~~ROMEO~~

Everyday Starts with Happy :)

படித்து முடித்த புத்தகம் - நான் வித்யா


நான் வித்யா

ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த போது உங்களுக்கு என்ன தோன்றும்?? சுவாரசியமா இருக்கு என்று அடுத்த அத்தியாயம் படிக்க செல்வோம், ஆரம்பமே அதிரடி திருப்பம் வருதே என்று ஆச்சரியப்படுவோம் அல்லது ஒண்ணுமே புரியல என்று திரும்ப முதலில் இருந்து ஆரமிப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த உடன் மேலும் படிக்க வேண்டுமா என்று எனக்கு தோன்றியது. ஆரம்பமே நம்மை உலுக்கி எடுக்கும் பால் மாற்று அறுவை சிகிச்சை! (அதை சிகிச்சை என்று சொல்வது அபத்தம்) அந்த வலி வேதனைகளை வெறும் சொற்களால் படிக்கும் நமக்கே இவ்வளவு வேதனை தரும் போது அதை அவர் எப்படி தாங்கி கொண்டார் என்கிற கேள்வி நம்முன் கண்டிப்பாக எழும்.


ஓவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்தன்மை அதிகம் ஆவதால் அவர்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை. அப்படிப்பட்ட உணர்வுகளை வாய் வழியில் மட்டுமே கேட்டு தெரிந்து இருப்போம், அதுவே ஒரு புத்தக வடிவில் ரொம்ப ஆழ் சென்று ஒரு திருநங்கை அனுபவித்த வேதனைகள், கொடுமைகள், சந்தோசங்கள், அடிகளை கொஞ்சமும் தயங்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் சரவணன் என்கிற இந்நாள் வித்யா. அந்த பெண் தன்மை அதிகமாக இருகிறவர்களின் வேதனை சாதரண மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை அவர்கள் தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதும் இல்லை. அவர்களுக்கு கொஞ்சமாவது அதை பற்றி தெரிந்து கொள்ள செய்யும் ஒரு முயற்சி என்றே சொல்லலாம் இந்த "நான் வித்யா" புத்தகம்.


முன்று வருடங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் கௌதம் மேனன்னை சாரமாறியாக திட்டி இவர் அளித்த பேட்டியின் முலமாக இவரின் வலை பூவை வாசிக்க நேர்ந்தது . இவரின் வலை பூவிலும் கௌதம் பற்றி இவ்வளவு தைரியமாக கடும் சொற்கள் உபயோகித்து உள்ளதை படிக்கும் போது இவர் மற்ற திருநங்கை போல் இல்லை வேறு மாதிரியானவர் என்று என்னை ரொம்ப ஆச்சரிய பட வைத்தார்.


முன்றாம் பாலினம் எப்படி உருவாகுகிறது என்று அறிவியல் ரீதியாக புட்டு புட்டு வைக்கலாம். ஆனால் அவர்களின் மன வேதனையை எந்த ஒரு அறிவியலாலும் சொல்ல முடியாது. ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இவர் பட்ட வேதனைகளை மிகவும் வலியுடன் எழுதி உள்ளார். வித்யாவின் ஆரம்ப கால வாழ்கை என்பது சராசரி மனிதர்களை போன்று அம்மா, சகோதிரிகளின் அன்பு , அப்பாவின் அடி உதை மிரட்டல் என்று இருந்தாலும் சிறு வயதிலே பெண்தன்மையை இவர் அடையாளம் கொண்டு அந்த வயதில் இருந்தே ஒரு பெண்ணாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு இப்பொது பெண்ணாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு ஆண் உருவில் இருக்கும் பெண்ணை எப்படி எல்லாம் கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று இவர் விலகி அதற்கு அவரின் எதிர் கருத்துகளை படிக்கும் போது ஏன் இவர்களை நாம் கிண்டல் செய்கிறோம் என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் கேள்வி எழத்தான் செய்கிறது.


பள்ளி படிப்பு , பிறகு கல்லூரி கணினியில் இளங்கலை பின்பு நாடகத்தின் மேல் இருந்த காதலால் முதுகலையில் மொழியியல், அதன் பிறகு நாடகம் , ஆண் உருவை அறுத்து ஏறிய வேண்டும் என்கிற வெறியால் புனே சென்று பிச்சை எடுக்கும் அவலம், நிர்வாணம், பின்பு திரும்ப திருச்சி , பிறகு மதுரை, இப்பொழுது சென்னை. இவ்வளவு இளவயதில் சுயசாரிதம் எழுவது என்பது யாருக்கும் பாக்கியம் கிடைக்காது. கிடைத்தாலும் அவர் இந்த அளவுக்கு தன்னை பற்றி உண்மையை சொல்லுவார என்கிற கேள்வியும் எழும் கண்டிப்பாக. கடைசியாக இவரின் புத்தகத்தில் எழுதி உள்ள இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.


"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன். எனக்காகவும் என்னைப் போன்ற பிற திருநங்கைகளுக்காகவும் . புரிந்துகொள்விர்களா?""

புரியாதவர்கள் இந்த புத்தகத்தை படியுங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்விர்கள்.

திருநங்கைகள் வாழ்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது , சேலத்தில் கூட திருநங்கைகள் மட்டுமே வேலை செய்யும் ஒரு உணவு விடுதியை திறந்து உள்ளார்கள்.


இந்த புத்தகத்தை படித்ததும் இவரின் பிடிவாதம் எவ்வளவு வலிமையானது , இதை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்து முடித்து விட வேண்டும் என்கிற வெறி அதற்காக எது வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்பதை முதுகலை படம் பெற்ற பிறகு கொஞ்சம் கூட கூச்சம் படாமல் பிச்சை எடுத்தது, இந்த வேலைக்கு தான் செல்வேன் என்று அதில் சாதித்தது என்று தான் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்த காரியம் முடியும் வரை இடையில் வந்த தடைகளை உதறி தள்ளி அசிகங்களை சகித்து கொண்டு வாழ்கையில் எதிர் நீச்சல் போட்டு கொண்டு இருக்கும் வித்யாவுக்கு என்னுடைய நேச கரங்கள் காத்து கொண்டு இருக்கிறது அவருடன் கை குலுக்க.



ரயில் பயணங்கள் - 1

சென்ற வாரம் தங்கையின் கல்யாணத்தில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் சென்று இருந்தேன். மாலையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலையில் இருந்ததால் காலையில் நடக்கும் முகுர்த்தத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள சென்றேன். முன்பதிவின் இடம் கிடைக்காததால் பொது பெட்டியில் அமர்ந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். ரயில் நிலையம் சென்ற போது நீலகிரி எக்ஸ்பிரஸ் பொது பெட்டி நிரம்பி இருந்தது. அதில் பாதிக்கு பாதி வட மாநில ஆண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். உட்கார்வதற்கு இடம் இல்லாததால் முன்பதிவு பெட்டியில் ஏதேனும் இடம் காலியாக இருக்குமா என்று நப்பாசையில் ஒவ்வொரு பெட்டிளையும் ஒட்டி இருக்கும் சார்ட்யை பார்த்து கொண்டு வந்தேன். எல்லாம் புக் ஆகி இருந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி பார்க்கலாம் என்று அவர் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன்.

அடிக்கும் வெப்பத்திலும் கோட் போட்டு கையில் பெட்டியுடன் வருபவரை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம் இவர் தான் டிக்கெட் பரிசோதகர் என்று. அவ்வாறே ஒருவர் வந்தார் யாரேனும் முந்தி கொள்வார்களோ என்கிற பயத்தில் அவர் பெட்டியில் ஏறும் முன்னரே " சார் ஓபன் டிக்கெட் தான் ஏதேனும் பர்த் கிடைக்குமா" என்று பொய்யான சிரிப்பு சிரித்து கேட்டேன். "S9ல உட்காருங்க வரேன்" என்றார், அவருக்கு என்று ஒதுக்க பட்டு இருக்கும் சைடு சீட்டில் எனக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் காலியாக இருந்த ஒரு இடத்தில உட்கார்ந்தேன். அவரை பார்த்தேன் அவரின் கையில் ராஜேஷ்குமார் க்ரைம் நாவல். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒருவர் ராஜேஷ்குமார் நாவல் படிப்பதை பார்க்கும் போது என்னை அறியாமல் சந்தோஷ சிரிப்பு வந்தது. அதை அவர் கவனித்து விட்டார் போல ஏன் சார் சிரிகிரிங்க என்று கேட்டு தனது கைகுட்டையால் முகத்தில் துடைத்து கொண்டார். எனக்கு கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது " ஒன்னும் இல்ல சார் ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் நாவலை ஒருத்தர் படிக்கிறத பார்க்கும் போதும் நான் ராஜேஷ்குமார் நாவல் படித்த நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சேன்" என்ற உண்மையை சொன்னேன்.


ரசனை ஒற்றுமையோ என்னவோ இரண்டு பேரும் அரகோணம் வரும் வரை எங்களை பற்றி அறிமுகம், சொந்தபந்தம், வேலை, சேமிப்பு, படிப்பு, பொழுதுபோக்கு என்று இடைவேளை இல்லாமல் நீண்டு கொண்டு இருந்தது எங்கள் பேச்சு. அவரின் வயது 35 அல்லது 40 இருக்கும், ரொம்ப மரியாதையை குடுத்து பேசினார், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து இருந்ததால் அவரின் பேச்சில் மரியாதையை அவர் அறியாமல் வந்தது. டிக்கெட் பரிசோதகர் எனக்கு அடுத்த பெட்டியில் இடம் ஒதுக்கி தந்தார் இந்த முறை உண்மையான சிரிப்பு சிரித்து அவருக்கு நன்றி சொன்னேன். விடைபெறும் நேரம் என்பதால் அவரிடன் கை குலுக்கி சென்றேன். எனது சீட் நம்பர் தெரிந்து கொண்டவர் நிம்மதியாக துங்குங்க என்று சொல்லிவிடு அவர் தூங்காமல் பயணத்தை மேற்கொண்டார். அறிமுகம் இல்லாத ஒருவரிடம் அந்த ஒரு மணிநேரம் பேசியது நெருங்கிய நண்பன் இடம் பேசியதை போன்று இருந்தது.


எனக்கு குடுத்தது லோயர் பர்த் அங்கு சென்று பார்த்த போது வேறு ஒருவர் படுத்து கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் , இது என்னுடைய இடம் சார் என்றேன் மனிதர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் போல எழுந்ததும் என்னை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தார். " அது எல்லாம் முடியாது வேற எங்கயோ போய் படு" என்று அவர் பேசி கொண்டு இருந்தார். எனக்கு ஒன்றும் புரியல " சார் இது எனக்கு ஒதுக்கிய இடம் நீங்க படுத்து இருக்கிங்க தப்பு உங்க மேல தான் இருக்கு முதல்ல எழுந்துரிச்சு உங்க பர்த்ல போயப்படுங்க" என்று நானும் எரிச்சலுடன் பேசினேன். எனக்கு எந்த சங்கடமும் இல்லை படுப்பதற்கு. அதை அவர் கனிவாக சொல்லி இருந்தால் கண்டிப்பாக சரி என்று சொல்லி இருப்பேன் ஆனால் ஏதோ அவரின் இடத்தை நான் கேட்டது போல என்மீது கோவபட்டது என்னையும் கோவமடைய செய்தது . அவருக்கு எதிரில் படுத்து இருந்த ஒரு பெண்மணி என்னிடம் மேல் பர்த்ல படுத்கொங்க சார் இவரால மேல ஏற முடியாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக தெரிந்தார், " வேண்டுகோள சொன்ன கேக்குறேன் இவர் என்னமோ அதிகாரம் பண்றாரே?? . "மன்னிச்சிகோபா கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்ல இவருக்கு" என்று சொன்னார்.

ஓ நாம கூட கொஞ்சம் அவரசப்பட்டோம் என்று அவரிடம் வருத்தம் தெரிவித்து மேல் ஏறி படுக்க சென்றேன்.


என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்களை திறந்தால் அந்த போலீஸ்காரர் "வடகோயம்புத்தூர் ஸ்டேஷன் வந்துடுச்சு சார் எழுந்துருங்க" என்றார். மணி பார்த்தேன் காலை 4. நன்றி கூறி கீழே இறங்கினேன் சிலர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள். போலீஸ்காரர் வந்து எழுப்பியதை பார்த்தது நாளவோ இல்லை வேறு மாதிரி நினைத்தார்களோ என்னவோ ??


இறங்கிய பின் பார்த்தேன் அந்த பெரியவர் தலைக்கு அந்த பெண்மணி குல்லா மாட்டி விட்டு கொண்டு இருந்தார் பாசத்தின் பிணைப்பு ..

திரும்பி பார்க்கிறேன் - 26/10/2009

இரவை கண்டு பயபடாதவர்கள் பத்தில் இரண்டு பேர் தான் இருபார்கள். எனக்கு தனியாக இரவில் தூங்குவது என்பது கொஞ்சம் அல்ல நிறையவே கிலி. எல்லா விளக்குகளையும் எரிய விட்டே தூங்குவேன். எனது சிறிய வயதில் நாங்கள் குடியிருந்த இடத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நான் படித்த டியூஷன் சென்டர். நடந்தே சென்று வந்து விடுவேன். வழி எங்கும் தெரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தாலும் ஒரு குறிப்பிட இடத்தில மட்டும் கும் இருட்டு மையம் கொண்டு இருக்கும் அது ஒரு 50 அடி தூரமே இருந்தாலும் எனக்கு அந்த இடம் தாண்டி தனியாக செல்ல ரொம்ப பயம். அந்த இருட்டு துடங்கும் இடத்தில நின்று கொண்டு இருப்பேன், ஏதேனும் வண்டி வந்தால் அந்த வண்டியை வேகமாக பின்னாடியே ஓடுவேன் அந்த இடம் கடக்கும் வரை. போன வாரம் அந்த வழியாக நான் பைக்கில் சென்றேன் அதே இடம் ஆனால் அங்கு வேறொரு பையன் நின்று கொண்டு இருந்தான் அவனை நான் கடந்து செல்லும் போது எனக்கு பின்னாடி ஓடி வந்தான். எனக்குள் நானே சொல்லி கொண்டேன் "என்னை போல் ஒருவன்".


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதற்கு வாங்கினேன் என்று தெரியாமல் வாங்கிய படங்கள் பலது ரொம்ப நன்றாக இருக்கும். விரும்பி வாங்கிய படங்கள் ரொம்ப சொத்தையாக இருக்கும். அதில் இந்த படத்தை எதற்காக வாங்கினேன் என்று தெரியாமலே வாங்கி வைத்து அது CD pouch ரொம்ப நாட்களாக இருந்தது. போர் அடித்ததால் இதை பார்க்கலாம் என்று படத்தை பார்த்தேன். படத்தின் பெயர் Roman Holidays - 1953 ஆம் ஆண்டு வெளிவந்தது ,


Wow .. Super ...
படத்தின் சுருக்கம் : இளவரசி ஆனி தனக்கு இருக்கும் வேலை பளுவை தாங்கிக்க முடியாமல் ஒரு நாள் அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி விடுகிறார். வந்தவர் ஒரு நாள் முழுவதும் அரண்மனைக்கு செல்லாமல் ரோம் நகரை ஹீரோவுடன் சந்தோசமாக வளம் வருகிறார். பின்பு ஹீரோவிடம் காதல கொண்டு வெகு சிரமத்துடன் அவரை பிரிந்து தனது அரண்மனைக்கு செல்கிறார்.


படத்தில் எனக்கு பிடித்து முன்று விஷயங்கள்
1. ஒளிப்பதிவு . 1953 எடுத்த படம் கருப்பு வெள்ளையில் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து இருப்பது அருமை. கண்டிபாக ஜக்கி சேகர்க்கு இந்த படத்தை பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன்.

2. படத்தில் உள்ள நகைச்சுவை. ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லாவற்றிலும் நகைச்சுவையை அழகாக கையாண்டு இருகிறார்கள்.

3. படத்தில் கிளைமாக்ஸ் , தமிழ் அல்லது இந்திய சினிமா போன்று இல்லாத ரொம்ப எதார்த்தமான கிளைமாக்ஸ். நாம் எதிர் பார்ப்பை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அழகாக முடித்து உள்ளார்கள் .


அருமையான படம் . DVD கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கவும் .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் நண்பன் சந்தோஷ் உடன் தம் அடிக்க அடிகடி செல்வேன். போன வாரத்தில் நாங்கள் தம் அடித்து விட்டு லிப்டில் ஏறினோம் எங்கள் உடன் எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் உடன் வந்தார். நாங்கள் இறங்க வேண்டிய ப்ளோர் வந்ததும் சந்தோஷ்யிடம் இருந்த மொபைல் போன் பார்த்து அவர் இது Nokiaவா இல்ல blackberryயா என்று கேட்டார். நான் அவன் பதில் சொல்வதற்கு முன் " சார் இது கொரியன் செட் " என்று உண்மையை சொல்லி சிரித்து விட்டேன் . கேட்ட உடன் அவரும் சிரித்துவிட்டார் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. நண்பனை டம்மியாகியத்தில் . ஹா ஹா ஹா என்று ஹால் அதிர சிரித்து கொண்டு வந்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் சொல்லி கொஞ்ச நேரம் வாய் விட்டு சிரித்தேன். பாவம் சந்தோஷ் தான் கொஞ்சம் கடுபாகிடான். மேட்டர் நடந்தது மாலையில் அடுத்த நாள் ஆபீஸ்க்கு மதியம் வந்த போது காலை ஷிபிடில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஒரு தோழி " என்ன ராஜன் நேத்து சந்தோஷ் மானத்த வங்கிடிங்க போல" என்று கேட்டார். மேட்டர் அதுக்குள் இந்த ஷிபிட் ஆளுக்கு எல்லாம் தெரிஞ்சுடிச்சா என்று சிரித்து கொண்டே அந்த கதையை மறுபடியும் சொன்னேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரயில் பயணங்கள் என்கிற தலைப்பில் வாரம் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் அவ்வளவு கதைகள் , சம்பவங்களை உள்ளது என்னிடம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் ஒரு மொக்கை + விடுகதை.
" ஒரு தகர பெட்டிக்குள் 50 மோகினி பிசாசுகள் "

அது என்ன ?
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


"லேடீஸ் காலேஜ் பஸ் "


நான் இப்ப எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்