~~ROMEO~~

Everyday Starts with Happy :)

இந்த அலம்பரை தாங்கல ..

ர வர தமிழ் நாட்டுல காமெடி பண்ணுறவங்க அதிகம் ஆகிடே போறாங்க .


இப்ப மேட்டர்க்கு வருவோம், கொஞ்ச நாளாவே எங்கயும் பிளேக்ஸ் போர்டு, டிஜிட்டல் போர்டு என்கிற கலாச்சாரம் அதிகமா ஆகிட்டு இருக்கு. அதுல என்ன சிரிக்க வாய்த்த மற்றும் எரிச்சல் அடைய வைத்த சில சம்பவங்கள் பாருங்க

என்னோட நண்பன் ரமேஷ் குழந்தைக்கு காது குத்து . இதுக்காக அவன் சொந்த ஊருக்கு போய் இருந்தேன். நண்பன் நல்ல வசதி படைத்தவன் , நான் அங்கு சென்ற பொது எனக்காக ஹோட்டல்ல ரூம் எல்லாம் போட்டு குடுத்தான். சரி குளிச்சு முடிச்சு அவன் வீட்டுக்கு கிளம்பினேன் . ஹோட்டல்க்கும் அவன் வீட்டுக்கும் 3km, ஆட்டோல போய்டலாம் என்று கிளம்பினேன் , சரியாக 1km தாண்டியே பிறகு ரோடு சைடு எல்லாம் டிஜிட்டல் போர்டு கண்ணில்பட்டது. யாரோ அரசியல் தலைவர் வருகிறார் என்று அவரை வரவேற்று அவரது தொண்டர்கள் எல்லாம் கலர் கலர்ரக வரவேற்று வைத்து இருந்தார்கள். கிட்டதட்ட நுற்றுக்கு மேல் இருக்கும் அதில் எல்லாம் சொல்லி வைத்து போல யாராவது ஒருத்தர் கண்டிப்பாக cell phone பேசிட்டு இருக்குற மாதுரி போஸ் குடுத்துட்டு பல்ல காமிச்சுட்டு இருபாரு . ஏன்யா உங்க கிட்ட செல் போன் இருக்குனு எல்லோருக்கும் தெரியுறதுகாக போன்ல பேசுறது மாதுரி போஸ் குடுத்து அத இந்த மாதுரி டிஜிட்டல் போர்டுல எல்லாம் உங்க தலைவர் படத்துக்கு கீழ போட்டு வைக்கணுமா ??? Rs.1000 ருபாய்க்கும் கம்மியா மொபைல் வந்துடுச்சு, பிச்சைக்காரன் கூட மொபைல் வச்சி இருப்பானுக . அதும் இவங்க அதுல ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போஸ் குடுப்பாங்க பாருங்க அந்த கர்ண கொடுர காட்சிய பாத்தா செம கண்டா இருக்கு . இவங்கள எல்லாம் அரசியல் பண்ணுறதுக்கும் மத்தவங்களுக்கு குஜா துக்குறதுக்கும் இந்த மாதுரி தட்டி எல்லாம் வச்சி கடுப்பு எதுறங்க

சிரிப்பும் எரிச்சலுடன் நண்பன் வீட்டுக்கு வந்தால் அவன் குடும்பத்துடன் பல்ல காமிச்சிட்டு இருக்கும் பேனர் என்கண்ணில் பட்டது . குழந்தையுடையே தாதாவே தட்டி வச்சி பேரன வாழ்த்துறது தான் கொஞ்சம் இல்ல அதுக்கும் மேல எரிச்சல் அடையே வைக்கிறது.

ஊருல எல்லாம் இந்த மாதுரின சென்னை மாதுரி ஏரியால கொஞ்சம் அதிகமா இருக்கு. 

என்னோட அண்ணன் டிஜிட்டல் பிளேக்ஸ் பிரிண்டிங் பண்ற ஆபீஸ் வசி இருக்கிறான். எனக்கும் அவனுக்கும் 1 வருடம் தான் வித்யாசம் என்பதனால் வாடா போடா என்றே கூப்பிட்டு கொள்வோம். அவன் கடையில் இந்த மாதுரி கூத்து எல்லாம் நடக்கும்.

கொஞ்ச நாட்கள் முன்னால்
தனது நண்பன் கல்யாணத்துக்காக ஒரு 25 வயது மிக்க பையன் பேப்பர்ல எப்படி போடணும்ன்னு எழுதிட்டு வந்து அண்ணன் கிட்ட கூடுதான். கூடவே உட்கார்ந்து எந்த கலர்ல எப்படி எல்லாம் போடணும்ன்னு ஆர்டர் பண்ணிட்டு இருந்தான். இந்த பையன் அஜித் போடோ ஒரு சைடுல போட்டு விஜய் போடோ ஒரு சைடுல போட சொன்னான் . என்னடா இது தண்ணியும் நெருப்பும் ஒரே எடத்துல வருதேன்னு அவனிடம் ஏன்பா இவங்க 2 பேருக்கும்தான் ஆகாதே அப்பறம் ஏன் இவங்க ரெண்டு பேரோட போடோவும் ஒரே பேனர்ல போடுற என்று . அதுக்கு அந்த பையன் ஒரு லாஜிக் பதில் சொன்னான் .  
மணமகன் அஜித் ரசிகர் , மணமகள் விஜய் ரசிகை அதனால ரெண்டு பேரோட போடோ போடுறேன் என்றான். இந்த மாதுரி நடிகர்கள் போடோ போடுறது நால இவங்களுக்கு என்ன கிடைக்க போகுதோ இல்லையோ என்னோட அண்ணன் கம்பெனி லாபகரமாக ஓடுகிறது. ச்சே இப்படி எல்லாம் யோசிச்சு கலகுறனே என்ற கடுப்புடன் நடக்க இருந்த அடுத்த கொடுமையே பார்த்துக்கொண்டு இருந்தேன் . பேனர் ஓட நடு பகுதியில் WWE John Cena போடோ போட சொன்னான் பாருங்க இந்த கொடுமைதாங்க என்னால தாங்க முடியல . இது எதுக்கு என்று கேட்டேன் ?? மணமகன் ஓட அக்கா பையனுக்கு John Cena  புடிக்குமாம் .  

முடியலடா சாமீ என்று அங்கு இருந்து நடை கட்டினேன் வீட்டுக்கு .  


விளம்பரம் பண்ணுவதற்கு என்றே பிறந்த ஜென்மங்கள் இருக்கிறது . அந்த மாதுரியான ஜென்மங்கள்ல ஒருதர் எங்க ஏரியால இருக்காரு. யாராவது தன்னோட பிறந்தநாள்க்கு தானே போஸ்டர் அடிச்சு ஓட்டுரத பார்த்து இருக்குரிங்கள ??? 
இவரு தேசிய அரசியல் கட்சியின் நகர தலைவர். இவரு தன்னோட பிறந்தநாளுக்கு இவரே போஸ்டர் அடிச்சி அந்த நகரம் எல்லாம் ஒட்டி வச்சாரு . இத கூட விட்டலாம்க . இவரு 25வது தடவையாக சபரி மலை போறாரம் இத கூட இவரு போஸ்டர் அடிச்சு ஓடுறது எந்த விததில் எடுத்துகிறது .  


கோமாளிகள் இருக்கும் வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை . ஆனால் அந்த கோமாளிகள் பண்ணுகிற செயல் எல்லாம் எல்லா நேரமும் சிரிப்பு வருவது இல்லை சில நேரம் எரிச்சல் அடைய வைக்கிறது . நல்ல வேலை தேர்தல் ஆணையம் இந்த கூத்துக்கு எல்லாம் மிக பெரிய ஆப்பு வைத்தது இந்த தடவை அதற்காக அவர்களுக்கு கோடி முறை நன்றி கூறலாம் ..