங்கன்னு சொல்லலாம். அந்த படத்தை நான் ஹிந்தியில் ஏற்கனவே பார்த்துவிட்டேன் இருந்தாலும் தமிழுக்கு ஏற்றவாறு எப்படி செய்து இருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று தான் பார்த்தேன்.
மிக அருமை, படத்தின் இசை யாரையும் சார்ந்து இல்லாமல் சுருதிஹாசன் அருமையாக செய்து உள்ளார். படத்தின் கேமராமேன் உழைப்பு சூப்பர். கமல் நின்று இருக்கும் அந்த மொட்டை மாடியில் இருந்து காட்ட படும் காட்சிகள் சிம்ப்ளி சூப்பர். இப்ப வர படத்தில் எல்லாம் ஒரு கலர் டோன் எங்கேயும் தெரியும் படி காமித்து விடுகிறார்கள் அந்த வகையில் சில்வர் கலர் போன்ற மேக கூட்ட கலர் கமல் இருக்கும் இடத்தை ஆக்கிரமிப்புக்கு செய்து விடுகிறது.
Don't Miss the chance to watch this movie in Theater.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று எங்க கம்பெனி மேனேஜர்க்கு நிச்சயதார்த்தம். அதுக்காக ஆபீஸ்ல இருந்து ஒரு கும்பலே புறப்பட்டு வேன்ல திண்டிவனம் போனோம். அங்கு போய் மேனேஜர் கிட்ட ட்ரீட்ன்னு அவர் செலவில் தண்ணிய போடலாம் என்று பிளான் பண்ணினோம் .
வண்டி மரக்காணம்ல காலை டிபன்காக நின்னுச்சு, ஹோட்டல் சரவணா பவன் உயர் தர சைவ உணவகம் என்று எழுதி இருந்த ஹோட்டல்க்கு உள்ளே சென்றோம். கை கழுவலாம் என்று வாஷ் பேசின் தேடினால் ஒரு இருட்டு ரூம்ல ரெண்டு பேரு கைய துடச்சிட்டு வந்தாங்க. உள்ள போனா ஒரே இருட்டு அப்படி இப்படின்னு தட்டி தடவி கைய கழுவிட்டு வந்து டேபிள்ல உட்கார்ந்தோம். சர்வர் தண்ணி கொண்டு வந்து வைத்தார் அதை பார்த்த உடனே கோவம் தலைக்கு ஏறியது. பின்ன அவரு தண்ணி கொண்டு வந்த குடுத்த கிளாஸ்குள்ள எல்லா விரலையும் தண்ணிக்குள்ள விட்டு கொண்டு வந்தாரு. அத பார்த்தா கோவம் வருமா வராதா? வைத்த உடனே அதை எடுத்துட்டு போ என்று திட்டிவிட்டேன். அவருக்கு கோவம் வந்து முனைங்கிடே எடுத்துட்டு போய்ட்டாரு.


ஆளுக்கு 3 இட்லி என்று முதலில் சொல்லிவிட்டு Bisleri வாட்டர் பாட்டில்ல இருக்கும் கண்ணனுக்கு தெரியாத கிரிமியை குடித்தோம். இட்லி முடிச்சு அடுத்ததுக்கு வெயிட் பண்ண முடியாது என்று அங்கு இருந்து எழுந்து வந்துட்டேன். நம்ம பிரண்ட் Wills வாங்கி பற்றவைத்தேன். சிறிது நேரத்தில் எல்லோரும் வந்துவிட வண்டி திண்டிவனம் நோக்கி நடையை கட்டியது. ஏதே எதோ ஊரு எல்லாம் சுத்திட்டு போச்சு, எங்க மேனேஜர் சந்தோசமா வண்டில முன்னாடி உகாந்துக்கிட்டு இயற்கையை தனது டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து கொண்டு வந்தார். மனுஷன் கொஞ்ச நாள் தான் இனி சந்தோசமா இருக்க போகிற என்கிற நினைப்பில் அவரை பார்த்து பரிதாபட்டேன் ( அனுபவம் தான் வேற என்னத்த சொல்லுறது).

நிச்சயதார்த்தம் சுபமாக நடந்தது பசி வேற உயிர் போகுது மச்சி உனக்கு பசிகலையாடா என்று கூட இருந்த நண்பனிடம் கேட்டேன் . நான் தான் 3 இட்லி 2 புரி செட் சாபிட்டேன்ல அதன் பசிகல என்று பதில் வந்தது. அடடா நாம தான் சுறு சுருபா எழுந்து வந்துடோம் , இவங்க எல்லாம் காலைலே புல்லா கட்டிடங்க என்று பந்திக்கு முந்திக்கோ என்கிற வாசகம் நினைவுக்கு வர சாப்பிடும் இடம் நோக்கி சென்றான் மற்றவர்கள் பிறகு வந்து சேர்ந்து கொண்டார்கள். சாப்பாடு அருமையாக இருந்தது பெல்ட் லூஸ் பணிகொண்டு மேலெ வந்து உட்கார்ந்தால், நண்பன் கேட்டான் மச்சி சரக்கு அடிக்கலாமா என்று ??? கொஞ்ச நேரத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டேன்.


எல்லாம் நல்லபடியாக முடிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம் ஆபீஸ்ல பார்க் பண்ணி வைத்த வண்டிய எடுக்கலாம் என்று சென்றேன். ஏதோ ஒன்று குறைகிறதே என்று தேடினால் வண்டில மாட்டி வைத்து இருந்த ஹெல்மெட் காணோம் !!!!

என்ன கொடுமை சார் இது ?? அந்த ஹெல்மெட் மோந்து பார்த்தா மயங்கி விழுதுடுவங்க என்று தான் நான் அத பார்கிங் ஏரியாலயே விட்டு போறேன் அத ஒருத்தன் ஆட்டைய போட்டுட்டு போய்டான். அவன் நிலைமை என்ன அச்சோன்னு தான் கவலையா இருக்கு ..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக் :

தெரியாமல் இருப்பது தவறு இல்லை ,

தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் தவறு .





குவாட்டர் : 68 ருபாய் .





நான் என் வரலாறு கூறுதல் - 2


திருப்பூர் வலைப்பதிவர்கள் said... நல்ல பகிர்வு. நீங்க எப்படி பதிவு எழுத வந்தீங்கனு சொல்லவே இல்லியே ராஜராஜன்!


நான் என் வரலாறு கூறுதல் என்கிற தொடர் பதிவில் நான் எப்படி பதிவு எழுத வந்தேன் என்று சொல்ல மறந்துவிட்டேன், உண்மை என்னவென்றால் அந்த பதிவு எழுத ஆரமிக்கும் போது பழைய நினைவுகள் அசை போட்டவாரு இருந்ததால் இதை மறந்து போனேன் .


படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தினமும் பேப்பர் படிக்கும் வழக்கம் நான் 7ஆம் படிக்கும் போது ஆரமித்தது . பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் போது பாட புத்தங்கள் உடன் குங்குமம் வார இதழ் படித்து கொண்டு இருப்பேன். நாங்கள் இருந்த பகுதி தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்து கொடுத்த குடியுருப்புயில் அது அப்பார்ட்மென்ட் போல இருக்கும். மாடியில் படிக்க போறேன் என்று சொல்லி விட்டு கும்குமம் வர இதழை மறைத்து எடுத்து சென்று படிப்பேன் எனக்கு வர இதழ் என்றல் குங்குமம் புத்தகம் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன். ராணி , தேவி போன்ற இதழ்கள் எல்லாம் கடைகளில் பார்த்து அது பெண்களுக்கான பத்திரிகை என்று வாங்காமல் இருந்து உள்ளேன்.
பிறகு காலேஜ் சேர்ந்த பிறகு கல்லூரி நண்பன் முத்துகிருஷ்ணன் ராஜேஷ்குமார் நாவல் அறிமுகம்படுத்தி வைத்தான். காலேஜ் முடியும் வரை ராஜேஷ்குமார் நாவல் அதிகமாக படித்து இருக்கிறேன். அவரின் நாவலை முதல் பத்து பக்கங்கள் படித்து விட்டு அப்படியே ஜும்ப் பண்ணி கடைசி பக்கம் சென்று முடிவை தெரிந்து கொண்டு பிறகு முதலில் இருந்து படிக்க ஆரமிப்பேன் . இந்த மாதுரி கதைகளை படிக்கிறது ஒருவித ஆர்வம் மற்றும் பொழுதுபோக்கு மட்டுமே .

கட்டுரைகள் எல்லாம் படிக்கமாட்டேன். சினிமா , கிரைம் , கதைகள் , கிசு கிசு இது மட்டும் தான் ரொம்ப ரசித்து படிப்பேன். தொடர் கதைகள் ஒரு வாரம் படிக்காமல் விட்டுவிட்டால் பிறகு அதை தொடர்ந்து படிக்க மாட்டேன், சுவாரசியம் போய்விடும் என்கிற காரணத்தினால் (எடுத்துகாட்டு - ஆனந்த விகடன்ல இப்பொது தொடர் கதையாக வந்து கொண்டு இருக்கும் குமார சம்பவம் முன்று வரங்கள் படித்தேன் நான்கு மற்றும் ஐந்து ஆம் வாரம் படிக்காமல் விட்டதினால் அந்த தொடரை இப்பொது படிப்பதே இல்லை).

ராஜேஷ்குமார் நாவல் படித்த பிறகு நாம் ஏன் கதை எழுத கூடாது என்ற எண்ணம் தோன்றியது அவ்வாரே எனது கல்லூரியில் படிக்கும் போதே ஒரு நாவல் எழுதினேன், தமிழை நான் படிக்கும் அளவுக்கு எழுத தெரியாது, இப்பொது கூட என்னுடைய எழுத்துகளில் நிறைய எழுது பிழைகளை காணலாம்.

நண்பன் ஒருவன் படித்து பார்த்து ரொம்ப கேலி செய்தான் "நீ எல்லாம் கதை எழுதி என்ன பண்ண போற? ஒழுங்கா அர்ரியர் முடிக்க பாரு" என்று திட்டினான். இது எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு நாம எழுதுறது இவனுக்கு புடிகலையா இல்ல கதை நல்ல இல்லையா என்று தெரியவில்லை சரி இத்தோட கதை எழுதுறத விட்டுடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.
கால சக்கரம் என்னை எங்கு எங்கோ அழைத்து சென்றது, ஆனந்த விகடன் அறிமுகம் ஆகி பிறகு அதற்கு அடிமை ஆகிவிட்டேன். ஒவ்வொரு வாரமும் புத்தகம் வரும் நாளில் ஒரு வித உற்சாகம் பிறந்து விடுகிறது , காலையில் ரொம்ப சந்தோசமா புக் வாங்கி படிப்பேன் ஒரு சிகரெட் பற்றவைத்து கொண்டு ஒரு புரட்டு புரடிட்டு செல்வேன். புத்தகம் கையில் இருந்தால் உலகத்தையே மறத்துவிடுவேன் என் மனைவி கூட அடிகடி திட்டுவாள் "ஏன் இப்படி பைத்தியமா புக் படிகிரிங்க ?" என்று கேட்பாள் ,
"ஏன் இப்படி காதலிகிரிங்க"? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது ?? அதே மாதுரி தான் இதும். கிரைம் புத்தகம் கூட இப்படித்தான் அறிமுகம் ஆகியது. இப்பொது வாரம் ஆனால் ஜூனியர் விகடன் மற்றும் ஆனந்த விகடன் வாங்க மறப்பதில்லை, என்னோட அப்பா வார வாரம் ஜூனியர் விகடன் வாங்கிடியா என்று மறக்காமல் கேட்பார்.
சாரு நிவேதா, குஷ்பு கற்பு பற்றி பேசிய பேச்சுகள் எல்லாம் ஓய்ந்த பிறகு ஆனந்த விகடன் பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது , அதை படித்து பார்த்த போது யாருடா இந்த ஆளு இவள்ளவு தைரியமா பேசுறாரே என்கிற ஒரு வித மதிப்பு மற்றும் பிரமிப்பு வந்தது. இன்டர்நெட்ல சும்மா இவரை பற்றி எதாவது இருக்கன்னு தேடும் போது இவரே ஒரு வெப்சைட் வைத்து இருக்கிறார். என்னத்த எழுதி இருகார்ன்னு கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரமித்த உடன் என்னையும் அறியாமல் அவரின் வெப்சைட்யை bookmark செய்தது. இவரின் 0டிகிரி நாவல் தான் நான் வாங்கிய முதல் குண்டு புஸ்தகம். முதல் தடவை படிக்கும் போது ஒண்ணுமே புரியல, காசு வேஸ்ட் பணிடோமோன்னு நினைச்சேன்.

டிரைன்ல போகும் போது திரும்ப திரும்ப முன்று தடவை படித்தேன் அப்பதான் கொஞ்சம் புரிந்தது இந்த புத்தகத்தை வாங்கியது வீணாக போகவில்லை என்று. அதன் பிறகு இவரின் ராஸ லீலா , முடு பனி சாலை , மதுமிதா சொன்ன பாம்பு கதை என்று இவரை சுற்றி பயணிக்க ஆரமித்தேன்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு புத்தங்கள் எல்லாம் அருமை, அதும் Biography புத்தகம் எல்லாம் சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான படைப்பில் உள்ளது. இப்பொது எல்லாம் மாதத்துக்கு ஒரு புத்தகம்மாவது வாங்கி படித்து விடுகிறேன். அடுத்து லக்கிலுக் .. இவர்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார் அது எப்படின்னு தெரியல. ஒரே ஒரு கட்டுரை தான் படித்தேன் அழகாக எழுதி இருந்தார். இவரை தொடர்ந்து அதிஷா , கேபிள் சங்கர், பரிசல் , கார்க்கி , ஜாக்கி சேகர், வால் பையன் இன்னும் பலரை படித்து கொண்டு இருந்தேன்.
இவர்கள் பார்த்துதான் நான் எழுத வந்தேன் , நமக்குன்னு ஒரு ப்ளாக் ஓபன் பண்ணனும் அதை எப்படி பண்ணுறதுன்னு தெரியல. யாருகிட்டையும் கேக்காம நானே எல்லாதையும் செய்தேன். வால் பையன் ஒரு முறை தமிழில் டைப் பண்ண உதவும் ஒரு சாப்ட்வேர் குடுத்தார்.. ஆனால் அதை சரியாக உபயோக படுத்த தெரியவில்லை. இப்போது google transliterate தான் எனக்கு தமிழில் டைப் பண்ணுவதற்கு உதவுகிறது. என்னுடைய ப்ளாக் எப்படி தமிழ்மணத்தில் சேர்ப்பது என்று கொஞ்சம் யோசிச்சு அவர்கள் முலமாக தெரிந்து கொண்டேன்.

கேபிள் சங்கர் எழுதும் விமர்சனம் ரொம்ப அருமையா இருக்கும் அதை பார்த்து நான் இரண்டு படங்களுக்கு விமர்சனம் எழுதினேன், ஆனா அவர் மாதுரி எழுத முடியல "உனக்கு தெரிஞ்சத உன்னால எது முடியுமோ அத மட்டும் எழுது மத்தவங்கள பார்த்து காபி அடிக்காதன்னு" மனம் சொல்லியது .



அப்ப என்னோட தனி தன்மை எது ?? இதற்கு விடை தொடர் கதை . அட பார் ரா என்கிற தொடர் கதையை நான் எழுத ஆரமித்தேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா குமுதம் பத்திரிகைக்கு குடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். கணேஷ் , வசந்த் புதிய தொடர் முதல் வாரம் வந்தது அதற்கு பிறகு அவர் சொல்லியது "இனி இந்த தொடர் எப்படி வரும் என்று எனக்கே தெரியாது" அதே மாதுரி தான் நானும் தொடர் கதை எழுத ஆரமிக்கும் போது இது எப்படி போகும் என்று தெரியவில்லை ஆனால் சுவாரசியம் குறையாமல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. இப்பொது எல்லாம் பதிவு எழுதும் போது நிறைய சந்தோசமா இருக்கு, நான் ஏதோ சாதித்து விட்டது போல ஒவ்வொரு பதிவையும் பதிவேற்றம் செய்யும் போது தோன்றும்.


சந்தோசம் அவ்வளவே ,

இது தொடர் பதிவு என்பதனால் கார்த்திகேயன் மற்றும் நிலாமதி இருவரையும் அழைக்கிறேன் ..

நான் என் வரலாறு கூறுதல்

நண்பர் பரிசல்காரன் என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறார். உண்மையா இது எனக்கு கிடைத்த முதல் மரியாதையை என்றே சொல்லுவேன்..


என்னோட வலைபக்கத்தை அதிகம் பேர் படிக்கிறது இல்லன்னு நினைச்சிட்டு இருக்கும் போது இப்படி ஒருத்தர் அழைக்கிறார் என்றால் என்னையும் இந்த ஏரியா வாட்ச் பண்ணிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோசமா இருக்கு . இது என்னுடைய முதல் தொடர் பதிவு அதும் என்னோட வரலாறு கூறுதல் கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு தான் எழுதுறேன் படிச்சி பார்த்து நல்ல இருந்த வாழ்த்திட்டு போங்க ராசா / ராசாத்தி ..


ரைட் மேட்டர்க்கு போலாம் ..

"நீ எதுவாக ஆகவேண்டும் என்று நினைகிறயோ அதுவாகவே நீ ஆகிறாய்"

இதை எங்கயோ படித்தேன், படித்த உடனே மனதில் பசையாக ஒட்டி கொண்டது. ஆனா இந்த பழமொழியோ இல்ல தத்துவமோ எனக்கு அப்படியே உல்டாவா நடக்குது .


சின்ன வயசுல எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் தான் ஒரு பெரிய ஆள் ஆகா வேண்டும், நமது கண் முன்னாடி ஒருத்தரை பற்றி பெருமையாக பேசும் போது அவர் மாதுரி ஆகா வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதே போன்று தான் நான் எங்கள் வீட்டு அருகில் வசித்த ஒரு மலையாளி அங்கிள் மாதுரி ஒரு கேத்தானா ஆளா இருக்கனும், எல்லோரும் அவரை மரியாதையாக பார்க்கும் பார்வை என்மீதும் பட வேண்டும் என்றே தோன்றியது.

ஸ்கூல்க்கு போகவே பிடிக்காது, அதும் எனக்கு பாடம் சொல்லி குடுத்த வாத்தியார் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாதவங்க என்றே சொல்லுவேன்.

பின்ன என் மண்டைல கணக்கு என்கிற பாடமே ஏறாத ஒன்று, எதுல பாஸ் ஆகிறேனோ இல்லையோ கணக்குல பெயில் ஆகிடுவேன். வாங்காத திட்டு , அடி இல்ல ஸ்கூல்ல மட்டும் இல்ல டியூஷன்ல, அப்பா அம்மா கிட்ட எல்லாம் நல்லா வங்கி இருக்கேன். அப்படி இப்படின்னு பத்தாவது பொது தேர்வு எல்லோரும் படிச்சிட்டு இருக்கும் போது நான் எங்கையாவது வினாதாள் கிடைக்குமா என்று தேடிட்டு இருந்தேன். வேறு ஒரு ஸ்கூல்ல இருந்த பரிச்சை எழுத வந்த ஒரு பெண் செய்த உதவியால் கணக்கில் 55 மார்க் எடுத்தேன். பேப்பர்ல என்னோட நம்பர் பார்த்து நான் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

இனி இந்த ஸ்கூல்ல படிக்க கூடது என்ற முடிவுக்கு வந்து பாடாவதியான ஒரு ஸ்கூல்ல சேர்ந்தேன். என்னுடைய நண்பர்கள் வட்டம் இங்கு இருந்து தான் ஆரமித்தது கூடவே காதலும். 16 வயதில் எல்லோருக்கும் ஏற்படும் ஒரு வித ஈர்ப்பு என்னை ஒருத்திடம் கொண்டு சென்றது, படிப்பதில் கோட்டை விட ஆரம்பித்ததும் இங்கே தான் . காதல் கண்ணை மட்டும் அல்ல படிப்பை கூட மறைக்கும் என்று நான் பதினோராம் வகுப்பில் பெயில் ஆனா பிறகுதான் தெரிந்தது .

அடுத்தது என்ன ?? ஒண்ணும் புரியல ஆனா எதாவது பண்ணலாம் என்று நினைப்பு மட்டும் இருந்தது. என்னை கோயம்புத்தூர்க்கு பார்சல் பண்ணுவதில் வீட்டில் மும்மரமா இருந்தார்கள், அக்கா வீட்டில் அடைக்கலம் பதினோனவது தானே பெயில் பத்தாவது பாஸ்ல அப்ப டிப்ளோமா சேரலாம் என்று கூட்டு சேர்ந்து கும்மி அடித்தோம்.
எல்லோரும் கம்ப்யூட்டர் எடுக்க சொன்னார்கள் நான் தான் எதாவது வித்தியாசமா படிக்கலாம் என்று லெதர் டெக்னாலஜி சேர்ந்தேன். எந்த எடத்துக்கு போனாலும் சனி கூடவே வருதுன்னு சொல்லுவாங்களே அதே மாதுரி முதலாம் ஆண்டு கணக்கு அதும் எப்படி கணக்கு 1 மற்றும் கணக்கு 2. அத பார்க்கும் போதே தெரிந்துவிட்டது இந்த ஆண்டு கண்டிபாக அரியர் என்று, அதே மாதுரிதான் அரியர். இரண்டாம் ஆண்டு படிக்கும் போது திண்டுக்கல் காலேஜ்ல இருந்து சில நண்பர்கள் எங்களுடன் படிக்க வந்தார்கள். நாங்கள் தான் அந்த காலேஜ்ல படிச்சா கடைசி லெதர் பசங்க, எங்களுக்கு பிறகு யாரும் அந்த பாட பிரிவை எடுக்க வரவில்லை .

படிச்சு முடிச்சு சென்னைல ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன், 12 மணிநேர வேலை சம்பளம் என்று சொல்லி கொள்ளும் படி ஏதும் இல்லை. போதும் இந்த வேலை வேண்டாம் என்று முடிவு செய்தேன். இந்த தடவையும் என்ன பண்ண போறேன் என்று தெரியவில்லை, எதாவது பண்ணல்லாம் என்று திரும்ப கோயம்புத்தூர் சென்றேன். மாமாவின் உறவினர் ஒருவர் திருப்பூரில் இருந்தார் அவருக்கு தெரிந்த ஆடிட்டர் ஒருத்தரிடம் கொஞ்ச நாட்கள் வேலைக்கு சேர்த்துவிட்டார் அங்கு சம்பளம் இல்லை, ட்ரைன் பாஸ் மட்டும் எடுத்து குடுத்தார்.

தினமும் சைக்கிள்ல 5 கிலோ மீட்டர் மேதிச்சு ரயில்வே ஸ்டேஷன் போகணும் அங்க இருந்து ட்ரைன் திருப்பூர் வரை. கொஞ்ச நாட்கள் மட்டுமே சென்றேன் அதும் ஒண்ணும் உருப்படியாக செட் ஆகாவில்லை. அந்த வேலையில் இருந்து விலகிவிட்டேன். அடுத்தது என்ன ??? ஒண்ணும் தெரியல, புரியல ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மனதில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தது. ஒரு துணி கடையில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்தேன் அதும் இரண்டு மாதம் மட்டுமே. அதற்கு பிறகு வீட்டில் இருந்தவர்கள் பேச்சுக்கு ஆளானேன், கையில் பைசா இல்ல காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் தான் என்னோட பொழுதுபோக்கு இடம்.

டவுன் பஸ் ஸ்டாண்ட் கொஞ்ச நேரம் , மப்சில் பஸ் ஸ்டாண்ட் கொஞ்ச நேரம் என்று சிறிது நாட்கள் சென்றது. ஒரு நாள் பஸ் ஸ்டாண்ட்ல உட்காரும் போது ஒரு அன்பர் பேச்சு குடுத்தார், போஸ்டர் ஓட்டுறவர். நான் சில நாட்கள் அங்கு அலைந்து இருந்த நாட்களில் அவரை பார்த்து இருக்கிறேன், என்னை பற்றி தெரிந்து கொண்டவர் 100 ருபாய் குடுக்கிறேன் ஒரு வேலை செய்வியா என்று கேட்டார். வேலை சுலபம் தான் ரோடுல நடந்து போறவங்க கிட்ட ஒரு கம்ப்யூட்டர் சென்டர் நோட்டீஸ் குடுக்கணும். 1000 நோட்டீஸ் ஒரு நாள் முழுக்க கால் கடுக்க RS புறம் ஏரியால குடுத்தேன் , இரண்டு நாட்களுக்கு பசி ஆறியது.


நண்பன் வேல்முருகன் தினமலர் பேப்பர்ல வந்த ஒரு விளம்பரத்தை காட்டினான் ஆனால் நேர்முக தேர்வுக்கு செல்வதற்கு கூட கையில் காசு இல்லை. சுரேஷ் என்னோட மிக நெருங்கிய நண்பன். காலை 7 மணிக்கும் அவன் வேலைக்கு போகும் வழியில் நிறுத்தி 10 ருபாய் வாங்கி கொண்டு சென்றேன். இந்த நிகழ்ச்சி மனதை விட்டு அகலவே மாட்டேன்கிறது. எனது நிலைமை பிச்சைகாரன் போல ஆகி விட்டதை என்று நினைத்து அழுத நாட்கள் அவை. வேலை கிடைத்துவிட்டது இதும் ஊர் சுத்துற வேலை தான் ஆனால் சந்தோசமா செய்தேன். கூடவே பகுதி நேர வேலையாக ஒரு இன்டர்நெட் சென்டர்ல வேலை. காலை 7 மணிக்கும் வீட்டில் இருந்து கிளம்பினால் இரவு 11 மணிக்கும் தான் தூங்க போவேன்.

முழு நேர வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு பகுதி நேர வேலையை முழு நேரமாக ஆக்கி கொண்டேன். கையில் கொஞ்சம் காசு புரள ஆரமித்தது கூடவே பெண் நம்பிகளும் , அவள் பெயர் வேண்டாம் ஆனால் பார்த்த உடன் பக் என்று பற்றிகொள்ளும் வசிகரம் அவளிடம் இருந்தது. அவளே காதலை சொன்னாள் 2 வருடங்கள் செல்லாத இடம் இல்லை, பார்க்காத படம் இல்லை , சாப்பிடாத ஹோட்டல் இல்லை ரொம்ப சந்தோசமாக கழிந்த நாட்கள் அவை .

8 வருடங்கள் கொஞ்சம் கஷ்டம், நிறைய சந்தோசம் என்று கழித்த கோவையை விட்டு சென்னைக்கு கிளம்பினேன். நான் எந்த துறைக்கு போக கூடாது என்று நினைத்தேனோ அந்த துறையில் வேலை தேடி வந்தேன். கம்ப்யூட்டர் பற்றி ஒண்ணும் தெரியாமல் பிறகு கொஞ்சம் கற்று கொண்டு இப்பொது IT Technical support என்கிற போஸ்டிங்ல வேலை செய்யுறேன், (அதான் முதலே சொன்னேன்ல நான் நெனைச்சது நடக்காது எல்லாமே உல்ட்டாவா நடக்கும் என்று) சென்னை வந்து 2 மாதங்கள் நான் நடக்காத இடமே கிடையாது, முக்கால் வாசி நடந்தே போவேன் வேர்வை ஆறாக ஓடும், கால்கள் தளர்ந்து உட்கார இடம் தேடும் இருந்தாலும் நடை பயணமே செய்தேன். ஏன் இந்த நடை பயணம் என்றால் ஒரே காரணம் கையில் காசு இல்லை. இதற்கு பலனாக ஒரு கம்பெனில நான் எதிர் பார்த்த வேலை கிடைத்தது . வேலைக்கு சேர்ந்த பிறகு காதலி என்னை ஏமாற்றிவிட்டாள், அவள் என்னிடம் கேட்ட கேள்வி இது தான் " 4000 ரூபாய் சம்பளத்தில் இருக்குற உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் எதுக்கு கஷ்ட படணும் ?? எங்க அப்பா எனக்கு பார்த்து இருக்குற மாப்பிள்ளைக்கு 2 பனியன் கம்பெனி இருக்கு, அதனால் நான் அவனை கல்யாணம் பணிக்க போறேன்" என்றாள் . அப்போது தான் தெரிந்தது காசு காதலை கூட பிரிக்கும் என்று.

மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது அதே கம்பெனி , அதே வேலை கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன்.

கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது நவம்பர் மாதம் பையனோ இல்லை பெண்ணோ பிறக்க போகிறான். வாழ்கையின் அடுத்த கட்டத்துக்கு கிளம்பிவிட்டேன்.

கஷ்டங்கள் , சந்தோசங்கள் என்று இதுவரை சரிசமமாக வாழ்கை சென்று கொண்டு இருக்கிறது. என்னை முதலில் பார்க்கும் நிறைய பேர் உங்களை எங்கயோ பார்த்தா மாதுரி இருக்கே என்று சொல்லாமல் இருந்தது இல்லை கொஞ்சம் தெரிந்த முக அமைப்பு என்னுடையது.

சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது எல்லாதையும் சொல்ல வேண்டுமா என்றும் நினைக்க தோன்றுகிறது.


ஒவ்வொரு முறை நான் கொஞ்சம் சறுக்கும் போதும் எனக்குள் இந்த பழமொழி சொல்லி கொள்வேன் " இதுவும் கடந்து போகும்" ..

படித்து முடித்த புத்தகம் - இரண்டாம் உலக போர்

இரண்டாம் உலக போர்


தினமும் மின்சார ரயில்யில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்வதால் எதாவது உருப்படியா படிக்கலாம் என்று வார வரம் வரும் வெகு ஜென மற்றும் கிரைம் பத்திரிகை பதிலாக கொஞ்சம் பெரிய புத்தகம் வாங்கலாம் என்று தான் கிழக்கு பதிபகம் வெளியீடான இரண்டாம் உலக போர் புத்தகதை வாங்கினேன். புத்தகத்தோட அட்டையில் போர் வீரர்கள் முன்னேறி செல்வதை கருப்பு வெள்ளை புகைப்படத்தின் முலம் போட்டு விடு ஒரு வித எதிர்பார்பை உண்டாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்..

ஆசிரியர் மருதன் ரொம்ப சுவாரசியமாக எழுதி உள்ளார். இது வரை முன்று முறை அதை படித்துவிட்டேன், புத்தகம் ஆரமிக்கும் முதல் பக்கத்தில் ஹிட்லர்ரின் இறந்த செய்தி வெளியான ஒரு நாளிதழ் முகப்பை போட்டு இந்த புத்தகத்தின் ஹீரோ இவர் தான் என்று சொல்லாமல் சொல்லி இருகிறார்கள் ..
உண்மையும் அதுவே !!

முதலாம் உலக போர் ஏன் நடந்தது .. அதற்கு பிறகு என்ன நடந்தது என்று விரிவாக சொல்லிய பிறகே இரண்டாம் உலக போர் தொடக்கம் ஆரமிகிறது . முதலாம் உலக போருக்கு பிறகு ஜெர்மன் நாட்டை ஹிட்லர் எப்படி எல்லாம் தயார் படுத்திகொண்டு இரண்டாம் உலக போருக்கு ஆய்தம் ஆனார் என்பதை விரிவாக சுவாரசியம் குறையாமல் எழுதி உள்ளார் .. ஹிட்லர்ரை பார்த்து பயந்த நாடுகள் வருசையில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டின் நாடுகள் எல்லாம் வருவது அவரை உலகின் முக்கியமான நபர் என்று எடுத்து காட்டிவிடுகிறது.

ஹிட்லர் எப்படி எல்லாம் ஜெர்மன் நாட்டை நேசித்தார், அதே சமயம் ஏன் யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும் வெறுத்தார் என்று கொஞ்சம் தொட்டு செல்கிறது.

ஹிட்லர் உடன் கூட்டு சேர்ந்த இத்தாலி அதிபர் முசோலி ஆடிய ஆடம் பிறகு அவரின் வீழ்ச்சி என்று இன்னொரு சர்வதிகாரி பற்றியும் கூருகிறார்.


ஆச்சு நாடுகளை எதிர்த்து நேச நாடுகள் நடத்திய எதிர் போர், அவைகளை ஹிட்லர் எப்படி எல்லாம் சமாளித்தார் பின்பு எப்படி வீழ்ந்தார் என்று அழகாக விவரித்து உள்ளார்.

யூதர்களை ஹிட்லரின் நாஜி படைகள் எவ்வாறு கொடுமை படுத்தியது , அவர்களை எப்படி எல்லாம் கொன்றார்கள் , அவர்களின் கொலை முகாம் பற்றி படிக்கும் போது ஹிட்லர் எவ்வளவு கொடுமைகாரர் என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஸ்டாலின் தனது படைகளை எப்படி எல்லாம் வழி அமைத்து வெற்றி கண்டார்,

அமெரிக்க ஜப்பான் மீது வீசிய அணுகுண்டு அதை எங்கு எப்படி வீசினார்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது ..

புத்தகதில் சென்னையில் ஜெர்மன் நாடு வீசிய எம்டன் குண்டு பற்றி சொல்லாதது ஒரு குறை. ஆசிரியர் இதை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது மிகவும் எதிர்பார்த்த ஒரு பகுதி இது .

குறைகள் என்று சொல்லுவதற்கு கொஞ்சமே இருக்கிறது .. இருந்தாலும் படிக்க படிக்க சுவாரசியமாக , உலகத்தில் நடந்த முக்கிய நிகழ்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம் இது .


எனது நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக தரவே நான் விரும்புகிறேன்.

புத்தகம் கிடைக்கும் இடம்

இரண்டாம் உலக போர்
ISBN 978-81-8493-141-9
ஆசிரியர்: மருதன்
விலை: Rs.150
கிழக்கு பதிப்பகம்
New Horizon Media Private Limited
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018,
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701