~~ROMEO~~

Everyday Starts with Happy :)

படித்து முடித்த புத்தகம் - சேலஞ்ச்


ரொம்ப விறு விறுப்பாக உண்மை சம்பவங்களை படிக்க வேண்டுமா??
கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருக்க வேண்டுமா??
அடுத்தது என்ன என்று தெரிந்துகொள்ள பரபரப்பாக படிக்க வேண்டுமா?
அப்ப உங்களுக்கு ஏத்த புத்தகம் இதுதான்.









ஒரு புத்தகம் என்னை இத்தனை தூரம் ஈர்த்தது இல்லை. அவ்வளவு வேகம் ஒவ்வொரு அத்தியாமும் வரி விடாமல் சுவாரசியம் குறையாமல் படுவேகமாக செல்கிறது.

90'களில் ஜெ அரசால் நக்கீரன் பத்திரிகை எப்படி எல்லாம் பழி வாங்கபட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறது இந்த புத்தகம்.

ஆட்சியாளர்களால் ஒரு பத்திரிகையை எந்த வழிகளில் எல்லாம் முடக்க முடியுமோ அதை எல்லாம் கொஞ்சம் கூட வஞ்சனை வைக்காமல் செய்ததை தோலுரித்து காட்டி இருக்கிறார் ஆசிரியர் நக்கீரன்.

ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரு பத்திரிகையை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்பதை படிக்கும் போது நம்மை அறியாமல் இவர்களின் மேல் ஒருவித பரிதாபம் எழுகிறது.
மன தைரியம் மட்டும் இல்லை என்றால் இவர்கள் என்றோ காணாமல் போயிருபார்கள்.

நக்கீரனுக்கு எதிராக ஜெ அரசு செய்த அடக்குமுறைகள், பத்திரிக்கைகள் வெளிவராமல் இருக்க இவர்கள் செய்த தகிடுதடங்கல் , போலீஸ்காரர்களை ஏவிவிட்டு நடத்திய ரெய்டுகள், அதை எப்படி எல்லாம் முறியடித்து ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை தாமதிக்காமல் குறிபிட்ட நாளில் வெளிக்கொண்டு வந்தது, இவை எல்லாவற்றையும் படிக்கும் போது வெகு ஆச்சரியமாக இருக்கிறது.

ஆட்டோ சங்கரின் வாக்குமுலம் வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் அதை இவர்கள் எதிர்கொண்ட விதம், வீரப்பனை சந்திக்க எடுத்த முயற்சிகள் அதிரடி படையினரை ஏமாத்தி இவரின் நிருபர்கள் எடுத்த துணிச்சல்கள், நிதிமன்ற சம்பவங்கள் , பொய் வழக்குகள் அதை இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு முறை,சிறைச்சாலையில் நடைபெற்ற கொலை. இதை எல்லாம் படிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

சாதாரண நடையில் தான் இருக்கிறது பக்கங்கள் எல்லாம், ஆனால் அதில் இருக்கும் விஷயமோ அசாதாரமானது.


ஒரு தொடராக வெளிவந்ததை புத்தக வடிவில் கொண்டு வந்து இருகிறார்கள்.

நல்ல தீனி உள்ள புத்தகம்.

புத்தகம் கிடைக்கும் இடம்
சேலஞ்ச்
விலை - ருபாய் 190/-
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
105,ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை-600 014.
Ph: 44 - 4399 3007
Ph: 44 - 4399 3000

With Love
Romeo ;)

13 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

நன்றி ரோமியோ.

 

எவ்வளவு கமிசன்?!!

 

அப்படியா ரோமி..? நான் எடுத்து வாங்காமல் வைத்த புத்தகங்களுள் அதுவும் ஒன்று. சரி படிச்சிடலாம்..:)

 

இது நக்கீரன் இணைய தளத்தில் படித்து இருக்கிறேன் .. நல்ல அறிமுகம் தான்

 

//ஷங்கர்.. said...

அப்படியா ரோமி..? நான் எடுத்து வாங்காமல் வைத்த புத்தகங்களுள் அதுவும் ஒன்று. சரி படிச்சிடலாம்..:)
///

அண்ணே,எப்படி எத்தனை எடத்துல சொல்லுவீங்க?
;))

 

@எரும்பு...

ஏங்க ஒரு கோடி புத்தகத்துல நான் வாங்கியது 25, பார்த்தது ஏகப்பட்டது..:)

அப்படி பார்த்ததில் ஒண்ணு உங்ககிட்ட இருக்கு, ஒண்ணு இங்க இருக்கு..:)

 

பகிர்வுக்கு மிக்க நன்றி...

 

அறிமுகத்துக்கு நன்றி....
எங்கையாவது கண்ல தட்டுபட்ட
வாங்குறேன்....

 

நன்றி ரோமியோ; இவ்வாரே தொடர்ந்து படிக்கும் புத்தகங்களை பகிருங்கள். கேபிள் விழாவில் நாம் சந்திப்போம்..

 

ஆட்டோ சங்கரின் வாக்குமுலம் வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் அதை இவர்கள் எதிர்கொண்ட விதம், வீரப்பனை சந்திக்க எடுத்த முயற்சிகள் அதிரடி படையினரை ஏமாத்தி இவரின் நிருபர்கள் எடுத்த துணிச்சல்கள், நிதிமன்ற சம்பவங்கள் , பொய் வழக்குகள் அதை இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு முறை,சிறைச்சாலையில் நடைபெற்ற கொலை. இதை எல்லாம் படிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

..............என்னமா எழுதிட்டீங்க! அடுத்த முறை, இந்தியா வரும் போது கண்டிப்பாக இந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.

 

@ அதி பிரதாபன்
நன்றி சகா

@ எறும்பு said...
ஷங்கரே உங்களுக்கு பதில் சொல்லிட்டார் பாஸ்

@வெள்ளிநிலா
கிடச்சிடாலும் ..

@ஷங்கர்
கண்டிப்பா வங்கி படிங்க பாஸ் .

@மீன்துள்ளியான்
நன்றி பாஸ்

@நாடோடி
நன்றி பாஸ்

@ஜெட்லி
புக் கிடச்சா வங்கி படிங்க பாஸ் . அவ்வளவு வேகம்.

@மோகன் குமார்
கண்டிப்பா சந்திக்கலாம் பாஸ்.

@Chitra
மறக்காம வாங்குங்க.

 

என்ன ஒரு துணிச்சல் இல்ல?
இப்போ உள்ள தலைமுறை ஆட்கள் கிட்ட அது இருக்குமா?
எப்படியெல்லாம் மாறுவேஷத்தில் போயிருப்பார்கள் அவர்கள்?
அப்போ செல்போன் கூட கிடையாது,கணிணி தொடர்பே கிடையாது,ஆனால் எல்லாம் சாத்தியமாச்சு,இப்போ சாடிலைட் போன் கூட உண்டு,ஆனால் யாருக்கும் அவ்வளவு துணிச்சல் இருக்காது.ஆனால் இப்போ ஏன் கோபால் சவுண்டே இல்லை?எழுத எவ்வளவோ இருக்கே?

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

நீங்க சொல்லுற எல்லாம் மேட்டரும் அந்த புத்தகத்தில் இருக்கு தலைவரே . படிச்சு பாருங்க .. புக் சும்மா அதிருது .