~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ரயில் பயணங்கள் - 3


ஒரு முறை தப்பு செய்தல் அதை தெரியாமல் செய்து விட்டதாக எண்ணி மன்னித்து விடலாம், ஆனால் அதுவே இரண்டு மூன்று முறை நடந்தால்??

நேற்று மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று.

தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் 40 மூட்டை ரேசன் அரிசி சிக்கியது: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்

இந்த நியூஸ் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது. ஏதோ பெரிய விஷத்தை இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்று கொட்டை எழுத்துகளில் இருக்கிறது. தினமும் சென்னையில் இருந்து சூலூர்பேட்டை செல்லும்அனைத்து மின்தொடர் ரயில் வண்டிகளில் சின்ன சின்ன பைகளாக எப்படியும் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதுஎன்பதை கண் கூடாக பார்கிறேன் .

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருந்து கும்மிடிபூண்டி மார்கமாக சூலூர்ப்பேட்டை செல்லும் மின்சார ரயில் வண்டியில் நடக்கும் அநியாங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்கிறது, அந்த அரிசி எல்லாம் மொத்தமாக அந்த ஏழை எளிய மக்களுக்கு செல்கிறது என்றால் அது சுத்த பொய்.

சென்னை மாநகரில் இருக்கும் முக்கால் வாசி ரேஷன் கடைகளில் முன்னால் ஒரு பெண்மணி பார்ப்பதற்கு ரொம்ப சாது போல அல்லது எதையோ எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பார். அரிசி வாங்க வரும் மக்கள் யாராவது ஒருவரை எதிர் பார்த்து கொண்டு இருப்பார். 1 ருபாய் குடுத்து அரிசி வாங்கும் ஒருவரிடம் நைசாக பேசி அந்த அரிசியை 3 ருபாய் முதல் 5 ருபாய் வரை அவர்களிடம் இருக்கும் அரிசியை இவர் வங்கி கொள்வார்.

இப்படி வாங்கும் அரிசி எல்லாம் இரண்டு வழித்தடங்களில் ஆந்திரா மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. திருத்தனி மார்கமாகவும், கும்மிடிபுண்டி மார்கமாகவும் மின்சார ரயில் வண்டியில் கடத்துகிறார்கள். இதற்கு ரயில்வே போலீசில் வேலை செய்யும் பல கருப்பு ஆடுகள் துணை போகிறது. சென்ற மாதம் வெளியான ஒரு தினசரி பத்திரிகையில் போலீஸ்காரர் ஒருவர் மாமுல் வாங்கி அதை தனது தொப்பிக்குள் மறைத்து வைப்பதை படத்துடன் வெளியிட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் நடக்கும் ஒன்று.

சூலூர்ப்பேட்டை செல்லும் வண்டியில் இவர்கள் அதை எடுத்து செல்லும் முறையே வேறு. யாரும் அதை சாக்குமுட்டையில் அடைத்து செல்வதுயில்லை. கிடைக்கும் துணிபை அல்லது மீன் சுமந்து செல்லும் குண்டாவில் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தான் எடுத்து செல்கிறார்கள். ஒருவர் கண்டிப்பாக 100 கிலோக்கு கம்மியாக எடுத்து செல்வதுயில்லை.


ரயில் வண்டியில் இவர்கள் எடுத்து செல்லும் போது அந்த மூடைகளை சீட்க்கு அடியில் பதுக்கி வைத்து விடுகிறார்கள், ரயில் வண்டியோ ஸ்டேஷன்னில் நிற்பது ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கும் அதற்குள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் ஏத்தி விடுவார்கள், (இதை ஏற்றுவதற்கு என்று ஒருவர் துணைக்கு வருவார்). இந்த கடத்தல் தொழிலை முழுக்க முழுக்க செய்வது பெண்கள் என்பது தான் கொடுமை. பார்ப்பதற்கு ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல இருக்கும் அவர்களின் தோற்றம். சீட்டு அடியில் பதுக்கி வைத்த பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி கதவு ஓரத்தில் உட்கார்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் பார்வை எல்லாம் அந்த அரிசி மூட்டையின் மேல் தான் இருக்கும்.

நம் கண்முன்னே நடக்கும் இந்த கொடுமையை தட்டி கேட்ட முடியாது. கேட்டால் அவ்வளவு தான் அங்கேயே மானத்தை வாங்கி விடுவார்கள். அவர்களின் அர்ச்சனையை காது குடுத்து கேட்டக முடியாது.

இந்த கடத்தல் தொழில் பற்றி எனக்கு முதலில் ஏதும் தெரியாமல் ஒரு பெண்மணிக்கு உதவி செய்து இருக்கிறேன். பார்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தார் , துணி மூட்டை போல ஒன்றை சுமந்து வந்தார். அதை இறக்கி வைக்க கொஞ்சம் உதவினேன். எனது செயலை சிலர் மர்மமாக பார்த்தார்கள் அப்பொழுது எனக்கு தெரியவில்லை இது எல்லாம் கடத்தல் என்று . அந்த பெண்மணி எல்லா சீட்க்கு அடியலயும் அதை பதுக்கி வைத்தார், அடுத்த நாள் இதே போன்று அவர் செய்தார் , அப்போது தான் கொஞ்சம் சந்தேகபட்டேன், நண்பன் ஒருவனிடம் இதை பற்றி கேட்கும் போதுதான் தெரிந்தது இந்த கடத்தல் எல்லாம்.

கடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட தான் இதைபோன்று. இந்த மார்கமாக செல்லும் வண்டிகளில் குறைந்தது 20 பேர் இந்த மாதிரியான கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதை எல்லாம் எப்படி தடுக்க போகிறார்களோ. ஆண்டவனுக்கே வெளிச்சம் ..

வருகிறது ""பா"" தமிழில்


அழகான " பா" படத்தை பார்த்து ரசித்து இருந்து அதை பற்றி சிறிய கருத்தை போன பதிவில் எழுதி இருந்த நேரத்தில் , கொடுமையான ஒரு புகைப்படத்தை அனுப்பி என்னை மண்டை காய வைத்த அதி பிரதாபனை வன்மையாக கண்டிக்கிறேன்..


படம் உதவி அதி பிரதாபனை

ஆனா சகா என்னால சிரிப்பு அடக்க முடியலபா எப்படி உனக்கு கிடச்சுது இது எல்லாம் ?



ஆப் சென்சுரி..... :) , Paa மற்றும் ஆரியா - 2




அட கொக்காக மக்கா , நானும் 50 பதிவ எழுதிட்டேனா என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்படி இப்படின்னு ஏதும் உருப்படியா எழுதல ஏதோ எழுதி இருக்கிறேன் அவ்வளவு தான் இவ்வளவு நாட்களாக என்னோட பதிவை படிச்சி பின்னுடம் போட்டு என்னை வாழ வைத்துகொண்டு இருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி சாமியோ...

---------------------------------------------


நேற்று "பா" படத்தை பார்த்தேன் என்ன ஒரு நக்கல் , நையாண்டி, நடிப்பு என்று படம் மனசை அள்ளுது. எந்த இடத்திலையும் படம் சோர்வு அடையாமல் செல்கிறது. ஆரோ என்கிற கதாபாத்திரத்தில் அமிதாப் நடிப்பு அருமை. படத்தின் ஆரம்பத்தில் ஆரோவை அமிதாப் எப்போதும் போல நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தானே பார்த்தேன், சிறிது நேரத்தில் அமிதாப் மறந்து போக வைத்துவிடுகிறார் அவரின் நடிப்பால். படத்திற்கு ஏன் "பா" என்று வைத்தார்கள் என்று தெரியவில்லை, "மா" என்று வைத்து இருக்கலாம் , அபிஷேக்விட வித்யாபாலன் தான் ஆரோவை எல்லா வகையிலும் தாங்குகிறார். இளையராஜா இசை மென்மையாக எல்லா இடத்திலையும் மனதை ஆட்கொள்கிறது, விக்ரமன் படங்களில் ஒரே ஒரு தீம் மியூசிக் வைத்து எல்லா இடத்திலை அதையே போட்டு வைப்பார். அதே போன்று தான் இந்த படத்தின் தீம் மியூசிக் எல்லா இடங்களிலயும் வருகிறது. சோகம் என்றாலும் சரி, சந்தோசம் என்றாலும் சரி.

அமிதாப் நிறைய அவார்ட் வாங்க போறார் என்பது நிச்சயம்.

--------------------------------------------------------

ஆர்யா - 2 கேபிளார் விமர்சனத்தை படித்து பார்த்து கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று பார்த்த படம். சும்மா சொல்ல கூடாது படம் டாப் கிளாஸ்.

அல்லு அரவிந்த் நடிப்பு சூப்பர். எல்லாவற்றையும் செய்து விட்டு ஒண்ணுமே செய்யாததை போல இருக்கும் உலகமாக கேடி. காஜல் நடிப்பு கூட சூப்பர், திடிர் திடிர் என்று எக்ஸ்பிரஷன் மாத்தி நம்மை ஜொள்ளு விட வைக்கிறார். (ஹ்ம்ம் ரொம்ப அழகா இருக்கா பா )

படத்தை தூக்கி நிறுத்துவது திரைக்கதை தான். அடுத்து என்ன சீன் வர போகுதுன்னு நம்மளால கணிக்கவே முடியாது அந்த அளவுக்கு டக்கு டக்குன்னு மாறிட்டே இருக்கு கதையின் ஓடம்.

கண்டிப்பாக படத்தை பாருங்க உங்களுக்கு இந்த கேடியை பிடிக்கும் ..