~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

கார்த்திகேயனுடன் ஒரு சந்திப்பு




சில சந்திப்புகளை நான் தவற விட்டுருக்கிறேன் ஒன்று அது எனக்கு பிடிக்காமல் இருக்கும் அல்லது அந்த சந்திப்புக்கு நான் தேவையில்லாதவன் வேறு வேலைகள் என்னை ஆட்கொள்ளும்.ஆனால் நண்பர் கார்த்திகேயன்யுடனான
சந்திப்பை தவிர்க்க கூடாது என்கிற முனைப்பில் இருந்தேன், அது நேற்று நிறைவேறியது.


கார்த்திகேயன் "கீதப்பிரியன்" என்கிற தலைப்பில் எழுதி வருகிறார். ஷார்ஜாவில் வேலை செய்பவர், இந்தியாவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தான் வந்துள்ளார். வந்த முதல் நாளே அவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டேன். அவரின் ஹைதரபாத் பயணத்தால் நேற்றுதான் சந்திக்க முடிந்தது.

மாலை 8 மணியளவில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து என்னை பிக் அப் செய்ய வண்டியுடன் வந்து இருந்தார். சுய அறிமுகத்துக்கு பிறகு அவரின் நண்பர் என்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார் என்றார். நேராக அவரின் நண்பர் கடைக்கு சென்றோம், பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் பக்கத்தில் இருந்த சின்ன ரெஸ்டாரண்ட் முன் நிறுத்தினர், உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் ஏதோ ஒரு மளிகை கடை அல்லது Stationary கடையாகதான் இருக்கும் என்று நினைத்தேன்


.

Buddha Hut என்று மங்கள் வெளுச்சதில் இருந்த போர்டு எங்களை வரவேற்றது, கடைதான் சிறியது ஆனால் உள்ளே இவர் செய்து இருக்கும் உள் கட்டமைப்பு பார்த்து வாயை பிளந்தேன். உண்மையில் அருமையான இருக்கிறது உள் கட்டமைப்பு.


ராஜகோபால் என்பது நண்பரின் பெயர், பெயர் தான் பழசு பார்க்க இளமையாக இருக்கிறார் தோற்றத்தில், அருமையாக சமைக்கிறார். அவரின் தொழில் எல்லாம் சிறுவர் முதல் இளைஞர் வரை அவரின் கடைக்கு இழுபதுதான் தான் குறி. அங்கு இருக்கும் ஐட்டம் எல்லாம் எனது வாழ்நாளில் இதுவரை கேள்விப்படாதது. வாயில் நுழையாத பெயர்கள்தான் லைட் அண்ட் டேஸ்டி உணவுகள்.

அவர் என்னிடம் பேசிய முதல் வரி " உங்கள எங்கையோ பார்த்து இருக்கேன்" . You too Rajagopal !!!! என்றது மனம். அது என்னமோ தெரியல சிலர் என்னை பார்க்கும் போது இந்த வார்த்தையை முதலில் கூறுவது அதிகமாகி கொண்டே வருகிறது ( ஒருவேளை நான் அழகாகி கொண்டே வருவதால் இருக்குமோ??? ஹி ஹி ஹி No Tension please ).

அருமையான Sandwich செய்து குடுத்தார், ரொம்ப லைட் மற்றும் சுவை .. ஹ்ம்ம் ஹ்ம்ம் பல்லாவரம் ஏரியா மக்கள் கண்டிப்பா இவரின் கடைக்கு ஒருமுறை உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு செல்லுங்கள் மாலை வேளையில் அருமையான உணவை குழந்தைக்கு வாங்கி குடுங்கள். அங்கு இருந்து கிளம்பும் போது சிறுவர் சிறுமியர் கூட்டம் அனைத்து இடங்களை ஆக்கிரமித்து கொண்டது. பேச்சு வாக்கில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு பதில் தராமல் மழுப்பிவிட்டார் , கேள்வி என்னவென்றால் கல்லா பெட்டி அருகில் துப்பாக்கி ஒன்றை மாட்டி வைத்து இருந்தார். " பாஸ் அந்த துப்பாக்கிய குருவிக்காரன் யாரவது கிட்ட இருந்து சுட்டிங்களா" என்றேன் சிரித்தாரே தவிர அதற்கு பதில் சொல்லவேயில்லை.

அடுத்த முறை பார்க்கும் போது கண்டிப்பாக பதில் வாங்கிவிடவேண்டும் .

அவரிடம் இருந்து விடைப்பெற்று நண்பர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றோம். அவரின் மனைவி , குழந்தை வர்ஷினி, அவரின் மச்சினன் ஹரி சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், பிறகு ஹரி அவர்களின் சொந்த ஊர் ஆனா காரைக்குடி பக்கம் என்று வேள்விப்பட்ட போது அங்கு இருக்கும் செட்டிநாடு ஆரண்மனைகள் பற்றி நிறைய பேசினோம். எங்க சந்திப்புக்கு முதல் நாள் தான் கலைஞர் தொலைகாட்சியில் செட்டிநாடு அரண்மனைகள் பற்றிய தொகுப்பை பார்த்தேன். என்ன ஒற்றுமை பாருங்க, தமிழ்நாட்டில் நான் செல்லாத ஒரு சில ஊருகளில் காரைக்குடியும் ஒன்று, அங்கு இருக்கும் செட்டிநாடு அரண்மனைகளை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன். காரைக்குடி வாழ் அன்பர்கள் யாரேனும் இதை படித்தால் என்னை தொடர்புகொள்ளவும் , உங்கள் ஊரு சிறப்பை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன். எங்க பேச்சு சினிமா பக்கம் சென்றது அவர் ரசித்த படங்கள், நான் ரசித்த படங்கள் என்று எங்கள் ரசனைகளை பகிர்ந்து கொண்டோம். ஜக்கி சேகர் வந்து சென்றதை பற்றி சந்தோசமாக பகிர்ந்து கொண்டார், ஒரு நாள் முதலே வந்திருந்தால் அவரையும் சந்தித்து இருந்து இருப்பேன். நடுவில் எனக்கு தோசை பரிமாற்றப்பட்டது அருமையான தோசை வித் கார சட்னி மற்றும் தேங்காய் சட்னி. சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது அவருக்காக நான் வாங்கி வந்த மதன் எழுதிய " வந்தார்கள் வென்றார்கள்" என்கிற புத்தகத்தை பரிசளித்தேன். அவர் எனக்கு ஒரு Body spray பரிசளித்தார். இனிதான சந்திப்பு இனிதாகவே முடிந்தது,

வரும் 12 ஆம் தேதி திரும்ப அமீரகம் செல்கிறார் அவர் கிளம்புவதற்கு முன் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி அவரிடம் குடுக்க வேண்டும். அடுத்த முறை அவர் இந்திய வரும் போது இது எல்லாம் வாங்கிட்டு வாங்க என்று.

ஏன் என்றால் நான் ஒரு காமன் மென். ஹி ஹி ஹி .


வால்பையனுடன் ஒரு சின்ன சந்திப்பு

நமது அருமை நண்பர் கேபிளார் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .

-----------------------------------------------------------------------------------------------
Nov 10 ஆம் தேதி நண்பர் வால்பையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தனியாக சந்திக்கும் முதல் பதிவாளர் நண்பர் வால்பையன்.

எங்கள் சந்திப்பு திடீர் என்று முடிவானது, அன்று காலையில் தான் நான் கரூர் செல்லும் வழியில் ஈரோடு வருவதாகவும் அப்போது சந்திக்க முடியுமா என்று அவரிடம் GTALKகில் கேட்டேன், கண்டிப்பாக சந்திக்கலாம் என்றார். அவரின் போன் நம்பர் கேட்டு குறித்து கொண்டேன், ஈரோடு வந்ததும் அவரது அலைபேசிக்கு கூப்பிட்டு பஸ் ஸ்டாண்ட்யில் வெயிட் பண்ணுவதாகவும் சொன்னேன் .

பஸ் ஸ்டாண்ட் வெளிய தீபா மெடிகல்ஸ் என்று ஒரு கடை இருக்கும் அங்க வெயிட் பண்ணுக கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் என்றார்.

ஈரோடுக்கு நான் புதுசு அதும் இரவில் நான் எங்கு போய் தேடுவது என்கிற யோசனையில் தள்ளுவண்டிகாரர் ஒருவரிடம் அந்த கடை பற்றி கேட்டேன், அந்த Transformer பக்கதுல தான் இருக்கு பாருங்க என்றார். வால்பையனை சந்திக்கவேண்டும் என்று ஈரோடு சென்றால் பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் தீபா மெடிகல்ஸ் பக்கத்தில் வெயிட் பண்ணவும். அதை அவர் சொல்லுவதற்கு முன்பே நீங்க செய்துவிட்டால் மனுஷன் ரொம்ப சந்தோஷ படுவார். அவர் சொல்லுவதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த மெடிக்கல் கடை சுமார் 25 வருடங்கள் அங்கு இயங்கி கொண்டு இருக்கிறதாம், அதனால் ஈரோடு வாழும் அனைத்து அன்பர்களுக்கும் இந்த கடையை நன்கு அறிந்து உள்ளார்கள் என்பதை தள்ளுவண்டிக்காரர் சொன்னார்.


சரியான இடத்திற்கு வந்து அடைந்தேன். நிமிடங்கள் ஓடி கொண்டே இருந்தது பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னவர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகுதான் வந்தார். வந்ததும் தன் பெயரை வால்பையன் என்று சிரித்த முகத்துடன் அறிமுகபடுத்தி கொண்டார், நானும் என்னை ரோமியோ பாய் என்றே அறிமுகபடுத்தி கொண்டேன். அவரின் வேலையை மற்றொருவரிடம் விட்டு வர லேட் ஆகிவிட்டது என்று சொன்னார்.

சரி வாங்க என்று அவர் பைக்கில் ஏற்றி கொண்டார் அப்போது மணி 9.45pm கிட்டதட்ட 30 நிமிடங்கள் நான் அவருக்காக அங்கு காத்து கொண்டு இருந்தேன். மாலை வேலை என்றால் அழகான பெண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் ஆனால் இது இரவாச்சே அதும் மழை வேறு கொஞ்சம் கடுப்புடனே நின்று கொண்டு இருந்தேன்.

வண்டியில் ஏற சொன்னவர் எங்கே கூட்டி சென்றார் தெரியுமா ???? நீங்கள் நினைப்பது சரி "BAR" க்கு தான் நேராக சென்றோம். அங்கு அவரின் நண்பர்கள் இரண்டு பேர் எங்களுக்குகாக வெயிட் பண்ணிட்டு இருந்தார்கள். ஒருவர் தியாகு , மற்றோவர் கார்த்திக். கச்சேரி ஆரமிக்கலாம் என்று உள்ளே சென்றோம். நான் அதிகமாக தண்ணி அடிக்கமாட்டேன் , அடித்தாலும் நண்பர்கள் கூடும் போதும் மட்டுமே அதும் பீர் மட்டுமே ஒரு பாட்டில் அடிப்பேன். அதற்கே எனது உடம்பு தங்காது என்பது முக்கியமாக விஷயம்.


எனக்கு ஒரு பீர் என்று சொல்லி அமைதி ஆனேன் ( வீட்டிற்கு சென்று மனைவியிடம் வாங்கிகட்டி கொண்டு அமைதியாக இருந்தது வேறு :( ) . வால் மற்றும் அவரது நண்பர்கள் என்னென்னமோ ஆர்டர் செய்து கொண்டு இருந்தார்கள், அதை முடித்து பேச்சு சற்று வலை பக்கம் சென்றது. வால் மொக்கை அல்லது சிரியஸ் டைப் ஆள் என்று நினைத்து சென்றால் அதை மாற்றி கொள்ளுங்கள். மனுஷன் காமெடில கலக்குறார், இவரை விட இவரின் நண்பர் தியாகு வால்லை நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஓட்டு ஓட்டு என்று ஓட்டி கொண்டு இருந்தார். நீங்கள் வால்பையனை சந்திக்கும் போது அவரின் நண்பர் தியாகு பற்றி சில வார்த்தைகள் கேட்டு பாருங்கள், ஒரு விஷத்தை கண்டிப்பாக சொல்லுவர், அதை என்னிடம் சொன்னார் அப்போது தியாகு அலுத்து கொண்டே சொன்னார் " இதை நான் 20தாவது முறை கேக்குறேன் பாஸ்" . வால்பையன் சொன்னது கேட்டு எனக்கு தியாகுவை பற்றி இப்படியும் ஒரு மனிதரா ?? என்றே என்ன வைத்தது. அது என்ன மேட்டர் என்று என்னிடம் கேட்காதிங்க வால்பையன்னிடம் கேட்டு கொள்ளவும்.

மணி ஆகி கொண்டு இருந்தது , நான் அடிகடி எனது வாட்ச் பார்த்துகொண்டு இருந்ததை பார்த்து நண்பர் கார்த்திக் என்ன விஷயம் என்று கேட்டார். மனைவி எனக்காக வெயிட் பண்ணுவ நான் கிளம்பட்டுமா ?? என்றேன். வால் என்னை பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்து விட்டார், பசி வேற வயற்றை கிள்ளியது. எங்கு ஹோட்டல் இருக்கும் என்று காமிக்கிறேன் வாங்க என்றார். இருவரும் நடந்து சென்றோம் பஸ் ஸ்டாண்ட் உள்ளே. நாங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு போலீஸ் பூத் இருந்தது , அங்கே ஒரு இளம் பெண்ணை இரண்டு பெண் போலீஸ்காரர்கள் விசாரித்து கொண்டு இருந்தார்கள். அவர்களை கடந்து சென்ற பிறகு எங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை படித்து பாருங்கள்.

வால் : தல உங்களுக்கு phycology தெரியுமா ??
நான் : ஹ்ம்ம் கொஞ்சம் தெரியும் தல .
வால் : ஒரு பொண்ணு இந்த டைம்ல ரெண்டு போலீஸ்காரங்க விசாரிக்கும் போது வாயில பபுள்கம் மேன்னுடே பதில் சொன்னால் என்ன அர்த்தம்??
நான் : ITEM !!
வால் : ஹா ஹா ஹா " க க க போ"


அவரை சந்தித்தற்கு சாட்சியாக ஒரு புகைப்படம் எடுத்து கொண்டேன், ஆனால் பாருங்க கேமராவை எனது அக்கா வாங்கி சென்றுவிட்டார்.

முதல் சந்திப்பு அருமையாக இருந்தது நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நேரம் தான் எனக்கு இல்லை. இன்னொரு முறை அவரை சந்தித்தால் அந்த குறையை தீர்த்து கொள்ள வேண்டும்.