~~ROMEO~~

Everyday Starts with Happy :)

மோதி விளையாடு - திரைவிமர்சனம்


இந்தியாவில் இருக்கும் மிக பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் கலாபவன் மணி. இவரது மகன் வினய். பணம் பற்றி எந்த ஒரு அறியாமையும் இல்லாமல் அது எதோ ஒரு பேப்பர் மாதுரி செலவு செய்யும் மேல் தட்டு வர்கத்து பையன் . இவரோட நண்பன் மனோஜ் , குழந்தையில் இருந்து இவருடன் இருக்கிறார். தனது மகனுக்கு எதிரிகளால் ஆபத்து இருப்பது தெரிந்து வினய் சுற்றி எப்போது ஒரு செக்யூரிட்டி கும்பல் இருந்து கொண்டே இருக்கும்.

கதாநாயகி காஜல் அகர்வால் செய்யும் ஒரு சிறு தவறல் வினையின் கார் விபத்தில் மாட்டி கொள்ள , காரின் செலவை ஈடு கட்ட தனது வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து வேலை செய்து அதை கழித்து கொள்ள சொல்கிறார். இவர் வீட்டுக்கு போனதும் அங்கு இருக்கும் மதனிடம் கொஞ்சம் ஓவரக வழிய அது காதல் என்று அவர் எடுத்து கொள்ள, இதற்கு இடையில் வினய் காஜல் மீது காதல் கொள்ள, காஜல் வினய் மீது காதல் கொள்கிறார். தனது காதலை காஜல்லிடம் கூற வினய் ஒரு ஹோட்டல்க்கு வர சொல்கிறார். வினய் வருவதற்கு முன்பாக மனோஜ் அங்கு சென்று காஜல்லிடம் தனது காதலை கூறி இது வினைக்கு தெரியும் என்று கூறுகிறார். இந்த விஷயம் தெரிந்து வினய் மனோஜுடன் காஜல் யாரை காதலிக்கிறார் என்று கேட்டு முடிவு பண்ணலாம் என்று இரண்டு பேரும் காரில் பயணிக்கும் போது மனோஜ் எதிர்பாராத விதமாக கலாபவன் மணியின் எதிரிகளால் சுட்டு கொலை செய்யபடுகிறார்.

மனோஜ் இறந்த பிறகு வினய் வாழ்கையில் பல மாற்றங்களை சந்திக்கிறார், அவரின் செக்யூரிட்டி விளக்கி கொள்ளப்படுகிறது. யாரும் அற்ற ஆனதை போல் ஆகிறார் , இந்த இடத்தில தான் அவருக்கு உண்மை தெரியவருகிறது தான் கலாபவன் மணி மகன் இல்லை மனோஜ் தான் உண்மையான மகன், தனது மகனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வினய்யை தான் தனது மகன் என்று எல்லோருக்கும் தெரியும் படி நடத்தி இருக்கிறார் .

ஒரு புறம் கலாபவன் மணி ஆட்கள் இவரை துரத்த, இன்னொரு புறம் கலாபவன் மணி எதிரிகள் இவரை துரத்த இவர்களிடம் இருந்து வினய் எப்படி தப்பித்தார் என்பதை கொஞ்சம் கூட சூடே இல்லாமல் இயக்கி இருக்கிறார் சரண் ..

வினய் சொந்த குரலில் பேசி இருப்பது நல்ல முயற்சி, இவரின் கொஞ்சும் தமிழ்தான் காது குடுத்து கேட்க முடியவில்லை. நீங்க இன்னும் வளரனும் வினய்... ( உயரத்தில் அல்ல , தமிழ் உச்சரிப்பில் )

காஜல் கொஞ்சம் போல குறும்பு செய்து விட்டு போய் இருக்கிறார் .

படத்தின் பெரும் பங்கு ஒளிப்பதிவாளர் கருண்ணுகே சேரும் . படத்தின் காட்டப்படும் அந்த பங்கள , அலுவலங்கள் , கடற்கரை எல்லாம் ரிச்நெஸ் சூப்பர்ராக இருக்கிறது .

மியூசிக் டைரக்டர் அவரின் பங்கை செய்வனே செய்து காட்டி ஒரு பாடலில் தேவா உடன் வந்து பாடிவிட்டு போகிறார் .

சரண் படம் என்றாலே திரைகதை பெரிய பங்கு பெரும் . இதில் கொஞ்சம் கூட அது இல்லை. மனோஜ் தான் கலாபவன் மணியுடைய மகன் என்று இடைவேளைக்கு முன்பே கணிக்க முடிந்தது. லாஜிக் இல்லாத விஷயங்கள் இதில் நிறைய உண்டு. இந்தியாவில் இருக்கும் மிக பெரிய பணக்காரர் ஒரே நாளில் ரோட்டுக்கு வருவது கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் சொன்னது பெரிய சறுக்கல் சரணுடைய படங்களில் எல்லாம் எதாவது ஒரு இடமோ இல்லை ஒரு பொருளோ கண்டிப்பாக அந்த படத்தை சுற்றியே வரும். இவரது அமர்க்களம் படத்தில் வரும் ஸ்ரீனிவாச தியேட்டர் , அல்லி அர்ஜுன படத்தில் வரும் போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றை பார்க்கலாம் . இந்த படத்தில் இந்திய பெரும் தலைகள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் மற்றும் அவர்களின் அலுவலங்கள் அவர்களின் பங்களா என்று படம் முழுக்க பரவ விட்டு இருக்கிறார் .

சரண் சார் - அடுத்த படம் நம்ம தல நடிக்கிறது . கொஞ்சம் பார்த்து பண்ணுக சார் ..

மோதி விளையாடு : திரைகதையில் இருக்கும் பெரிய ஓட்டையால் பெரிதாக விளையாட முடியவில்லை