~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

சுட்ட கவிதை

எனது தோழி கண்மணி அனுப்பிய கவிதை இது. காதலில் ரொம்ப அவஸ்தைபட்டவர். அவரின் கவிதைகள் எல்லாம் ரொம்ப சோகமாக தான் இருக்கும். இன்று ஏனோ கொஞ்சம் சந்தோஷத்துடன் இந்த கவிதையை எழுதி இருக்கார். ரொம்ப நாளுக்கு பிறகு அவரிடம் தெரிந்த சந்தோஷத்தை. அவரின் ஒப்புதலுடன் சில மாற்றங்கள் செய்து இங்கே.



நீ
எனது
நடமாடும்
இரண்டாம் உயிர்
என் வானத்தில் இரு சந்திரன்
ஒன்று மேலே .
மற்றது என்னருகில் நீ.


காற்றின் மேல்
எனக்கு தீரா கோபம் !
ஐந்து அங்குல இடைவெளியில்
நீ
கொடுத்த முத்தத்தை
காற்று எனக்கு வேண்டும் என்று கவர்ந்து சென்றது ..


உன் இடையில் ஹெல்மட் வைத்து
நீ
நடக்கையில்
ரசித்து நான் சொல்லுவேன் . .
இத மாதிரி நான் நம்ம
குழந்தைய சுமக்கனும்டா என்று.
சொல்லுகையில் நெற்றி பொட்டில்
நீ
முத்தமிடுகையில்
அந்த ஆசையெல்லாம் அடங்கி செத்துவிட தோணுமடா


உன் தோளில் தெரியாத்தனமாய்
பட்டாம்பூச்சி உட்கார ....
நீ
அதை "சூ" என்று துரத்தினாய் ,,,,
நான் பதிலுக்கு அதை நசிக்கியே விட்டேன் ..
அத ஏண்டி கொன்னுட்ட என்று நீ கேட்டபோது
வாழ்கையில் அது செய்த மிகபெரிய தவறு உன்மேல் உட்கார்ந்தது அதற்கு உண்டான தண்டனையை நான் குடுத்தேன்...
உன் மூச்சு காத்து என்மேல் மட்டும் தான் படனும்டா.
நீ
எனது தெய்வம் டா .


உங்க வீட்டு தஞ்சாவூர்
பொம்மை மட்டும்
தலையை ஆட்டுவதற்கு
பதிலாக கண்ணடிக்க தொடங்கிற்றே . .
அதற்கும் உன்மேல் காதலா

நீ
முகம்
கழுவும் தண்ணீரை
நான் பருக வந்த போது ..
"போடீ லூசு " என்று நீ விரட்டினாய் ,
முகம் சுருங்கி போன என்னை
அள்ளி அனைத்து எச்சில் பண்ணினாய் கண்ணத்தை ..
சிணுங்கலுடன்
"நான் தண்ணி தானே கேட்டேன் ..
நீ
தீர்த்தமே கொடுத்துட்ட "


ஒருநாள் உன்னுடன் நான் பேசுகையில்
நகம் கடித்த போது
நகத்தை கடிக்காத என்று சட் சட் எனது விரலில் அடித்தாய்
அன்றில் இருந்து இன்று வரை
உன்முன் நகத்தை கடிக்காமல் நான் பேசியதில்லை

உனக்கு என்னடா பிடிக்கும்
என்று நான் கேட்ட போது
நீ
சொன்னாய் "உன்ன தாண்டி பிடிக்கும்"
உனக்கு என்று திருப்பி கேட்டாய்
"உன் நிழல் கூட பிடிக்கும் " என்று
நான் சொன்னவுடன் .
நீ
கட்டி அணைத்ததில்
உன் உப்பு நீர் வாசமும் பிடித்துப்போனது எனக்கு..



With Love
Romeo ;)

கேட்டாள் . . .

உனக்கு எத்தனை முறை சொல்லுவது
என்றாள்
தயவுசெய்து என் பின்னால் சுத்தாதே
என்றாள்
கடிதம் குடுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்
என்றாள்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்றாள்
கண்ணில் நீர்த்துளி படர
கேட்டாள்
ஏன் ரெண்டு நாளாவரல ??

என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

திராத தலைவலியுடன் சென்றேன் மருந்து கடைக்கு

தேவதை ஒருத்தி என்ன வேண்டும் என்று கேட்டாள்

தலைவலி என்று இதய பகுதியை தொட்டு காமித்தேன்

சிரித்துகொண்டே கேட்டாள்





""லூசா பா நீ ""

கவிதை எழுதுவதில் முதல் முயற்சி.


கவிதை எழுதுவதில் சிறு முயற்சி


அழகி என்றேன் வலது கன்னத்தில் முத்தம் கிடைத்தது ,

பேரழகி என்றேன் இடது கன்னத்தில் முத்தம் கிடைத்தது .

என் உயிரே என்றேன் போங்க அப்பா என்று சிளிங்கி கொண்டே உன் அம்மாவிடம் சென்றாய்.