~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ஆயிரத்தில் ஒருவன் படமும் கேபிள் சங்கரின் கதையும்..




பதிவர் சங்கருடன் நேற்று ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன். ரீமா சென் மற்றும் பார்த்திபன் நடிப்பு சூப்பர். பார்த்திபன் ஓபனிங் சீன் செம ஹாட்.. கார்த்திக்கு கூட அந்த மாதிரி இல்ல. .. தூய தமிழ் பேசப்படும் இரண்டாம் பாதி அமர்க்களம். அதும் ரீமா சென் நடிப்பு சிம்ப்ளி சூப்பர். படத்தில் சில சில காட்சிகளை பார்த்து கண்கலங்கியது என்னவோ நிஜம். படத்தின் இறுதி கட்டம் தான் ரொம்ப கொடுமையாக இருக்கிறது. கண்டிப்பாக 15 வயதுக்கு மேற்ப்பட்ட நபர்கள் தான் படத்தை பார்க்கணும்.



படத்தின் ஸ்டார் என்றால் டைரக்டர் செல்வா, நடிகர் பார்த்திபன், நடிகை ரீமாசென்,
ஆர்ட் டைரக்டர் சந்தானம்,
ஆடை வடிவமைப்பாளர் -
இரும் அலி,
இசைஅமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் ,
ஒளிபதிவாளர் - ராம்ஜி ..

படத்தை பற்றி ஏற்கனவே நிறைய விமர்சங்கள் வந்துள்ளது. நான் பார்த்தவரை தமிழில் இந்த மாதிரியான பாண்டஸி படம் எடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், அதும் சோழ மன்னர்கள் பற்றி என்றால் நிறைய மெனக்கெட வேண்டும். இவர்களின் உழைப்பு ஒவ்வொரு பிரேமில் தெரிகிறது.

Hatts Off to Selva and Team .

-------------------------------------------------------------------------
படத்தை பார்த்துவிட்டு கேபிள் சங்கருடன் பேசியபோது அவரின் கருத்துகளும் எனது கருத்துகளும் வேறு வேறு மாதிரி இருந்தது (இருக்கிறது) , ஆனால் இந்த படத்தை இப்படி கூட எடுக்கலாம் என்று ஒரு கதை சொன்னார்,



படத்தின் முதல் 10 நிமிடங்கள் அதே போன்று இருக்கும், ரீமா சென் தொல்பொருள் ஆராய்சியாளர் அவருக்கு உதவ கார்த்திக் வருகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது, ரொம்ப உறுதியான காதலில் இருக்கும் இருவரும் சோழர்கள் வாழும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். பழங்கால மண்டபங்கள் இருக்கும் இடத்திருக்கு வரும் போது கேட்கும் அந்த வீநோத ஒலி இருவரையும் பலநூறு வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்கிறது. கார்த்திக் சோழ வம்சத்தில் பிறந்தவன் என்கிற அடையாளங்கள் காட்டபடுகிறது , ரீமா பாண்டிய வம்சத்தில் பிறந்தவள் போல அடையாளம் காட்டப்படுகிறது. இப்பொது பாண்டிய மற்றும் சோழ வம்சத்தில் பிறந்த இந்த காதலர்கள் எதிரிகள் ஆகிறார்கள். ரீமா தனது ஆட்களை கொண்டு கார்த்திக்கை எதிர்க்கிறார். கார்த்திக் சோழ வம்சத்தில் இப்போது இருக்கும் சிலருடன் எதிர்க்கிறார். ரீமாவின் ஆசை எல்லாம் அந்த சிலையின் மீதுதான் இருக்கிறது, கடைசி கட்டத்தில் இவர்கள் சண்டையிட்டு இருக்கும் இடம் வெடித்து சிதறுகிறது. சோழ வம்சத்தை சார்ந்த இளவரசன் ஒருவனை கார்த்திக் காப்பாற்றுகிறார். ரீமாவிற்கு அந்த சிலை கிடைகிறது. இருவரும் சகஜ நிலைமைக்கு திரும்புகிறார்கள். சேர்ந்தே இந்திய வந்தடைகிறார்கள்.

- Story by Cablesankar.





கதை எப்படி ?? கருத்துகள் எல்லாம் கேபிள் சங்கருக்கே.


With Love
Romeo ;)