~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அப்படி இப்படி





தமிழ்படம் பார்த்து வயறு வலிக்க சிரித்தேன். படம் வெளிவருவதற்க்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு, அதை மறக்காம பூர்த்தி பண்ணி இருக்காங்க.
இந்த படத்தை பார்த்த 95% மக்கள் சூப்பர்ன்னு தான் சொல்லுறாங்க. சிலர் மட்டும் படம் குப்பைன்னு சொல்லுறாங்க. வேட்டைக்காரன் படத்தை சூப்பர்ன்னு சொன்ன ஒரு நண்பருக்கு இந்த படம் குப்பையாம்!!!!
அட ராமா நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா ??? அவன் சொன்ன ஒரு கண்டுபுடிப்பு தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"மச்சி படத்துல கதையே இல்லடா. மத்த படத்தோட சீன் எல்லாம் உருவி இதுல சேர்த்து இருக்காங்க" எவ்வளவு நாள் கழிச்சு இந்த படத்தை பத்தி ஒரு கண்டுபுடிப்பு !!!!!

"இனிமேல நீ எந்த படத்தையாவது பத்தி பேசுன அன்னைக்கே நமக்குள்ள இருக்குற நட்பு முறிஞ்சிடும்டா" சொல்லி போன் கட் பண்ணினேன்.

--------------------------------------------------------------------------------------------

இந்த மெகா சீரியல் தொல்லை வர வர ஓவரா ஆகிட்டு இருக்கு. சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது. வீட்டுல அப்பா கூட அடிமை ஆகிட்டாரு என்பதுதான் வேதனை :(. ஊருக்கு போனபோது தங்கமணி சொன்னா "7.30 - 8.30 நான் சீரியல் பார்ப்பேன் நீங்க குழந்தையை பார்த்துகோங்க"

அப்பவே பையனுக்கு ஒரு பாட்ட பாடி காமிச்சேன்

"உன்னை சொல்லி குதம் இல்லை,
என்னை சொல்லி குதம் இல்லை
காலம் செய்த கோலமடா "

என்ன?? என்றாள் தங்கமணி.

மீ தி எஸ்கேப்ன்னு ஓடிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------

சென்னை மாநகர் பேருந்துல நடத்துனர் என்று ஒரு சீட் இருக்கும். எவன் டிக்கெட் வாங்கினா என்ன வாங்காட்டி என்ன நம்ம சீட் நல்லா இருக்கான்னு பார்த்து உட்கார்ந்து இருப்பாங்க. போன வாரம் நான் வந்த பஸ்ல கூட்டம் இல்ல டிரைவர் சீட்க்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு பேமிலி உக்கார்ந்து இருந்தாங்க. அவங்க டிக்கெட் வாங்க கைல காசு வச்சு இருந்தாங்க ஆனா நடத்துனர் அவர் சீட்ல இருந்தபடியே காசு குடுத்து விடுங்க என்றார். அந்த நபர் அது எல்லாம் முடியாது நீங்க இங்க வந்து வாங்கிகோங்க என்றார், இதுல என்ன தப்பு இருக்கு?? அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார்!!. நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.

கொஞ்சம் கூட டென்ஷன் பண்ணாம அந்த நபர் தன்னோட ID கார்டு எடுத்து காமிச்சு சொன்னார். இப்ப எனக்கு டிக்கெட் தரலைனா அப்பறம் நீ கன்சூமர் கோர்ட்க்கு வரவேண்டி இருக்கும். அவ்வளவு தான் அந்த நடத்துனர். கப்சிப்ன்னு ஆகிட்டார். அப்பறமா தான் தெரிஞ்சது அவரு ஒரு லாயர்ன்னு.

எனக்கு ஒரு கேள்வி எழுந்துச்சு. தமிழ்நாட்டுல சென்னைல மட்டும் தான் நடத்துனர்க்கு என்று தனியாக ஒரு சீட் குடுத்து இருக்காங்க. அது ஏன் ?? மத்த மாவட்டதில் இந்த மாதிரி எல்லாம் இல்லையே. ஏன் ??

--------------------------------------------------------------------------------------------
அடுத்த இடைதேர்தல்க்கு ஆளும் கட்சி ரெடி பண்ணிடாங்க. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு பொதுதேர்தலுக்கு அதுக்குள்ள இன்னும் எத்தனை பேரு கோபாலபுரம் வீடுக்கு மாற போறாங்கன்னு தெரியல. தனது கட்சி ஆளுங்க ஜகா வாங்குறத பொறுக்காமல் அம்மாவே ரோடுக்கு வந்துட்டாங்க.
அட நான் சொல்லுறது விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் அம்மையார் கலந்துகொள்ள போறாராம். கட்சிய காப்பாத்த எப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டியதா இருக்கு பாருங்க .

--------------------------------------------------------------------------------------------

தல படம் ரிலீஸ் ஆகிடுச்சு.
எப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் "அசல்" படம் பதிவர்களுக்கு "அவல்".

--------------------------------------------------------------------------------------------
போன பதிவை படிச்சிட்டு நண்பன் பேசும் போது கேட்டான் " நீ உண்மையிலே அந்த லேடி கிட்ட பேரு கேக்கலையா?? என்னால நம்ப முடியலையே" ரொம்ப டவுடா கேட்டான்.
ஊரபட்ட பொய் சொன்னா நம்புறாங்க ஒரு உண்மைய சொன்னேன் அத நம்பமாட்டேன்னு சொல்லுறாங்க. நம்புங்கபா நம்புங்க எனக்கு அவங்க பேரு தெரியாது.

--------------------------------------------------------------------------------------------

ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவரும் ராஜேஷ்குமார் தொடர்கதை இனி, மின்மினி படிக்க படிக்க சுவாரசியாம இருக்கு. என்னோட கணிப்பு எல்லாம் தோற்று கொண்டு இருக்கிறது என்பது உண்மையே.
நாவலா இருந்தா சுவாரசியம் தாங்காம கடைசி பக்கம் போய் படிச்சிடுவேன். இது தொடர்கதை என்பதால் வாரா வாரம் காத்து கொண்டு இருக்கவேண்டியதா இருக்கு. ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் கதையை படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.

--------------------------------------------------------------------------------------------