~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label ரயில் பயணங்கள். Show all posts
Showing posts with label ரயில் பயணங்கள். Show all posts

ரயில் பயணங்கள்



சென்றவாரத்தில் மகனை பார்க்க சென்று இருந்தேன். அது என்னவோ தெரியவில்லை நான் போற ட்ரெயின் மட்டும் எப்பயும் லேட்டாக தான் கரூர் செல்கிறது. அன்று வழக்கம் போல 1 மணிநேரம் லேட். தூக்கம் கலைந்தது, அது என்ன ஸ்டேஷன் என்று தெரியவில்லை மணி பார்த்தேன் காலை 5.30 இந்த நேரத்தில் கண்டிப்பாக திருச்சி தான் வந்து இருக்கும் என்கிற எண்ணத்தில் சிரிது நேரம் புரண்டு படுத்தேன் தூக்கம் முழுவதுமாக கலைந்தது. பனி வேகமாக வண்டியில் ஊடுருவி இருந்ததால் பாத்ரூம் கண்டிப்பாக செல்லவேண்டும் என்கிற நிலைமையை உண்டாகியது. எழுந்து பாத்ரூம் சென்றேன், சைடு லோயரில் ஒரு பெண்மணி முக்காடுடன் அந்த அதிகாலையில் ஒரு புத்தகத்தை படித்து கொண்டு இருந்தார் . திருச்சி தாண்டிடுச்சா என்று கேட்டேன், ஆமாம் என்றார் அப்பொழுது எனது தெரிந்தது அவர் பெண் போலீஸ் என்று, பனியில் இருந்து காப்பற்றிகொள்ள முக்காடு போட்டு இருந்தார். நீங்க எங்க இறங்கனும் என்று கேட்டார். கரூர் என்று சொல்லியவாறே அங்கு இருந்து நடையைகட்டினேன். பல் துலக்கலாம் என்று பிரஷ் , பேஸ்ட் உடன் வாஷ்பேசின் பக்கம் வந்தேன் அவர் இன்னமும் அதே பக்கத்தை தான் படித்து கொண்டு இருந்தார். அந்த புத்தகத்தை பார்த்த போது அவர் ஏதோ தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்தது. . சிறிது நேரத்தில் அவர் கதவுக்கு அருகில் வந்து நின்றார், கதவின் ஜன்னல் வழியாக வந்துகொண்டு இருந்த பனியை கண்ணாடி ஜன்னலை கொண்டு அடைத்தார். குளிர் நின்றதின் நிம்மதியை அவரின் முகத்தில் பார்த்தேன். ஒரு புன்னகை செய்து தேங்க்ஸ் என்றேன்.

பதிலுக்கு புன்னகைத்தவர், எங்க இருந்து வரிங்க என்றார், சென்னை என்றேன் . சிறிது நேரத்தில் சகஜமாக பேசிக்கொள்ள ஆரமித்தோம். ஜன்னல் வழியாக சூரியன் எழுவது சிறிது தெரிந்தது. எனது வேலையை பற்றி கேட்டார், பொட்டி தட்டுறேன் என்று சொன்னதும் சிறிது முழித்தார். சிரித்து கொண்டே எனது வேலை பற்றி சொன்னேன். சம்பளம் எவ்வளவு என்றார் உண்மையை சொன்னால் இவ்வளவுதான என்று கேட்டு விடுவார் என்பதால் கொஞ்சம் அதிகமாக சொன்னேன். அவருக்கு லீவ் எப்படி என்று கேட்கும் போது அவரின் முகத்தில் ஒருவித ஏமாற்றத்தை பார்த்தேன். எங்களுக்கு லீவ் எல்லாம் இல்லைங்க 24 மணிநேரமும் நாங்க டுட்டில இருக்கணும். CL, EL, ML சிலதை சொன்னார். விஷேதத்துக்கு கலந்துக்க முடியாமல் சில நேரம் டுட்டி வந்துடும், எதிர்ப்பார்க்காத சில நேரத்தில் தூக்கம் இல்லாம வேலை பார்க்கவேண்டி வரும். சிறிது வினாடிகள் பேசாமல் இருந்தோம், எனது இருக்கைக்கு செல்கிறேன் என்று சொல்லி அவரிடம் இருந்து விடை பெற்றேன். 6 பர்த்தில் நான் மட்டுமே எழுத்து இருந்தேன் மற்றவர்கள் எல்லாம் தங்களது போர்வைக்குள் முடங்கி இருந்தார்கள். எனது பேக் எடுத்து கொண்டு அந்த பெண்மணி எதிரில் காலியாக இருந்த இடத்தில உட்கார்ந்தேன். 45 நிமிடத்தில் கரூர் வந்துவிடும் என்று அவரே பேச்சை ஆரமித்தார், நீங்க எது வரை போறீங்க என்று கேட்டேன், நானும் கரூர் தான் என்றார். இந்த ரூட் கொஞ்சம் ஈஸியா இருக்கும் அதனால தான் வரேன் என்றார். அந்த புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்படாமல் அதே பக்கங்களில் இருந்தது.

மகாதானபுரம் என்கிற இடத்தில சிக்னலுக்காக வண்டி நின்றது. வெளியே இறங்கி நின்றேன், வயதான ஒரு கிழவி வாழைபழங்களை விற்றுக்கொண்டு வந்தார். அவர் கடந்து சென்ற பிறகு குல்லாய் போட்ட ஒருவர் பழம், பழம் என்று கத்தினார். அந்த கத்தல் அவரின் இருந்த பெட்டியை தாண்டி செல்லவில்லை, அந்த கிழவியோ 2 பெட்டிகள் தாண்டி சென்றுவிட்டார். அந்த அதிகாலையில் பழம் கிடைக்காத விரக்தியில் அவர் உள்ளே சென்றார். வண்டி கிளம்ப தயாரானது நான் படிக்கட்டில் நின்று கொண்டே பார்த்தேன், விரக்தியில் தளர்ந்து நடந்து வந்தார் கிழவி, கையில் விற்காமல் இருந்த பழங்களை எல்லாம் தலையில் இருந்த கூடைக்கு சென்றது . திரும்பி பார்த்தேன் அந்த பெண்மணி ஒரு நோட்டில் வண்டி எங்கு எல்லாம் நிற்கிறதோ அப்போது எல்லாம் குறித்து கொண்டு வந்தார்.

கரூர் வர 20 நிமிடங்கள் இருக்கும், புத்தகத்தை பார்த்தேன் அந்த பக்கம் அப்படியே இருந்தது படிப்பதை அவர் நிறுத்தி வெகு நேரம் ஆனதை காட்டியது அந்த பக்கம். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், சென்னையில் சிறிது நேரம் வேலை செய்ததை பற்றி சொன்னார். கரூரில் எவ்வளவு நேரம் இருப்பிர்கள் என்று கேட்டேன் அடுத்து திருச்சி செல்லும் வண்டி 9.30 மணிக்கு வரும் அதில் செல்வதாக சொன்னார். வண்டி கரூர் வந்தடைந்தது இறங்கியவர் எனக்காக காத்துகொண்டு இருந்தார். நான் கிளம்புறேன் என்றேன், அடுத்த முறை திருச்சி வரும் போது பார்க்கலாம் என்று சொன்னேன். இது நடக்குமோ இல்லையோ ஒரு பேச்சுக்கு சொன்னேன். இருவர் பாதைகளும் பிரிந்தது என்னை எதிர் பார்த்து எனது மாமா காத்துகொண்டு இருந்தார். அடுத்த வண்டியை எதிர்பார்த்து அவர் நடைமேடையில் நின்று கொண்டு இருந்தார் கையில் அந்த புத்தகம்
அதே பக்கத்தை பிடித்தபடி இருந்தது.

வீட்டுக்கு சென்றதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது அவரின் பெயரை கேட்காமல்விட்டது.


சில நட்புகள் எல்லாம் இப்படி தான் சொல்லாமல் கொள்ளாமல் வரும், அப்படியே சென்றுவிடும்.

திரும்பி பார்க்கிறேன் - 20/12/2009


மனைவி, மகனை பார்க்க ஊருக்கு போயிட்டு இருந்தேன், கரூர் கிட்ட வரும் போது எனக்கு எதிரில் இருந்த ஒரு அன்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டார், நானும் சரி என்றேன்.

நீங்கள் எதற்காக வாழ்கிரிகள் ?? என்றார்.

என்னடா ஊருக்குள்ள இன்னும் கால் அடி எடுத்து வைக்கல அதுக்குள்ள 71/2 நம்மள தேடி வருதேன்னு நினைத்தேன்.

எதுக்காக கேக்குறிங்க ?

நான் ஒரு ப்ரொஜெட் பண்றேன் அதுக்காக வேணும் என்றார். இதுவரை 65 நபர்களிடம் இந்த கேள்வியை கேட்டாராம் அதில் 4 வயது ரொம்ப ஏழ்மையான பையன் சொன்ன பதிலும் 65 வயது ரொம்ப பணக்காரர் ஒருவர் சொன்ன பதிலும் ஒரே மாதிரி இருக்கு, வாழ்கையின் அர்த்தம் தெரியாமல் பதில் சொன்ன 4 வயது பையனும் , வாழ்ந்து முடித்த 65 வயது பெரியவரும் பதில் எப்படி ஒன்றாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்க இப்பவே பதில் சொல்ல வேண்டும் அவசியம் இல்ல, என்னோட நம்பர் தரேன் அதுக்கு SMS மட்டும் பண்ணுங்க போதும் என்று அவரின் நம்பர் குடுத்தார்.

சார் நீங்க கேட்ட கேள்வி அருமையானது தான், இந்த கேள்வியை வேறு மாதிரியும் பார்க்கலாமா ?

எந்த மாதிரி ?

நீங்க எதற்கு பிறந்திர்கள்ன்னு வச்சுக்கலாமா?

அப்படி கூட வசிக்கலாம்.

அப்ப இந்த கேள்வியை எனது அப்பா , அம்மாவிடம் தான் நீங்க கேட்கணும், அவங்க என்ன சொல்லுவாங்க அவங்க அப்பா அம்மாவிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும்ன்னு, இப்படியே போன தலைமுறை, அதற்கு முந்தின தலைமுறைன்னு போயிட்டு இருக்குமே தவர பதில்வராது.

சற்று நேரத்தில் அவரின் பேச்சு வேறு பக்கமாக மாறியதை புரிந்து கொண்டேன். இயேசு பற்றி ரொம்ப சில்லாகி பேசினார், அவர் கண்டிப்பாக இந்த பூமியில் திரும்ப உயிர் பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார். நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல, கோவில்க்கு போகணும்ன்னு தோணுச்சுனா போவேன், வேண்டாம்ன்னு தோணுச்சுனா போகமாட்டேன், ஒரு தடவை கோவிலுக்கு அருகில் சென்று ஏனோ போக பிடிக்காமல் எனது மனைவியை மட்டும் சாமி கும்பிட்டுவா என்று அனுப்பிவிட்டு நான் வெளியில் இருந்தேன். அப்படிபட்ட ஆளு நான் என்கிட்ட பிரசங்கம் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு அவருக்கு தெரியல. சிரிது நேரத்தில் கரூர் ஸ்டேஷன் வந்தது வெளியில் வந்ததும் நான் செய்த முதல் வேலை Xavier என்கிற பெயரை எனது மொபைல இருந்து அழித்தது தான்.

----------------------------------------------------------------------------------------

பர பர என்று ஒரு 1000 சரம் பட்டாசு வெடிச்ச மாதிரி இருந்துச்சு இந்தியா vs ஸ்ரீலங்கா முதல் கிரிக்கெட் மேட்ச். நினைச்சு பார்க்க முடியாத ஸ்கோர் சேஸ் பண்ண ஸ்ரீலங்கா வீரர்கள் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது. தில்ஷன் ஆட்டத்தில் அனல் பறந்தாலும் சங்ககரா ஆட்டத்தில் தான் இடியுடன் கூடிய மின்னல் இருந்துச்சு. ஒரு கட்டத்துல வெறுத்து போய் சேனல் மாதி வேற சேனல் பார்த்தேன் திரும்ப neo sports சேனல் பார்த்தா இந்த இரண்டு பேரும் அவுட். இது நல்ல இருக்கேன்னு கொஞ்சம் நேரம் வேற சேனல் பார்க்கிறது , பிறகு கிரிக்கெட் சேனல்க்கு தாவ்றதுன்னு இருந்தேன், நினைத்த மாதிரியே விக்கெட் போய்ட்டு இருந்துச்சு, இந்தியாவும் ஜெய்ச்சிடுச்சு.அடுத்த மேட்சுல இதே மாதிரி பண்ணினேன் ரிமோட் போச்சு, இந்தியா தோத்துடுச்சு. இதுல இருந்து ஒண்ணு தெரியுது ரிமோட்க்கும் கூட இந்தியன் டீம் நிலைமை தெரிஞ்சி இருக்கு. அதுக்கே பொறுக்காம பனால் ஆகிடுச்சு
.

-----------------------------------------------------------------------------------------------



மேலே இருக்கும் படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள், மொபைல்ல கிளிக் பண்ணிய இடம் லயோலா கல்லூரி முன்பு, சாரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள ஷேர் ஆட்டோல போயிட்டு இருந்தேன் அப்ப தான் இந்த பசங்க அபாயம் தெரியாமல் ரொம்ப மும்மரமா தம் அடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க. வீட்டில் உபயோகபடுத்தும் மின்சாரத்தை தொட்டாலே நாம காலி இவங்க கால் வச்சிக்கிட்டு இருக்குற இடம் ஒரு ஜங்ஷன் பாக்ஸ் உயர் அழுத்தம் உள்ள மின்சாரம் இருக்கும் இடம் ஷாக் அடிச்சிதுன்னு வைங்க ஆளே கருகி போய்டுவான். இதுல இன்னொரு கொடுமை அந்த மஞ்சள் நிற தார்பாய் இடத்துக்கு கீழே ஒரு டீ கடை இருக்கு.

ஒரு வார்த்தை இருக்கு படிச்சவனோ இல்ல படிக்காதவனோ சொல்லுவான் ஏதாவது ஒரு இடத்தில இதை கேட்கலாம், அது என்னனா

"படிச்சி இருக்கல அறிவு இல்ல ?? "

இதை இவர்களுக்கு நான் இங்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

------------------------------------------------------------------------------------

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஒரு பாடல் இருக்கிறது " என் ஜன்னல் வந்த காற்றே " ரொம்ப மெலோடியா தொடங்கும் , அப்படியே வெஸ்ட்டன் அப்படியே செம குத்து . கேக்கும் போதே ரொம்ப வித்தியாசம் இருக்கு யுவன் மியூசிக். ரோஷினி, பிரியா , திவ்யா பாடி இருக்காங்க அவங்க அவங்க ட்ரக்கு ஏத்த மாதிரி நிறைய வித்தியாசதோட பாடி இருக்காங்க. மறக்காம கேளுங்க அப்பறம் அதை மறக்க மாட்டிங்க. 3 விதமான பெண்கள் , 3 விதமான பீட்ஸ் . கேட்கும் போதே தோணுது படத்தில் வரும் அந்த 3 பெண்களின் கேரக்டர் ஒரு பாடலில் சொல்லிவிட்டார்கள் என்று .




ரயில் பயணங்கள் - 3


ஒரு முறை தப்பு செய்தல் அதை தெரியாமல் செய்து விட்டதாக எண்ணி மன்னித்து விடலாம், ஆனால் அதுவே இரண்டு மூன்று முறை நடந்தால்??

நேற்று மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று.

தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் 40 மூட்டை ரேசன் அரிசி சிக்கியது: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்

இந்த நியூஸ் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது. ஏதோ பெரிய விஷத்தை இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்று கொட்டை எழுத்துகளில் இருக்கிறது. தினமும் சென்னையில் இருந்து சூலூர்பேட்டை செல்லும்அனைத்து மின்தொடர் ரயில் வண்டிகளில் சின்ன சின்ன பைகளாக எப்படியும் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதுஎன்பதை கண் கூடாக பார்கிறேன் .

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருந்து கும்மிடிபூண்டி மார்கமாக சூலூர்ப்பேட்டை செல்லும் மின்சார ரயில் வண்டியில் நடக்கும் அநியாங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்கிறது, அந்த அரிசி எல்லாம் மொத்தமாக அந்த ஏழை எளிய மக்களுக்கு செல்கிறது என்றால் அது சுத்த பொய்.

சென்னை மாநகரில் இருக்கும் முக்கால் வாசி ரேஷன் கடைகளில் முன்னால் ஒரு பெண்மணி பார்ப்பதற்கு ரொம்ப சாது போல அல்லது எதையோ எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பார். அரிசி வாங்க வரும் மக்கள் யாராவது ஒருவரை எதிர் பார்த்து கொண்டு இருப்பார். 1 ருபாய் குடுத்து அரிசி வாங்கும் ஒருவரிடம் நைசாக பேசி அந்த அரிசியை 3 ருபாய் முதல் 5 ருபாய் வரை அவர்களிடம் இருக்கும் அரிசியை இவர் வங்கி கொள்வார்.

இப்படி வாங்கும் அரிசி எல்லாம் இரண்டு வழித்தடங்களில் ஆந்திரா மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. திருத்தனி மார்கமாகவும், கும்மிடிபுண்டி மார்கமாகவும் மின்சார ரயில் வண்டியில் கடத்துகிறார்கள். இதற்கு ரயில்வே போலீசில் வேலை செய்யும் பல கருப்பு ஆடுகள் துணை போகிறது. சென்ற மாதம் வெளியான ஒரு தினசரி பத்திரிகையில் போலீஸ்காரர் ஒருவர் மாமுல் வாங்கி அதை தனது தொப்பிக்குள் மறைத்து வைப்பதை படத்துடன் வெளியிட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் நடக்கும் ஒன்று.

சூலூர்ப்பேட்டை செல்லும் வண்டியில் இவர்கள் அதை எடுத்து செல்லும் முறையே வேறு. யாரும் அதை சாக்குமுட்டையில் அடைத்து செல்வதுயில்லை. கிடைக்கும் துணிபை அல்லது மீன் சுமந்து செல்லும் குண்டாவில் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தான் எடுத்து செல்கிறார்கள். ஒருவர் கண்டிப்பாக 100 கிலோக்கு கம்மியாக எடுத்து செல்வதுயில்லை.


ரயில் வண்டியில் இவர்கள் எடுத்து செல்லும் போது அந்த மூடைகளை சீட்க்கு அடியில் பதுக்கி வைத்து விடுகிறார்கள், ரயில் வண்டியோ ஸ்டேஷன்னில் நிற்பது ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கும் அதற்குள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் ஏத்தி விடுவார்கள், (இதை ஏற்றுவதற்கு என்று ஒருவர் துணைக்கு வருவார்). இந்த கடத்தல் தொழிலை முழுக்க முழுக்க செய்வது பெண்கள் என்பது தான் கொடுமை. பார்ப்பதற்கு ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல இருக்கும் அவர்களின் தோற்றம். சீட்டு அடியில் பதுக்கி வைத்த பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி கதவு ஓரத்தில் உட்கார்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் பார்வை எல்லாம் அந்த அரிசி மூட்டையின் மேல் தான் இருக்கும்.

நம் கண்முன்னே நடக்கும் இந்த கொடுமையை தட்டி கேட்ட முடியாது. கேட்டால் அவ்வளவு தான் அங்கேயே மானத்தை வாங்கி விடுவார்கள். அவர்களின் அர்ச்சனையை காது குடுத்து கேட்டக முடியாது.

இந்த கடத்தல் தொழில் பற்றி எனக்கு முதலில் ஏதும் தெரியாமல் ஒரு பெண்மணிக்கு உதவி செய்து இருக்கிறேன். பார்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தார் , துணி மூட்டை போல ஒன்றை சுமந்து வந்தார். அதை இறக்கி வைக்க கொஞ்சம் உதவினேன். எனது செயலை சிலர் மர்மமாக பார்த்தார்கள் அப்பொழுது எனக்கு தெரியவில்லை இது எல்லாம் கடத்தல் என்று . அந்த பெண்மணி எல்லா சீட்க்கு அடியலயும் அதை பதுக்கி வைத்தார், அடுத்த நாள் இதே போன்று அவர் செய்தார் , அப்போது தான் கொஞ்சம் சந்தேகபட்டேன், நண்பன் ஒருவனிடம் இதை பற்றி கேட்கும் போதுதான் தெரிந்தது இந்த கடத்தல் எல்லாம்.

கடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட தான் இதைபோன்று. இந்த மார்கமாக செல்லும் வண்டிகளில் குறைந்தது 20 பேர் இந்த மாதிரியான கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதை எல்லாம் எப்படி தடுக்க போகிறார்களோ. ஆண்டவனுக்கே வெளிச்சம் ..

ரயில் பயணங்கள் - 2

பயணங்கள் - 2






சென்ற கட்டுரையில் கோவைக்கு சென்றதை எழுதி இருந்தேன், இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி கோவையில் இருந்து சென்னைக்கு வந்தது.

கும்பலாக இருந்து கும்மி அடித்து கொண்டு இருந்தோம் கல்யாணத்தில் , அத்தை மகள் ஒருத்தியை பார்த்ததும் ரொம்ப ஆச்சரியப்பட்டு போனேன். அவளின் கலயாணத்துக்கு முன்பு தேவதை போல இருந்தாள். நல்ல வளத்தி, ஒல்லியாக ரொம்ப அழகாக இருப்பாள். அவளின் இரண்டு கன்னங்களில் விழும் அந்த குழியை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதற்காகவே அவளை சிரிக்க சொல்லுவேன் அது பள்ளி காலத்தில். அப்போது அவளின் மேல் எந்த ஒரு ஆசையும் இல்லை ஒரு சிறுவன் சிறுமி விளையாட்டு போல இருந்தது . அவள் கல்யாணம் முடிந்து போன பிறகு அவளை பார்க்கவே இல்லை கிட்டதட்ட 3 வருடங்கள் கழித்து இந்த கல்யாணத்தில் சந்தித்த போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. உடம்பில் சதை போட்டு இருந்தாள் பார்ப்பதற்கு 30 வயது போல இருந்தாள். என்னால் நம்பவே முடியவில்லை இவளா என்று. நான் இருப்பதை எங்கிருந்தோ பார்த்தவள் ரொம்ப சந்தோசமாக வந்து என்னருகில் வந்து அமர்ந்தாள் குழந்தையுடன். வெகு நாட்களுக்கு பிறகு பார்த்ததினால் வார்த்தைகள் ஆதிகமாக வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரமித்தோம். பேச்சு நீண்டு கொண்டு இருந்தது எங்களின் தற்போது வாழ்கை எப்படி செல்கிறது என்கிற கேள்வி எழும் போது அவள் உச் கொட்டினாள் சென்னை போன்ற பரபரப்பு நகரத்தில் வளர்ந்தவள் குமாரபாளையத்தில் கல்யாணம் கட்டி கொண்டு சென்றதால் வந்த விரக்தி. . இந்த தருணத்தில் எதாவது பேசி சங்கட பட வைக்க வேண்டம் என்று வேறு பேச்சு பேச ஆரமித்தோம். கடைசியாக விடைபெறும் நேரத்தில் அவளை சிரிக்க சொன்னேன் எதற்கு என்றவளின் கன்னங்களை பார்த்தேன் அந்த குழி மட்டும் மாறவில்லை.


அன்று மதியமே கோவை எக்ஸ்பிரஸ்ல் அப்பா, அம்மா உடன் கிளம்ப வேண்டிய கட்டாயம். முன்பே முன்பதிவு செய்ததினால் இந்த தடவை டிக்கெட் பரிசோதகரை எதிர் பார்க்காமல் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சொந்த பந்தங்கள் உடன் நிறைந்து இருந்த கல்யாண மண்டபத்தில் இருந்த சந்தோஷம் இப்பொது காணாமல் போனதை உணர்ந்தேன். இந்த மாதிரி மதியம் செல்லும் ரயில் பயணத்தில் ஒரு சவுகரியம் ரயில்க்குள்ளே விற்றுக்கொண்டு வரும் திண்பண்டங்கள் தான். கட்லெட், சமோசா , வடை, நிமிடத்துக்கு ஒரு முறை வரும் டீ, காபி , கூல் ட்ரிங்க்ஸ், மாலை வேளையில் வரும் தக்காளி சூப் , மசால் தோசை, பிரட் அம்லேட் தின்னுவதற்கே 200 ருபாய் அழவேண்டும். ரயிலில் வரும் மற்ற விற்பனையாளர்கள் புத்தகங்கள் , குழந்தைகளுக்கு ஆனா விளையாட்டு பொருட்கள், முறுக்கு, கண் தெரியாதவர்கள் விற்றுக்கொண்டு இருந்த டோர கலரிங் புக் இவைகளுடன் புது படங்களை கூட ஒருவர் விற்றுக்கொண்டு வந்தார்.



தூக்கம் கண்ணை முடியதால் திருப்பூர் தாண்டி சேலம் வரை நன்றாக தூங்கி கொண்டு வந்தேன் உட்கார்ந்தபடியே. சேலத்தில் கூட்டம் கொஞ்சம் ஏறியது படிப்பதற்கு புத்தகம் ஏதும் இல்லாமல் ரொம்ப எரிச்சலாக இருந்தது. பகல் நேர பயணங்களில் புத்தம் இல்லாமல் நான் புறப்படமாட்டேன் அன்று அவசரம் காரணமாக ஏதும் எடுத்து கொண்டு வரவில்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது சிறிது நேரம் கதவு அருகில் நின்று கொண்டு வருவது என்று நேரத்தை கழித்து கொண்டு வந்தேன். வண்டி ஆம்பூர் தாண்டி சென்று கொண்டு இருந்தது. கழிவறை செல்ல எழுந்தேன் அதன் அருகில் சிலர் கீழே எதோ பார்த்து கொண்டு இருந்தார்கள் என்னவாக இருக்கும் என்கிற ஆவலில் நானும் பார்த்தேன் பார்வையற்றவர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் என்னவென்று விசாரித்தேன். கதவுக்கு நடுவில் இருக்கும் ஜன்னல் முடும் போது இவரின் விரல்கள் அடி பட்டு விட்டது என்றார். ரயில்களில் இரண்டு ஜன்னல்கள் இருக்கும் ஒன்று கண்ணாடியால் ஆனது , மற்றொன்று இரும்பால் ஆனது. இரும்பால் ஆனா ஜன்னல் தான் இவரின் விரல்களை பதம் பார்த்து இருந்தது.


கூடி இருந்த ஒருவர் கூட அவருக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. அந்த விரல்களை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு சுற்றி இருந்தார். ரத்த போக்கு அதிகமாக இருந்ததை அவர் பேன்ட் காமித்தது , ரத்தத்தை அவர் பேண்டில் துடைத்து இருந்தார் போல. பார்த்ததும் என்னால் இவர்களை போல வேடிக்கை பார்க்க முடியவில்லை. கும்பலில் இருந்த ஒருவர் முதலுதவி பெட்டி எங்கு இருக்கும் என்று டீ விற்கும் ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார். இது எல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவர் எழுப்பி விரல்களில் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் கவர்யை நீக்கினேன். ரத்தம் உறைந்து போய் இருந்தது அவர் கை முழுக்க ரத்த கறைகள். சுற்றி இருந்தவர்களின் அலச்சியம் அப்போது தான் தெரிந்தது. அவரின் உடை ரொம்ப அழுக்காகி இருந்தது ஒருத்தரும் உதவிக்கு வராதது கண்டு என்னை அறியாமல் கோவப்படேன். ஒரு இளைஞர் கொஞ்சம் போல பஞ்சு கொண்டு வந்தார் அதை தண்ணிரில் நனைத்து உறைந்து போன ரத்த கறைகளை சுத்தம் பண்ணினேன். அந்த பஞ்சு போதுமானதாக இல்லை. எனது கைக்குட்டையை தண்ணிரில் நனைத்து முடிந்த வரை சுத்த படுத்தினேன். பிறகு அதை வைத்தே அவரின் கைகளை சுற்றி விட்டேன். காட்பாடி சென்றதும் ஸ்டேஷன் மாஸ்டர் ரூம்ல முதலுதவி பெட்டி இருக்கும் அவர்களிடம் மருந்து வைத்து கொள்ளுங்கள் என்றேன். "அது எல்லாம் வேண்டம் சார் அவங்க எங்களுக்கு எல்லாம் உதவ மாட்டாங்க" என்றார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தது அதை சொல்லும் போதே ஒரு வித விரக்தியை அவரின் பேச்சில் தெரிந்தது. சரி டாக்டர் போய் பாருங்க காயம் ஆழமாக இருக்கும் போல இருக்கு என்றேன். சரி என்றார் இதிலும் அதே விரக்தி.

எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன் மனம் அவரின் இந்த நிலைமையை நினைத்து கேள்விகளை அடுக்கிக்கொண்டு சென்றது. தனக்கு எங்கு காயம் பட்டு இருக்கிறது என்று கூட தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியாமல் , ரத்த கரைகளை எப்படி சுத்தபடுத்துவது தெரியாமல் அவரின் கண்களை பறித்த இறைவனை திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் திட்ட மனம் வரவில்லை அதற்கு பதில் நன்றியை தான் சொன்னேன் அவருக்கு என்னால் முடிந்த உதவி செய்ததுக்கு.

காட்பாடி ரயில் நிலைத்தில் அவர் இறங்கினர் , ஓடி சென்று வலியின் திவிரத்தை கேட்டேன். இப்ப வலி இல்ல சார் என்றார். பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு டாக்டரிடம் செல்லுமாறு சொன்னேன். வேண்டாம் சார் என்று எதோ ஒரு ஆயில்மேன்ட் பெயரை சொல்லி அதை பூசினால் சரியாகிடும் என்றார். காயம் ஆழமாக இருக்கிறது எதுக்கோ நீங்க டாக்டர் பாருங்க என்றேன், இப்போதும் அதே போல விரக்தியின் சிரிப்பு. பார்க்கலாம் சார் உங்க உதவிக்கு நன்றி என்றார்.

எனக்கு புரிந்தது அவரிடம் பணம் இல்லை என்று. எனது பாக்கெட்யில் கைவிட்டேன் 120 ருபாய் இருந்தது. 100 ருபாய் எடுத்து அவரிடம் குடுத்தேன், வேண்டாம் என்று ரொம்ப மறுத்தார் , நான் விடாமல் அவரின் சட்டை பாக்கெட்யில் திணித்தேன். முதலில் டாக்டர் பாருங்க என்றேன் ரயில் கிளம்பியது. அவரிடம் இன்னொரு முறை இதே ரயிலில் வரும் போது சந்திக்கலாம் என்று சொல்லி விடைப்பெற்றேன்.

இறைவனுக்கு இன்னொரு முறை நன்றி சொன்னேன் அவருக்கு திரும்ப உதவி செய்ய வைத்ததற்கு.

ரயில் பயணங்கள் - 1

சென்ற வாரம் தங்கையின் கல்யாணத்தில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் சென்று இருந்தேன். மாலையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலையில் இருந்ததால் காலையில் நடக்கும் முகுர்த்தத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள சென்றேன். முன்பதிவின் இடம் கிடைக்காததால் பொது பெட்டியில் அமர்ந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். ரயில் நிலையம் சென்ற போது நீலகிரி எக்ஸ்பிரஸ் பொது பெட்டி நிரம்பி இருந்தது. அதில் பாதிக்கு பாதி வட மாநில ஆண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். உட்கார்வதற்கு இடம் இல்லாததால் முன்பதிவு பெட்டியில் ஏதேனும் இடம் காலியாக இருக்குமா என்று நப்பாசையில் ஒவ்வொரு பெட்டிளையும் ஒட்டி இருக்கும் சார்ட்யை பார்த்து கொண்டு வந்தேன். எல்லாம் புக் ஆகி இருந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி பார்க்கலாம் என்று அவர் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன்.

அடிக்கும் வெப்பத்திலும் கோட் போட்டு கையில் பெட்டியுடன் வருபவரை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம் இவர் தான் டிக்கெட் பரிசோதகர் என்று. அவ்வாறே ஒருவர் வந்தார் யாரேனும் முந்தி கொள்வார்களோ என்கிற பயத்தில் அவர் பெட்டியில் ஏறும் முன்னரே " சார் ஓபன் டிக்கெட் தான் ஏதேனும் பர்த் கிடைக்குமா" என்று பொய்யான சிரிப்பு சிரித்து கேட்டேன். "S9ல உட்காருங்க வரேன்" என்றார், அவருக்கு என்று ஒதுக்க பட்டு இருக்கும் சைடு சீட்டில் எனக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் காலியாக இருந்த ஒரு இடத்தில உட்கார்ந்தேன். அவரை பார்த்தேன் அவரின் கையில் ராஜேஷ்குமார் க்ரைம் நாவல். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒருவர் ராஜேஷ்குமார் நாவல் படிப்பதை பார்க்கும் போது என்னை அறியாமல் சந்தோஷ சிரிப்பு வந்தது. அதை அவர் கவனித்து விட்டார் போல ஏன் சார் சிரிகிரிங்க என்று கேட்டு தனது கைகுட்டையால் முகத்தில் துடைத்து கொண்டார். எனக்கு கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது " ஒன்னும் இல்ல சார் ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் நாவலை ஒருத்தர் படிக்கிறத பார்க்கும் போதும் நான் ராஜேஷ்குமார் நாவல் படித்த நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சேன்" என்ற உண்மையை சொன்னேன்.


ரசனை ஒற்றுமையோ என்னவோ இரண்டு பேரும் அரகோணம் வரும் வரை எங்களை பற்றி அறிமுகம், சொந்தபந்தம், வேலை, சேமிப்பு, படிப்பு, பொழுதுபோக்கு என்று இடைவேளை இல்லாமல் நீண்டு கொண்டு இருந்தது எங்கள் பேச்சு. அவரின் வயது 35 அல்லது 40 இருக்கும், ரொம்ப மரியாதையை குடுத்து பேசினார், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து இருந்ததால் அவரின் பேச்சில் மரியாதையை அவர் அறியாமல் வந்தது. டிக்கெட் பரிசோதகர் எனக்கு அடுத்த பெட்டியில் இடம் ஒதுக்கி தந்தார் இந்த முறை உண்மையான சிரிப்பு சிரித்து அவருக்கு நன்றி சொன்னேன். விடைபெறும் நேரம் என்பதால் அவரிடன் கை குலுக்கி சென்றேன். எனது சீட் நம்பர் தெரிந்து கொண்டவர் நிம்மதியாக துங்குங்க என்று சொல்லிவிடு அவர் தூங்காமல் பயணத்தை மேற்கொண்டார். அறிமுகம் இல்லாத ஒருவரிடம் அந்த ஒரு மணிநேரம் பேசியது நெருங்கிய நண்பன் இடம் பேசியதை போன்று இருந்தது.


எனக்கு குடுத்தது லோயர் பர்த் அங்கு சென்று பார்த்த போது வேறு ஒருவர் படுத்து கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் , இது என்னுடைய இடம் சார் என்றேன் மனிதர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் போல எழுந்ததும் என்னை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தார். " அது எல்லாம் முடியாது வேற எங்கயோ போய் படு" என்று அவர் பேசி கொண்டு இருந்தார். எனக்கு ஒன்றும் புரியல " சார் இது எனக்கு ஒதுக்கிய இடம் நீங்க படுத்து இருக்கிங்க தப்பு உங்க மேல தான் இருக்கு முதல்ல எழுந்துரிச்சு உங்க பர்த்ல போயப்படுங்க" என்று நானும் எரிச்சலுடன் பேசினேன். எனக்கு எந்த சங்கடமும் இல்லை படுப்பதற்கு. அதை அவர் கனிவாக சொல்லி இருந்தால் கண்டிப்பாக சரி என்று சொல்லி இருப்பேன் ஆனால் ஏதோ அவரின் இடத்தை நான் கேட்டது போல என்மீது கோவபட்டது என்னையும் கோவமடைய செய்தது . அவருக்கு எதிரில் படுத்து இருந்த ஒரு பெண்மணி என்னிடம் மேல் பர்த்ல படுத்கொங்க சார் இவரால மேல ஏற முடியாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக தெரிந்தார், " வேண்டுகோள சொன்ன கேக்குறேன் இவர் என்னமோ அதிகாரம் பண்றாரே?? . "மன்னிச்சிகோபா கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்ல இவருக்கு" என்று சொன்னார்.

ஓ நாம கூட கொஞ்சம் அவரசப்பட்டோம் என்று அவரிடம் வருத்தம் தெரிவித்து மேல் ஏறி படுக்க சென்றேன்.


என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்களை திறந்தால் அந்த போலீஸ்காரர் "வடகோயம்புத்தூர் ஸ்டேஷன் வந்துடுச்சு சார் எழுந்துருங்க" என்றார். மணி பார்த்தேன் காலை 4. நன்றி கூறி கீழே இறங்கினேன் சிலர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள். போலீஸ்காரர் வந்து எழுப்பியதை பார்த்தது நாளவோ இல்லை வேறு மாதிரி நினைத்தார்களோ என்னவோ ??


இறங்கிய பின் பார்த்தேன் அந்த பெரியவர் தலைக்கு அந்த பெண்மணி குல்லா மாட்டி விட்டு கொண்டு இருந்தார் பாசத்தின் பிணைப்பு ..

தனி மனித சுதந்திரம், MP3 Player அல்லது ஊளையிடுவது


தனி மனித சுதந்திரம் என்றால் என்ன ? உனது செயல் மற்றவர்களை துன்புருத்தாத எந்த ஒரு செயலும் அது தனி மனித சுதந்திரம். ஆனால் ஒருவர் தனது இஷ்டம் போல ஒரு பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு தெரியாமல் செய்யும் செயல் தனி மனித சுதந்திரம் ஆகுமா?

FM ரேடியோ, MP3 பிளேயர் உள்ள மொபைல் போனில் இருக்கும் சௌகரியம் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். தொலைதூர பயன்களில் நம்மை சுட்டு எரிக்கும் வெயிலோ அல்லது இரவில் தூக்கம் வராமல் பயணத்தை மேற்கொள்ளும் போது நமக்கு மட்டுமே கேட்கும் படி நமக்கு பிடித்த பாடல்களை ஹியர் போனில் கேட்டவாறு பயணத்தை ரசித்து கொண்டே செல்லலாம். ஆனால் இந்த மாதிரியான வரமே நமக்கு இம்சை ஆனால் ??

மின்சார ரயிலில் தினமும் பயணம் செய்வதால் புத்தகம் இல்லாத சமயங்களில் அவ்வபோது ஹியர் போனில் பாடல்கள் கேட்டு செல்வேன். கையில் எதாவது புத்தகம் இருக்கும் எனில் அன்று எனது சிந்தனை எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கும்.

நேற்று இரவு பணி முடித்துக்கொண்டு கிண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார வண்டியில் ஏறினேன். கையில் சாரு எழுதிய "முடு பனி சாலை". இந்த புத்தகத்தை இதற்கு முன்னர் இரண்டு முறை படித்து இருந்தாலும் திரும்ப படிக்க துண்டியது. புத்தகத்தை இரண்டு பக்கங்கள் கூட படித்து இருக்க மாட்டேன் எனக்கு பின்னால் இருந்த ஒரு அன்பர் "அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று தனது மொபைல் போனில் லௌட் ஸ்பீக்கர்ல போட்டுவிட்டார்.அவர்கள் பார்ப்பதற்கு முரட்டு ஆசாமி போல இருந்தார்கள். சந்தோசமாக பாடலை ரசித்தார்கள் என்பதை அவர்களின் வாய் முணுமுணுபு காட்டியது.

அவர்களின் சந்தோசம் என்பது என்னை எரிச்சல் அடைய வைத்தது. பெட்டியில் இடம் காலியாக இருந்ததினால் வேறு ஒரு இடம் மாறி உட்கார்ந்தேன். விட்ட இடத்தில் இருந்து ஆரமித்தேன், 10 பக்கங்கள் கூட தாண்டி இருந்து இருக்க மாட்டேன் "கருத்த மச்சான் " காதில் வந்து விழுந்து மண்டை காய வைத்தது. இப்பொழுது எனக்கு எதிரில் இருந்த இன்னொரு அன்பர். இங்கயுமா என்கிற கேள்வியுடன் அவரை ஒரு பார்வை பார்த்தேன், என்னை ஏற்எடுத்து பார்த்தவர் அந்த பாட்டுக்கு தனது கால்களில் தாளத்தை போட்டார். அவருடைய தாளம் என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தியது.

அவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒலியை அதிகமாக வைத்து பாடல் கேட்டு கொண்டு இருந்தார். எனது சிந்தனை எல்லாம் இப்பொழுது அந்த பாடலில் வரும் "ட்ட்யே ட்ட்யே" என்கிற BGM மேல் இருந்தது. இவரும் அந்த கோஷ்டி ஆள் போலவே இருந்தார். இரவில் செல்லும் அனைத்து ரயில் வண்டிகளிலும் பெண்கள் பெட்டியில் ஒரு போலீஸ்காரர் இருப்பார் இது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இதை பேசாமல் பொது பெட்டியிலும் அமல்படுத்தினால் தேவலாம் இந்த மாதிரியான இம்சைகளிடம் இருந்து நம்மை காப்பற்றி கொள்ள. கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு அவரிடம் படலை நிப்பாட்ட சொல்ல நினைத்தேன். அதற்கு வேலையில்லை என்பது போல அவருக்கு யாரோ போனில் கூப்பிட்டர்கள்.
அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது எனக்கு அவரின் வாயால் "ஹல்லோலோ" என்று அவர் போட்ட சத்தம் அந்த பெட்டியில் இருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு அவரின் பேச்சை அந்த பெட்டியே கேட்கும் படி ஊளையிட்டார் . படிக்கும் சுவாரசியமே எனக்கு போய்விட்டது , புத்தகத்தை மூடி வைத்து கதுவு அருகில் வந்து நின்று கொண்டேன். ரயில் செல்லும் வேகத்துக்கு காற்று பலமாக எனது முகத்தில் மோதியது இருந்தாலும் அந்த காற்றில் இருந்த ஈர பசையை ரசித்தேன்.


திரும்பி பார்த்தேன் ஊளை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ...