~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

விட்டுவிட்டேன்








  இதே போன்று உங்களுக்கும் ஏற்படலாம் அல்லது  ஏற்படாமலும் போகலாம் 




சி நாட்களாக வலது காலில் வலி அதிகமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக சில நாட்கள் காலில் வலி வந்து பாடாய் படுத்திவிடும். தூங்கும் போது கால்களை நேராக வைத்து படுக்க முடியாது. வலது கால் முழுக்க வலி இருந்து கொண்டே இருக்கும். எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் வலியுடன் தூங்கிய நாட்கள் அதிகம். ஏன் எதனால் என்று தெரியாமல் இருந்தேன். 5 மருத்துவர்களை மாற்றி மாற்றி சந்தித்த போது அனைவரும் வலிநிவாரணி மருந்தையே தந்தார்கள். ஒருவர் இது கண்டிப்பாக யானைக்கால் வியாதின் ஆரம்பம் என்றார். அவர் எழுதி குடுத்த மாத்திரையை ஒரு மாதம்  உட்கொண்டேன் ஒரு ப்ரோஜனமும் இல்லை. சென்ற இடம் எல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  நண்பர்கள் சிலரிடம் இதை பற்றி பேசியபோது இது நரம்பு சம்பந்தபட்டது அதனால் அதற்குண்டான மருத்துவரை பார்க்க சொல்லி பரிந்துரைத்தார்கள். 





மருத்துவர்களை பார்த்து பார்த்து ரொம்ப சலித்து போனதால் நரம்பியல் மருத்துவரை சந்திப்பதை சிறிது காலம் தள்ளி போட்டு கொண்டு வந்தேன். இன்நிலையில் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருவதை நிறுத்த முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். டீ , காபி, டிபன், சாப்பாடு என்று எதை சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது வாந்தியாக வெளிவந்துவிடுகிறது. வெளியே எங்கு சென்றாலும் தண்ணி கூட குடிப்பது இல்லை. வர வர உடல் நிலை மோசமாவதை கண்கூடாக பார்த்தேன் முன்றே வாரங்களில் 4 கிலோ கம்மியாகி போனேன். 

 ஏன் எதற்கு என்று தெரியாமல் வெறுப்பின் உச்சியில் சிலநாட்கள் இருந்தேன் , மாத்திரை சாப்பிட சாப்பிட அதன் மேல் ஒரு வித வெறுப்பு உண்டானது .  மனைவி ரொம்ப பயந்துவிட்டாள் சென்ற முறை ஊருக்கு சென்ற போது இதன் தாகம் அதிகமாக இருந்தது. அங்கு இருக்கும் ஒரு மருத்துவரை பார்க்கும் படி என்னை வற்புறுத்தினாள், சரி என்று அவரை சந்திதேன் அதும் இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். எனது உடன் நிலையை பற்றி அவரிடம் முழுவதுமாக சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.  

"நீங்க புகைபிடிபவரா  ?" 

ஆம் என்று ஒத்து கொண்டேன்.  உங்களது  அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம் என்று அவர் சொல்லிய விளக்கங்களை  கேட்ட போது என்னை அறியாமல் உயிரின் மேல் ஒரு வித பயம் வந்துவிட்டது.

புகைபிடிப்பதால் கேன்சர் மட்டுமே வரும் என்று நிறைய பேர் நினைத்து கொண்டு இருகிறார்கள். அது தவறு உங்களுக்கு அல்சர், அஜீரண கோளாறு, முச்சு விடுவதில் சிரமம், கால் வலி போன்று நிறைய வியாதிகள் வருவதற்கு முக்கியமான காரணம் இதுதான் .  உங்கள் கால் நரம்புகளில் செல்லும் இரத்தம் தடைபடும் போது தான் வலியை உணருவீர்கள். இதற்கு ஒரு வழி புகைபிடிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்றார். 

உடனே நிறுத்துவது சிரமம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுகிறேன் என்றேன்.  அது எல்லாம் கூடாது நீங்கள் இப்பவே நிறுத்த வேண்டும், இல்லை என்றால் உங்கள் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றவர் உதரணத்துக்கு ஒன்றையும் சொன்னார். என்னை போன்றே ஒருவர் கால் வலி  சிகிச்சைக்காக வந்தார் அவருக்கும் இதே போன்று வலி இருந்தது. மருத்துவர் எவ்வளவோ முறை எடுத்து சொல்லியும் புகைப்பதை அவர் நிறுத்தவேயில்லை அதனால் அவரின் ஒரு கால் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, எடுத்தும் விட்டார். 

இதை கேட்கும் போதே நினைத்து கொண்டேன் இந்த சனியனை விட்டோழிய வேண்டும் என்று. 

அதை செயல்படுத்த என்னால் முடியவில்லை. கண்டிப்பாக நான் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறேன். எப்பொழுதும் மனம் புகைப்பதை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறது . எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை, காலையில் எழுந்தது முதல் சிந்தனைகள் எல்லாம் அதிலே முழ்கி இருக்கும். எப்போது வெளியே போகலாம் புகைக்கலாம் என்று சிந்தனைகள் சிதறடித்து இருக்கும். எனது நிலையில் நான் உறுதியாக இருக்கவேண்டும் என்று மிக தீவிரமாக இருக்கிறேன். புகைப்பதை நிறுத்துவது அவ்வளவு எளிது அல்ல என்பதை 3  நாட்களில் தெரிந்துகொண்டேன். குடும்பத்தை நினைக்கும் போது எனது செயலில் நான் உறுதியாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பு அதிகமாகி கொண்டு இருக்கிறது. வெகு சிரமத்துக்கு பிறகு இப்பொழுது முழுவதுமாக நிறுத்தி விடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.  நிறுத்தியவுடனே எனது உடலில் பல பல மாற்றங்களை நான் சந்திப்பேன் என்றால் அது சுத்த பொய். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேரும். அதே சமயம் மனதை கட்டுபாடுடன்  வைத்துகொள்ள வேண்டும். தவறை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை நான் பயன்படுத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 

 நண்பர்களுடன் நானும் ரவுடி தான் என்கிற திமிரில் ஆரமித்த பழக்கம், 15 ஆவது வயதில் இருந்து தினமும் என்னுடன் வந்துகொண்டு இருக்கிறது. இது தவறு என்று தெரிந்தே அதனுடன் உறவாடிய நாட்கள் அதிகம். வாழத்தான் வேண்டும் என்கிற நிலை வரும் போது பிரிவது நன்று தான். 

விட்டுவிடுவோம் புகையை  


With love
Romeo ;)

அப்படி இப்படி





தமிழ்படம் பார்த்து வயறு வலிக்க சிரித்தேன். படம் வெளிவருவதற்க்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு, அதை மறக்காம பூர்த்தி பண்ணி இருக்காங்க.
இந்த படத்தை பார்த்த 95% மக்கள் சூப்பர்ன்னு தான் சொல்லுறாங்க. சிலர் மட்டும் படம் குப்பைன்னு சொல்லுறாங்க. வேட்டைக்காரன் படத்தை சூப்பர்ன்னு சொன்ன ஒரு நண்பருக்கு இந்த படம் குப்பையாம்!!!!
அட ராமா நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா ??? அவன் சொன்ன ஒரு கண்டுபுடிப்பு தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"மச்சி படத்துல கதையே இல்லடா. மத்த படத்தோட சீன் எல்லாம் உருவி இதுல சேர்த்து இருக்காங்க" எவ்வளவு நாள் கழிச்சு இந்த படத்தை பத்தி ஒரு கண்டுபுடிப்பு !!!!!

"இனிமேல நீ எந்த படத்தையாவது பத்தி பேசுன அன்னைக்கே நமக்குள்ள இருக்குற நட்பு முறிஞ்சிடும்டா" சொல்லி போன் கட் பண்ணினேன்.

--------------------------------------------------------------------------------------------

இந்த மெகா சீரியல் தொல்லை வர வர ஓவரா ஆகிட்டு இருக்கு. சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது. வீட்டுல அப்பா கூட அடிமை ஆகிட்டாரு என்பதுதான் வேதனை :(. ஊருக்கு போனபோது தங்கமணி சொன்னா "7.30 - 8.30 நான் சீரியல் பார்ப்பேன் நீங்க குழந்தையை பார்த்துகோங்க"

அப்பவே பையனுக்கு ஒரு பாட்ட பாடி காமிச்சேன்

"உன்னை சொல்லி குதம் இல்லை,
என்னை சொல்லி குதம் இல்லை
காலம் செய்த கோலமடா "

என்ன?? என்றாள் தங்கமணி.

மீ தி எஸ்கேப்ன்னு ஓடிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------

சென்னை மாநகர் பேருந்துல நடத்துனர் என்று ஒரு சீட் இருக்கும். எவன் டிக்கெட் வாங்கினா என்ன வாங்காட்டி என்ன நம்ம சீட் நல்லா இருக்கான்னு பார்த்து உட்கார்ந்து இருப்பாங்க. போன வாரம் நான் வந்த பஸ்ல கூட்டம் இல்ல டிரைவர் சீட்க்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு பேமிலி உக்கார்ந்து இருந்தாங்க. அவங்க டிக்கெட் வாங்க கைல காசு வச்சு இருந்தாங்க ஆனா நடத்துனர் அவர் சீட்ல இருந்தபடியே காசு குடுத்து விடுங்க என்றார். அந்த நபர் அது எல்லாம் முடியாது நீங்க இங்க வந்து வாங்கிகோங்க என்றார், இதுல என்ன தப்பு இருக்கு?? அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார்!!. நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.

கொஞ்சம் கூட டென்ஷன் பண்ணாம அந்த நபர் தன்னோட ID கார்டு எடுத்து காமிச்சு சொன்னார். இப்ப எனக்கு டிக்கெட் தரலைனா அப்பறம் நீ கன்சூமர் கோர்ட்க்கு வரவேண்டி இருக்கும். அவ்வளவு தான் அந்த நடத்துனர். கப்சிப்ன்னு ஆகிட்டார். அப்பறமா தான் தெரிஞ்சது அவரு ஒரு லாயர்ன்னு.

எனக்கு ஒரு கேள்வி எழுந்துச்சு. தமிழ்நாட்டுல சென்னைல மட்டும் தான் நடத்துனர்க்கு என்று தனியாக ஒரு சீட் குடுத்து இருக்காங்க. அது ஏன் ?? மத்த மாவட்டதில் இந்த மாதிரி எல்லாம் இல்லையே. ஏன் ??

--------------------------------------------------------------------------------------------
அடுத்த இடைதேர்தல்க்கு ஆளும் கட்சி ரெடி பண்ணிடாங்க. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு பொதுதேர்தலுக்கு அதுக்குள்ள இன்னும் எத்தனை பேரு கோபாலபுரம் வீடுக்கு மாற போறாங்கன்னு தெரியல. தனது கட்சி ஆளுங்க ஜகா வாங்குறத பொறுக்காமல் அம்மாவே ரோடுக்கு வந்துட்டாங்க.
அட நான் சொல்லுறது விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் அம்மையார் கலந்துகொள்ள போறாராம். கட்சிய காப்பாத்த எப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டியதா இருக்கு பாருங்க .

--------------------------------------------------------------------------------------------

தல படம் ரிலீஸ் ஆகிடுச்சு.
எப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் "அசல்" படம் பதிவர்களுக்கு "அவல்".

--------------------------------------------------------------------------------------------
போன பதிவை படிச்சிட்டு நண்பன் பேசும் போது கேட்டான் " நீ உண்மையிலே அந்த லேடி கிட்ட பேரு கேக்கலையா?? என்னால நம்ப முடியலையே" ரொம்ப டவுடா கேட்டான்.
ஊரபட்ட பொய் சொன்னா நம்புறாங்க ஒரு உண்மைய சொன்னேன் அத நம்பமாட்டேன்னு சொல்லுறாங்க. நம்புங்கபா நம்புங்க எனக்கு அவங்க பேரு தெரியாது.

--------------------------------------------------------------------------------------------

ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவரும் ராஜேஷ்குமார் தொடர்கதை இனி, மின்மினி படிக்க படிக்க சுவாரசியாம இருக்கு. என்னோட கணிப்பு எல்லாம் தோற்று கொண்டு இருக்கிறது என்பது உண்மையே.
நாவலா இருந்தா சுவாரசியம் தாங்காம கடைசி பக்கம் போய் படிச்சிடுவேன். இது தொடர்கதை என்பதால் வாரா வாரம் காத்து கொண்டு இருக்கவேண்டியதா இருக்கு. ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் கதையை படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.

--------------------------------------------------------------------------------------------


திரும்பி பார்க்கிறேன் - 20/12/2009


மனைவி, மகனை பார்க்க ஊருக்கு போயிட்டு இருந்தேன், கரூர் கிட்ட வரும் போது எனக்கு எதிரில் இருந்த ஒரு அன்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டார், நானும் சரி என்றேன்.

நீங்கள் எதற்காக வாழ்கிரிகள் ?? என்றார்.

என்னடா ஊருக்குள்ள இன்னும் கால் அடி எடுத்து வைக்கல அதுக்குள்ள 71/2 நம்மள தேடி வருதேன்னு நினைத்தேன்.

எதுக்காக கேக்குறிங்க ?

நான் ஒரு ப்ரொஜெட் பண்றேன் அதுக்காக வேணும் என்றார். இதுவரை 65 நபர்களிடம் இந்த கேள்வியை கேட்டாராம் அதில் 4 வயது ரொம்ப ஏழ்மையான பையன் சொன்ன பதிலும் 65 வயது ரொம்ப பணக்காரர் ஒருவர் சொன்ன பதிலும் ஒரே மாதிரி இருக்கு, வாழ்கையின் அர்த்தம் தெரியாமல் பதில் சொன்ன 4 வயது பையனும் , வாழ்ந்து முடித்த 65 வயது பெரியவரும் பதில் எப்படி ஒன்றாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்க இப்பவே பதில் சொல்ல வேண்டும் அவசியம் இல்ல, என்னோட நம்பர் தரேன் அதுக்கு SMS மட்டும் பண்ணுங்க போதும் என்று அவரின் நம்பர் குடுத்தார்.

சார் நீங்க கேட்ட கேள்வி அருமையானது தான், இந்த கேள்வியை வேறு மாதிரியும் பார்க்கலாமா ?

எந்த மாதிரி ?

நீங்க எதற்கு பிறந்திர்கள்ன்னு வச்சுக்கலாமா?

அப்படி கூட வசிக்கலாம்.

அப்ப இந்த கேள்வியை எனது அப்பா , அம்மாவிடம் தான் நீங்க கேட்கணும், அவங்க என்ன சொல்லுவாங்க அவங்க அப்பா அம்மாவிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும்ன்னு, இப்படியே போன தலைமுறை, அதற்கு முந்தின தலைமுறைன்னு போயிட்டு இருக்குமே தவர பதில்வராது.

சற்று நேரத்தில் அவரின் பேச்சு வேறு பக்கமாக மாறியதை புரிந்து கொண்டேன். இயேசு பற்றி ரொம்ப சில்லாகி பேசினார், அவர் கண்டிப்பாக இந்த பூமியில் திரும்ப உயிர் பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார். நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல, கோவில்க்கு போகணும்ன்னு தோணுச்சுனா போவேன், வேண்டாம்ன்னு தோணுச்சுனா போகமாட்டேன், ஒரு தடவை கோவிலுக்கு அருகில் சென்று ஏனோ போக பிடிக்காமல் எனது மனைவியை மட்டும் சாமி கும்பிட்டுவா என்று அனுப்பிவிட்டு நான் வெளியில் இருந்தேன். அப்படிபட்ட ஆளு நான் என்கிட்ட பிரசங்கம் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு அவருக்கு தெரியல. சிரிது நேரத்தில் கரூர் ஸ்டேஷன் வந்தது வெளியில் வந்ததும் நான் செய்த முதல் வேலை Xavier என்கிற பெயரை எனது மொபைல இருந்து அழித்தது தான்.

----------------------------------------------------------------------------------------

பர பர என்று ஒரு 1000 சரம் பட்டாசு வெடிச்ச மாதிரி இருந்துச்சு இந்தியா vs ஸ்ரீலங்கா முதல் கிரிக்கெட் மேட்ச். நினைச்சு பார்க்க முடியாத ஸ்கோர் சேஸ் பண்ண ஸ்ரீலங்கா வீரர்கள் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது. தில்ஷன் ஆட்டத்தில் அனல் பறந்தாலும் சங்ககரா ஆட்டத்தில் தான் இடியுடன் கூடிய மின்னல் இருந்துச்சு. ஒரு கட்டத்துல வெறுத்து போய் சேனல் மாதி வேற சேனல் பார்த்தேன் திரும்ப neo sports சேனல் பார்த்தா இந்த இரண்டு பேரும் அவுட். இது நல்ல இருக்கேன்னு கொஞ்சம் நேரம் வேற சேனல் பார்க்கிறது , பிறகு கிரிக்கெட் சேனல்க்கு தாவ்றதுன்னு இருந்தேன், நினைத்த மாதிரியே விக்கெட் போய்ட்டு இருந்துச்சு, இந்தியாவும் ஜெய்ச்சிடுச்சு.அடுத்த மேட்சுல இதே மாதிரி பண்ணினேன் ரிமோட் போச்சு, இந்தியா தோத்துடுச்சு. இதுல இருந்து ஒண்ணு தெரியுது ரிமோட்க்கும் கூட இந்தியன் டீம் நிலைமை தெரிஞ்சி இருக்கு. அதுக்கே பொறுக்காம பனால் ஆகிடுச்சு
.

-----------------------------------------------------------------------------------------------



மேலே இருக்கும் படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள், மொபைல்ல கிளிக் பண்ணிய இடம் லயோலா கல்லூரி முன்பு, சாரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள ஷேர் ஆட்டோல போயிட்டு இருந்தேன் அப்ப தான் இந்த பசங்க அபாயம் தெரியாமல் ரொம்ப மும்மரமா தம் அடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க. வீட்டில் உபயோகபடுத்தும் மின்சாரத்தை தொட்டாலே நாம காலி இவங்க கால் வச்சிக்கிட்டு இருக்குற இடம் ஒரு ஜங்ஷன் பாக்ஸ் உயர் அழுத்தம் உள்ள மின்சாரம் இருக்கும் இடம் ஷாக் அடிச்சிதுன்னு வைங்க ஆளே கருகி போய்டுவான். இதுல இன்னொரு கொடுமை அந்த மஞ்சள் நிற தார்பாய் இடத்துக்கு கீழே ஒரு டீ கடை இருக்கு.

ஒரு வார்த்தை இருக்கு படிச்சவனோ இல்ல படிக்காதவனோ சொல்லுவான் ஏதாவது ஒரு இடத்தில இதை கேட்கலாம், அது என்னனா

"படிச்சி இருக்கல அறிவு இல்ல ?? "

இதை இவர்களுக்கு நான் இங்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

------------------------------------------------------------------------------------

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஒரு பாடல் இருக்கிறது " என் ஜன்னல் வந்த காற்றே " ரொம்ப மெலோடியா தொடங்கும் , அப்படியே வெஸ்ட்டன் அப்படியே செம குத்து . கேக்கும் போதே ரொம்ப வித்தியாசம் இருக்கு யுவன் மியூசிக். ரோஷினி, பிரியா , திவ்யா பாடி இருக்காங்க அவங்க அவங்க ட்ரக்கு ஏத்த மாதிரி நிறைய வித்தியாசதோட பாடி இருக்காங்க. மறக்காம கேளுங்க அப்பறம் அதை மறக்க மாட்டிங்க. 3 விதமான பெண்கள் , 3 விதமான பீட்ஸ் . கேட்கும் போதே தோணுது படத்தில் வரும் அந்த 3 பெண்களின் கேரக்டர் ஒரு பாடலில் சொல்லிவிட்டார்கள் என்று .




ரயில் பயணங்கள் - 3


ஒரு முறை தப்பு செய்தல் அதை தெரியாமல் செய்து விட்டதாக எண்ணி மன்னித்து விடலாம், ஆனால் அதுவே இரண்டு மூன்று முறை நடந்தால்??

நேற்று மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று.

தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் 40 மூட்டை ரேசன் அரிசி சிக்கியது: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்

இந்த நியூஸ் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது. ஏதோ பெரிய விஷத்தை இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்று கொட்டை எழுத்துகளில் இருக்கிறது. தினமும் சென்னையில் இருந்து சூலூர்பேட்டை செல்லும்அனைத்து மின்தொடர் ரயில் வண்டிகளில் சின்ன சின்ன பைகளாக எப்படியும் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதுஎன்பதை கண் கூடாக பார்கிறேன் .

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருந்து கும்மிடிபூண்டி மார்கமாக சூலூர்ப்பேட்டை செல்லும் மின்சார ரயில் வண்டியில் நடக்கும் அநியாங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்கிறது, அந்த அரிசி எல்லாம் மொத்தமாக அந்த ஏழை எளிய மக்களுக்கு செல்கிறது என்றால் அது சுத்த பொய்.

சென்னை மாநகரில் இருக்கும் முக்கால் வாசி ரேஷன் கடைகளில் முன்னால் ஒரு பெண்மணி பார்ப்பதற்கு ரொம்ப சாது போல அல்லது எதையோ எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பார். அரிசி வாங்க வரும் மக்கள் யாராவது ஒருவரை எதிர் பார்த்து கொண்டு இருப்பார். 1 ருபாய் குடுத்து அரிசி வாங்கும் ஒருவரிடம் நைசாக பேசி அந்த அரிசியை 3 ருபாய் முதல் 5 ருபாய் வரை அவர்களிடம் இருக்கும் அரிசியை இவர் வங்கி கொள்வார்.

இப்படி வாங்கும் அரிசி எல்லாம் இரண்டு வழித்தடங்களில் ஆந்திரா மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. திருத்தனி மார்கமாகவும், கும்மிடிபுண்டி மார்கமாகவும் மின்சார ரயில் வண்டியில் கடத்துகிறார்கள். இதற்கு ரயில்வே போலீசில் வேலை செய்யும் பல கருப்பு ஆடுகள் துணை போகிறது. சென்ற மாதம் வெளியான ஒரு தினசரி பத்திரிகையில் போலீஸ்காரர் ஒருவர் மாமுல் வாங்கி அதை தனது தொப்பிக்குள் மறைத்து வைப்பதை படத்துடன் வெளியிட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் நடக்கும் ஒன்று.

சூலூர்ப்பேட்டை செல்லும் வண்டியில் இவர்கள் அதை எடுத்து செல்லும் முறையே வேறு. யாரும் அதை சாக்குமுட்டையில் அடைத்து செல்வதுயில்லை. கிடைக்கும் துணிபை அல்லது மீன் சுமந்து செல்லும் குண்டாவில் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தான் எடுத்து செல்கிறார்கள். ஒருவர் கண்டிப்பாக 100 கிலோக்கு கம்மியாக எடுத்து செல்வதுயில்லை.


ரயில் வண்டியில் இவர்கள் எடுத்து செல்லும் போது அந்த மூடைகளை சீட்க்கு அடியில் பதுக்கி வைத்து விடுகிறார்கள், ரயில் வண்டியோ ஸ்டேஷன்னில் நிற்பது ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கும் அதற்குள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் ஏத்தி விடுவார்கள், (இதை ஏற்றுவதற்கு என்று ஒருவர் துணைக்கு வருவார்). இந்த கடத்தல் தொழிலை முழுக்க முழுக்க செய்வது பெண்கள் என்பது தான் கொடுமை. பார்ப்பதற்கு ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல இருக்கும் அவர்களின் தோற்றம். சீட்டு அடியில் பதுக்கி வைத்த பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி கதவு ஓரத்தில் உட்கார்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் பார்வை எல்லாம் அந்த அரிசி மூட்டையின் மேல் தான் இருக்கும்.

நம் கண்முன்னே நடக்கும் இந்த கொடுமையை தட்டி கேட்ட முடியாது. கேட்டால் அவ்வளவு தான் அங்கேயே மானத்தை வாங்கி விடுவார்கள். அவர்களின் அர்ச்சனையை காது குடுத்து கேட்டக முடியாது.

இந்த கடத்தல் தொழில் பற்றி எனக்கு முதலில் ஏதும் தெரியாமல் ஒரு பெண்மணிக்கு உதவி செய்து இருக்கிறேன். பார்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தார் , துணி மூட்டை போல ஒன்றை சுமந்து வந்தார். அதை இறக்கி வைக்க கொஞ்சம் உதவினேன். எனது செயலை சிலர் மர்மமாக பார்த்தார்கள் அப்பொழுது எனக்கு தெரியவில்லை இது எல்லாம் கடத்தல் என்று . அந்த பெண்மணி எல்லா சீட்க்கு அடியலயும் அதை பதுக்கி வைத்தார், அடுத்த நாள் இதே போன்று அவர் செய்தார் , அப்போது தான் கொஞ்சம் சந்தேகபட்டேன், நண்பன் ஒருவனிடம் இதை பற்றி கேட்கும் போதுதான் தெரிந்தது இந்த கடத்தல் எல்லாம்.

கடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட தான் இதைபோன்று. இந்த மார்கமாக செல்லும் வண்டிகளில் குறைந்தது 20 பேர் இந்த மாதிரியான கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதை எல்லாம் எப்படி தடுக்க போகிறார்களோ. ஆண்டவனுக்கே வெளிச்சம் ..

திரும்பி பார்கிறேன் - 07/12/2009









சொந்த வீடு கட்டி குடியேறுவது என்பது எவ்வளவு பெரிய வேலை. கடந்த 6 மாதமாக இருந்த டென்ஷன் எல்லாம் ஒரு வழியாக முடிந்து நேற்று எங்களின் புதிய வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்தி புதிய வீட்டில் குடி வந்துவிட்டோம். அப்பா அம்மாக்கு அளவில்லா மகிழ்ச்சியை குடுத்தது இந்த நிகழ்ச்சி. அப்பாவின் ஆசை என்பது ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே, 40 வருடங்கள் ஆகி விட்டது அவர் சென்னை வந்து. ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர், அவரின் ஆசை நிறைவேறியது .

வீட்டிற்கு அப்பா அம்மாவின் பெயர் வைத்துளோம்.

அன்பாலே அழகான வீடு , ஆனந்தம் அதற்குள்ளே.......
----------------------------------------------------------------------------------

போன வார ஹாட் டாபிக் சேவாக் தான். மனுஷன் என்ன அடி அடிக்கிறார் ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பே வந்து விட்டது அவர் அடிக்கும் பௌண்ட்ரி பார்த்து . பாவம் குலசேகரா தான் அவர் பவ்லிங் போட்டாவே அது எல்லை கோட்டை தண்டி தான் செல்கிறது. சங்ககார முகத்தில் சந்தோசத்தை பார்க்கவே முடியவில்லை.
ஒரு சில சமயம் இவரின் பேட்டிங் ஸ்டைல் பார்த்து வாய் அடைத்து போயிருக்கிறேன் , பல சமயம் சொற்ப்ப ரன்னில் அவுட் ஆகும் போது
ஏன்டா இவரை இன்னும் டீம்ல வச்சிருக்காங்க என்றே தோன்றும்.

எதுவாக இருந்தாலும் சரி இவரை பார்த்து எல்லா டீம்முக்கும் ஒரு பயம் இருப்பது என்னவோ உண்மைதான்.

----------------------------------------------------------------------------


ரேணிகுண்டா படத்தை பார்த்தேன். டிரைலர் பார்க்கும் போது இருந்த கற்பனையில் பாதி அளவே படத்தில் இருக்கிறது. ஆனால் படத்திற்கு செம ஓபனிங் என்றே சொல்லலாம்.

திரைகதையில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது. படத்தின் எலும்பு சக்தியின் ஒளிப்பதிவு தான். பர பர சீன் எல்லாம் செம கிளாசா இருக்கு. அதும் ஜானி போடும் அந்த சண்டை கட்சியில் இவரின் கேமராதான் ஸ்டன்ட் மாஸ்டர். கால் ஊனமுற்ற பையன் என்னமா நடிச்சி இருக்கான். காமெடி , ரவுடி என்று அவன் செய்யும் சேட்டைகள் பல பல.

இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் இதை விட நல்ல படத்தை இதை விட தரமானதாக தர முடியும்.

ஒரு தடவை பார்க்கலாம். விரிவான விமர்சனத்துக்கு தல கேபிள் சங்கர் பதிவை பார்க்கவும்.

------------------------------------------------------------------

ஒரு சொல்லை ஒருவர் எத்தனை முறை சொன்னால் கேட்க புடிக்கும் ? ஒரு விளம்பரத்தை எத்தனை தடவை பார்த்தால் புடிக்கும் ? ஒரு பாடலை எத்தனை தடவை கேட்டால் புடிக்கும்??

எல்லாவற்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா !!

சாப்பிட சாப்பிட அமுதமும் நஞ்சு ஆகும் என்பது மாதிரிதான் இருக்கிறது இந்த Tata DOCOMO விளம்பரம். சேனல் திருபினால் docomo , docomoன்னு சொல்லுறத கேக்கும் போதே நம்ம மண்டைல யாரோ டொக்கு டொக்குன்னு கொட்டுற மாதிரி இருக்கு. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆரமிக்கும் இந்த விளம்பரம் தாம்பரம் வரை ஒவ்வொரு ரயில் நிலையம் வரும் போது கேட்டு கொண்டு இருக்கும். முதலில் இந்த விளம்பரம் வந்த போது ரொம்ப வித்தியாசமான சவுண்டா இருக்கே என்று விரும்பி பார்த்தேன். எங்க போனாலும் இந்த ஜிங்கல்ஸ் கேட்டு கேட்டு எரிச்சல் தான் இப்பொது வருகிறது. அதும் அந்த Friends Train என்கிற விளம்பரம் வரும் போது எல்லாம் எங்க இருந்துதான் எனக்கு அவ்வளவு எரிச்சல் வருமோ தெரியாது. டூ ட் டூ , டூ ட் டூ , டூ ட் டூ என்று இவர்கள் சொல்லுவதை கேட்கும் போது இவர்களிடம் "டூ" விட வேண்டும் என்கிற எண்ணம் தான் வருகிறது.

இப்போ புதுசா UNINOR என்கிற ஒரு மொபைல் கம்பெனி சென்னையில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது, இவர்கள் என்ன பாடுப்படுத்த போறார்களோ ..
----------------------------------------------------------------------

இன்னைக்கு படிச்சது போதும் நாளைக்கு திரும்ப வந்து பாருங்க. புது பதிவு இருந்தா அத படிங்க, புதுசு இல்லை என்றால் ????






















இதையே படிச்சிட்டு போங்க..

கார்த்திகேயனுடன் ஒரு சந்திப்பு




சில சந்திப்புகளை நான் தவற விட்டுருக்கிறேன் ஒன்று அது எனக்கு பிடிக்காமல் இருக்கும் அல்லது அந்த சந்திப்புக்கு நான் தேவையில்லாதவன் வேறு வேலைகள் என்னை ஆட்கொள்ளும்.ஆனால் நண்பர் கார்த்திகேயன்யுடனான
சந்திப்பை தவிர்க்க கூடாது என்கிற முனைப்பில் இருந்தேன், அது நேற்று நிறைவேறியது.


கார்த்திகேயன் "கீதப்பிரியன்" என்கிற தலைப்பில் எழுதி வருகிறார். ஷார்ஜாவில் வேலை செய்பவர், இந்தியாவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தான் வந்துள்ளார். வந்த முதல் நாளே அவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டேன். அவரின் ஹைதரபாத் பயணத்தால் நேற்றுதான் சந்திக்க முடிந்தது.

மாலை 8 மணியளவில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து என்னை பிக் அப் செய்ய வண்டியுடன் வந்து இருந்தார். சுய அறிமுகத்துக்கு பிறகு அவரின் நண்பர் என்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார் என்றார். நேராக அவரின் நண்பர் கடைக்கு சென்றோம், பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் பக்கத்தில் இருந்த சின்ன ரெஸ்டாரண்ட் முன் நிறுத்தினர், உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் ஏதோ ஒரு மளிகை கடை அல்லது Stationary கடையாகதான் இருக்கும் என்று நினைத்தேன்


.

Buddha Hut என்று மங்கள் வெளுச்சதில் இருந்த போர்டு எங்களை வரவேற்றது, கடைதான் சிறியது ஆனால் உள்ளே இவர் செய்து இருக்கும் உள் கட்டமைப்பு பார்த்து வாயை பிளந்தேன். உண்மையில் அருமையான இருக்கிறது உள் கட்டமைப்பு.


ராஜகோபால் என்பது நண்பரின் பெயர், பெயர் தான் பழசு பார்க்க இளமையாக இருக்கிறார் தோற்றத்தில், அருமையாக சமைக்கிறார். அவரின் தொழில் எல்லாம் சிறுவர் முதல் இளைஞர் வரை அவரின் கடைக்கு இழுபதுதான் தான் குறி. அங்கு இருக்கும் ஐட்டம் எல்லாம் எனது வாழ்நாளில் இதுவரை கேள்விப்படாதது. வாயில் நுழையாத பெயர்கள்தான் லைட் அண்ட் டேஸ்டி உணவுகள்.

அவர் என்னிடம் பேசிய முதல் வரி " உங்கள எங்கையோ பார்த்து இருக்கேன்" . You too Rajagopal !!!! என்றது மனம். அது என்னமோ தெரியல சிலர் என்னை பார்க்கும் போது இந்த வார்த்தையை முதலில் கூறுவது அதிகமாகி கொண்டே வருகிறது ( ஒருவேளை நான் அழகாகி கொண்டே வருவதால் இருக்குமோ??? ஹி ஹி ஹி No Tension please ).

அருமையான Sandwich செய்து குடுத்தார், ரொம்ப லைட் மற்றும் சுவை .. ஹ்ம்ம் ஹ்ம்ம் பல்லாவரம் ஏரியா மக்கள் கண்டிப்பா இவரின் கடைக்கு ஒருமுறை உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு செல்லுங்கள் மாலை வேளையில் அருமையான உணவை குழந்தைக்கு வாங்கி குடுங்கள். அங்கு இருந்து கிளம்பும் போது சிறுவர் சிறுமியர் கூட்டம் அனைத்து இடங்களை ஆக்கிரமித்து கொண்டது. பேச்சு வாக்கில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு பதில் தராமல் மழுப்பிவிட்டார் , கேள்வி என்னவென்றால் கல்லா பெட்டி அருகில் துப்பாக்கி ஒன்றை மாட்டி வைத்து இருந்தார். " பாஸ் அந்த துப்பாக்கிய குருவிக்காரன் யாரவது கிட்ட இருந்து சுட்டிங்களா" என்றேன் சிரித்தாரே தவிர அதற்கு பதில் சொல்லவேயில்லை.

அடுத்த முறை பார்க்கும் போது கண்டிப்பாக பதில் வாங்கிவிடவேண்டும் .

அவரிடம் இருந்து விடைப்பெற்று நண்பர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றோம். அவரின் மனைவி , குழந்தை வர்ஷினி, அவரின் மச்சினன் ஹரி சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், பிறகு ஹரி அவர்களின் சொந்த ஊர் ஆனா காரைக்குடி பக்கம் என்று வேள்விப்பட்ட போது அங்கு இருக்கும் செட்டிநாடு ஆரண்மனைகள் பற்றி நிறைய பேசினோம். எங்க சந்திப்புக்கு முதல் நாள் தான் கலைஞர் தொலைகாட்சியில் செட்டிநாடு அரண்மனைகள் பற்றிய தொகுப்பை பார்த்தேன். என்ன ஒற்றுமை பாருங்க, தமிழ்நாட்டில் நான் செல்லாத ஒரு சில ஊருகளில் காரைக்குடியும் ஒன்று, அங்கு இருக்கும் செட்டிநாடு அரண்மனைகளை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன். காரைக்குடி வாழ் அன்பர்கள் யாரேனும் இதை படித்தால் என்னை தொடர்புகொள்ளவும் , உங்கள் ஊரு சிறப்பை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன். எங்க பேச்சு சினிமா பக்கம் சென்றது அவர் ரசித்த படங்கள், நான் ரசித்த படங்கள் என்று எங்கள் ரசனைகளை பகிர்ந்து கொண்டோம். ஜக்கி சேகர் வந்து சென்றதை பற்றி சந்தோசமாக பகிர்ந்து கொண்டார், ஒரு நாள் முதலே வந்திருந்தால் அவரையும் சந்தித்து இருந்து இருப்பேன். நடுவில் எனக்கு தோசை பரிமாற்றப்பட்டது அருமையான தோசை வித் கார சட்னி மற்றும் தேங்காய் சட்னி. சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது அவருக்காக நான் வாங்கி வந்த மதன் எழுதிய " வந்தார்கள் வென்றார்கள்" என்கிற புத்தகத்தை பரிசளித்தேன். அவர் எனக்கு ஒரு Body spray பரிசளித்தார். இனிதான சந்திப்பு இனிதாகவே முடிந்தது,

வரும் 12 ஆம் தேதி திரும்ப அமீரகம் செல்கிறார் அவர் கிளம்புவதற்கு முன் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி அவரிடம் குடுக்க வேண்டும். அடுத்த முறை அவர் இந்திய வரும் போது இது எல்லாம் வாங்கிட்டு வாங்க என்று.

ஏன் என்றால் நான் ஒரு காமன் மென். ஹி ஹி ஹி .


யோகி - இது விமர்சனம் அல்ல !!!

வெளிநாட்டு படங்களை குறிப்பாக உலக தரம் வாய்ந்த படங்கள் மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிய படங்களை பார்க்கும் மனிதர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் என்று பார்த்தால் ரஜினி படத்திற்கு முதல் காட்சியில் எத்தனை பேர் வருவார்களோ அவ்வளவே தான் இருக்கும் எண்ணிகையில். அவர்களின் விமர்சனத்தை தவிர்த்து அல்லது படிக்காமல் யோகி படம் பார்த்தால் இந்த படம் ஒரு புது முயற்சி அல்லது சூப்பர் படம் என்று சொல்லலாம்.



படத்தை கண்டிப்பா பாருங்க உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும். உங்கள் கருத்துகளையும் சொல்லிடு போங்க.

ஏன் என்றால் நாம எல்லாம் காமன்மேன் ,,

திரும்பி பார்கிறேன் - 30/11/2009

உங்கள் வாழ்கையில் நடந்த சில சம்பவங்களை நினைத்து பாருங்கள் அதற்கு முன்னரே அந்த விஷயம் உங்கள் நினைவுக்கு வந்து சென்று இருக்கும் அது கனவில் கூட வந்து இருக்கும். அதே போன்று ஒரு நிகழ்வு சென்ற வாரத்தில் நடந்தது எனக்கு.

இரவு பணி முடிந்து காலையில் தூங்கி கொண்டு இருந்தேன். எனது நினைவு எங்கு எங்கோ சென்றது, ரயிலில் பயணித்து கொண்டு இருந்த நான் அடுத்த நொடியில் ஆட்டோவில் செல்கிறேன், பக்கத்தில் ஒரு பெண் ஒருத்தி எதேதோ பேசிக்கொண்டு பேசி கொண்டு வந்தாள், அவள் பேச பேச "ம் ம்" என்று ஒரு குரல் மட்டும் அவள் பக்கத்தில் இருந்து கேட்டு கொண்டு இருந்தது அவர்களை பார்த்தால் வட நாட்டு தம்பதியர் போல இருந்தது , அடுத்த நிமிடம் நான் ஆபீஸ்ல இருந்தேன் இவை அனைத்தும் எனது கனவில் வந்து சென்ற நிகழ்வுகள்.

தூங்கி எழுந்து வேலைக்கு கிளம்பினேன். பார்க் ஸ்டேஷன் இருந்து ரயில் முலமாக கிண்டி வந்து அடைந்தேன், புரியாத மொழி பேசிக்கொண்டு என் அருகில் இருவர் நடந்து கொண்டு வந்தார்கள், திரும்பி பார்த்தால் வட நாட்டு தம்பதியர்கள் இருவர்.

"Hai" என்றார் , நானும் " Hai" என்றேன். ஒலிம்பியா டெக் பார்க் செல்ல எந்த வழி செல்ல வேண்டும் என்றார். நான் அந்த வழியாக தான் செல்கிறேன் வாங்க சேர்ந்தே போகலாம் என்றேன். கிண்டியில் இருந்து ஷேர் ஆட்டோவில் கிளம்பினோம், எனது கனவில் வந்த மாதிரியே அந்த பெண் அருகில் நான். அதே போன்று அவள் பேசி கொண்டு இருந்தாள் பக்கத்தில் இருந்த அவள் கணவன் "ம் ம்" என்று சொல்லி கொண்டே இருந்தான்.

இது தான் கனவுகள் மெய்ப்படும் என்பதா ??


---------------------------------------------
நண்பர் கார்த்திகேயன் சென்னை வந்துள்ளார், அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டேன், சென்ற வாரத்திலே சந்திக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சில காரணங்களால் அவரை சந்திக்க முடியாமல் சென்றது, அவரும் ஹைதராபாத் சென்றதால் இந்த வாரத்தில் சந்தித்துவிட வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறேன்.

------------------------------------------


ஒரு சில பதிவாளர்கள் பதிவை படிக்கும் போது ரொம்ப எரிச்சல் அடைய வைக்கிறது. அரச்ச மாவையே அரைக்கிற மாதிரி இருக்கு. மொக்கை என்கிற பெயரில் நடக்கும் இந்த கொடுமைக்கு ஒரு விடுவு காலமே வராதா ?? ஆனால் சில பதிவாளர்கள் பதிவை ரொம்ப எதிர் பார்த்துகொண்டு இருப்பேன். அவர்கள் அதிகமாக எழுத மாட்டார்கள், மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் அதும் நச்சுன்னு இருக்கும். நான் அதிகம் எதிர் பார்க்கும் பதிவர்கள் சிலரே அதில் ஜாக்கி , கேபிள் சங்கர், வால்பையன், நர்சிம், தண்டோரா இப்படி விரல் விட்டு எழுதி விடலாம். ஆனால் மொக்கை போடுகிறவர்கள் லிஸ்ட் மட்டும் எண்ணுவதற்கு கை, கால் விரல்கள் பத்தவில்லை.

-------------------------------------






முதலாம் வருடம்.....

வாழ்கையில் சில விஷயம் திரும்பி பார்க்கிறதுகுள்ள காணாம போயிடும் . அப்படி தான் பாருங்க இப்பதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடிச்சு.



நவம்பர் 23 2008 , அன்று தான் எனக்கும் மகாலட்சுமிக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. எங்களது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம்.

முதல் வருட கல்யாண தினத்தை கொண்டாட முடியாத சூழ்நிலையை எங்கள் மகன் ஏற்படுத்திவிட்டான். அவனை விட எங்களுக்கு கொண்டாட்டம் ஒன்று பெரியது இல்லை தான் .

சென்னையில் நான், கரூரில் எங்கள் மகனுடன் மனைவி. லீவ் எடுக்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன், அதனால் அடுத்த வருடம் இதே தினத்தில் எங்காவது ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று மகனுடன் கொண்டாலாம் என்று நாங்கள் முடிவு பண்ணிரிகிறோம்.

இந்த ஒரு வருடத்தில் காதல், சண்டை, பிரிவு, முறைப்பு என்று எல்லாம் சேர்ந்த கலவையாக சுகமாக கழிந்தது.

தலை தீபாவளிக்கு ஏதும் வாங்கி தர முடியாமல் இருந்த வேதனையை இப்பொது சரி செய்து விட்டேன்.

என்னவளுக்கு புதிதாக Samsung S3600, Open டைப் லேட்டஸ்ட் மொபைல் வாங்கி பரிசளித்தேன். அவள் ஆசைப்பட்ட மாடல் ஆசையை பூர்த்தி செய்துவிட்டேன் என்கிற பெருமிதம்.



வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் அந்த மொபைலை காமித்து முதலாம் ஆண்டு கல்யாண தினத்திற்கு நான் வாங்கி தந்த பரிசு என்று சொல்லி சந்தோசப்படுகிறாள் என்னவள்.

இந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர.

பொறுப்புகள் கூடி கொண்டே செல்கிறது , இன்னும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே மண்டையை போட்டு உலுப்புகிறது.

ஆனால் அடிமனதில் இருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்று தான்.

இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே .



வால்பையனுடன் ஒரு சின்ன சந்திப்பு

நமது அருமை நண்பர் கேபிளார் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .

-----------------------------------------------------------------------------------------------
Nov 10 ஆம் தேதி நண்பர் வால்பையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தனியாக சந்திக்கும் முதல் பதிவாளர் நண்பர் வால்பையன்.

எங்கள் சந்திப்பு திடீர் என்று முடிவானது, அன்று காலையில் தான் நான் கரூர் செல்லும் வழியில் ஈரோடு வருவதாகவும் அப்போது சந்திக்க முடியுமா என்று அவரிடம் GTALKகில் கேட்டேன், கண்டிப்பாக சந்திக்கலாம் என்றார். அவரின் போன் நம்பர் கேட்டு குறித்து கொண்டேன், ஈரோடு வந்ததும் அவரது அலைபேசிக்கு கூப்பிட்டு பஸ் ஸ்டாண்ட்யில் வெயிட் பண்ணுவதாகவும் சொன்னேன் .

பஸ் ஸ்டாண்ட் வெளிய தீபா மெடிகல்ஸ் என்று ஒரு கடை இருக்கும் அங்க வெயிட் பண்ணுக கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் என்றார்.

ஈரோடுக்கு நான் புதுசு அதும் இரவில் நான் எங்கு போய் தேடுவது என்கிற யோசனையில் தள்ளுவண்டிகாரர் ஒருவரிடம் அந்த கடை பற்றி கேட்டேன், அந்த Transformer பக்கதுல தான் இருக்கு பாருங்க என்றார். வால்பையனை சந்திக்கவேண்டும் என்று ஈரோடு சென்றால் பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் தீபா மெடிகல்ஸ் பக்கத்தில் வெயிட் பண்ணவும். அதை அவர் சொல்லுவதற்கு முன்பே நீங்க செய்துவிட்டால் மனுஷன் ரொம்ப சந்தோஷ படுவார். அவர் சொல்லுவதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த மெடிக்கல் கடை சுமார் 25 வருடங்கள் அங்கு இயங்கி கொண்டு இருக்கிறதாம், அதனால் ஈரோடு வாழும் அனைத்து அன்பர்களுக்கும் இந்த கடையை நன்கு அறிந்து உள்ளார்கள் என்பதை தள்ளுவண்டிக்காரர் சொன்னார்.


சரியான இடத்திற்கு வந்து அடைந்தேன். நிமிடங்கள் ஓடி கொண்டே இருந்தது பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னவர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகுதான் வந்தார். வந்ததும் தன் பெயரை வால்பையன் என்று சிரித்த முகத்துடன் அறிமுகபடுத்தி கொண்டார், நானும் என்னை ரோமியோ பாய் என்றே அறிமுகபடுத்தி கொண்டேன். அவரின் வேலையை மற்றொருவரிடம் விட்டு வர லேட் ஆகிவிட்டது என்று சொன்னார்.

சரி வாங்க என்று அவர் பைக்கில் ஏற்றி கொண்டார் அப்போது மணி 9.45pm கிட்டதட்ட 30 நிமிடங்கள் நான் அவருக்காக அங்கு காத்து கொண்டு இருந்தேன். மாலை வேலை என்றால் அழகான பெண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் ஆனால் இது இரவாச்சே அதும் மழை வேறு கொஞ்சம் கடுப்புடனே நின்று கொண்டு இருந்தேன்.

வண்டியில் ஏற சொன்னவர் எங்கே கூட்டி சென்றார் தெரியுமா ???? நீங்கள் நினைப்பது சரி "BAR" க்கு தான் நேராக சென்றோம். அங்கு அவரின் நண்பர்கள் இரண்டு பேர் எங்களுக்குகாக வெயிட் பண்ணிட்டு இருந்தார்கள். ஒருவர் தியாகு , மற்றோவர் கார்த்திக். கச்சேரி ஆரமிக்கலாம் என்று உள்ளே சென்றோம். நான் அதிகமாக தண்ணி அடிக்கமாட்டேன் , அடித்தாலும் நண்பர்கள் கூடும் போதும் மட்டுமே அதும் பீர் மட்டுமே ஒரு பாட்டில் அடிப்பேன். அதற்கே எனது உடம்பு தங்காது என்பது முக்கியமாக விஷயம்.


எனக்கு ஒரு பீர் என்று சொல்லி அமைதி ஆனேன் ( வீட்டிற்கு சென்று மனைவியிடம் வாங்கிகட்டி கொண்டு அமைதியாக இருந்தது வேறு :( ) . வால் மற்றும் அவரது நண்பர்கள் என்னென்னமோ ஆர்டர் செய்து கொண்டு இருந்தார்கள், அதை முடித்து பேச்சு சற்று வலை பக்கம் சென்றது. வால் மொக்கை அல்லது சிரியஸ் டைப் ஆள் என்று நினைத்து சென்றால் அதை மாற்றி கொள்ளுங்கள். மனுஷன் காமெடில கலக்குறார், இவரை விட இவரின் நண்பர் தியாகு வால்லை நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஓட்டு ஓட்டு என்று ஓட்டி கொண்டு இருந்தார். நீங்கள் வால்பையனை சந்திக்கும் போது அவரின் நண்பர் தியாகு பற்றி சில வார்த்தைகள் கேட்டு பாருங்கள், ஒரு விஷத்தை கண்டிப்பாக சொல்லுவர், அதை என்னிடம் சொன்னார் அப்போது தியாகு அலுத்து கொண்டே சொன்னார் " இதை நான் 20தாவது முறை கேக்குறேன் பாஸ்" . வால்பையன் சொன்னது கேட்டு எனக்கு தியாகுவை பற்றி இப்படியும் ஒரு மனிதரா ?? என்றே என்ன வைத்தது. அது என்ன மேட்டர் என்று என்னிடம் கேட்காதிங்க வால்பையன்னிடம் கேட்டு கொள்ளவும்.

மணி ஆகி கொண்டு இருந்தது , நான் அடிகடி எனது வாட்ச் பார்த்துகொண்டு இருந்ததை பார்த்து நண்பர் கார்த்திக் என்ன விஷயம் என்று கேட்டார். மனைவி எனக்காக வெயிட் பண்ணுவ நான் கிளம்பட்டுமா ?? என்றேன். வால் என்னை பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்து விட்டார், பசி வேற வயற்றை கிள்ளியது. எங்கு ஹோட்டல் இருக்கும் என்று காமிக்கிறேன் வாங்க என்றார். இருவரும் நடந்து சென்றோம் பஸ் ஸ்டாண்ட் உள்ளே. நாங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு போலீஸ் பூத் இருந்தது , அங்கே ஒரு இளம் பெண்ணை இரண்டு பெண் போலீஸ்காரர்கள் விசாரித்து கொண்டு இருந்தார்கள். அவர்களை கடந்து சென்ற பிறகு எங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை படித்து பாருங்கள்.

வால் : தல உங்களுக்கு phycology தெரியுமா ??
நான் : ஹ்ம்ம் கொஞ்சம் தெரியும் தல .
வால் : ஒரு பொண்ணு இந்த டைம்ல ரெண்டு போலீஸ்காரங்க விசாரிக்கும் போது வாயில பபுள்கம் மேன்னுடே பதில் சொன்னால் என்ன அர்த்தம்??
நான் : ITEM !!
வால் : ஹா ஹா ஹா " க க க போ"


அவரை சந்தித்தற்கு சாட்சியாக ஒரு புகைப்படம் எடுத்து கொண்டேன், ஆனால் பாருங்க கேமராவை எனது அக்கா வாங்கி சென்றுவிட்டார்.

முதல் சந்திப்பு அருமையாக இருந்தது நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நேரம் தான் எனக்கு இல்லை. இன்னொரு முறை அவரை சந்தித்தால் அந்த குறையை தீர்த்து கொள்ள வேண்டும்.

ஜூனியர் ...


கடந்த 11 தேதி மாலை மகன் பிறந்தான் .

மனைவியை ஆபரேஷன் தியேட்டர்க்குள் அழைத்து சென்றதில் இருந்து எனக்கு பிடித்தது டென்ஷன்.

கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கிறது. நெஞ்சு பட பட என்று அடிக்கிறது. மதியத்தில் இருந்து ஏதும் சாப்பிட பிடிக்கவில்லை.

டென்ஷன் குறைக்க ஒரு தம் அடிக்கலாம் என்று டீ கடை வந்தேன். ஒரு வில்ஸ் தாங்க என்று கேட்கும் போதே எனது உதடுகள் டைப் அடித்தது.

சிகரட் வாங்கும் போது கைகள் கொஞ்சம் நடுங்கியது. அப்படியே ஒரு டீ கொஞ்சம் சக்கரை அதிகமாக போட சொல்லி குடித்தேன்.

ஹாஸ்பிடல் வந்த போது சொந்த பந்தங்கள் என்னை போலவே குழந்தையின் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள்.

நேரம் செல்லவே இல்லை. கடிகாரம் நின்றது போல ஒரு பிரம்மை. கொஞ்ச நேரத்தில் நர்ஸ் சிரித்த முகத்துடன் வந்தார்.

பையன் பிறந்து இருக்கிறான் என்று சொன்ன செய்தி கேட்ட போது சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் போனது.

வாழ்த்துக்கள் பல வந்து அடைந்தது கொண்டு இருந்தே தவிர குழந்தையை கண்ணில் காட்டவே இல்லை.

சிறிது நேரத்தில் நர்ஸ் ஒருவர் குழந்தையுடன் வெளியே வந்தார்.. சந்தோஷத்தின் உச்சியில் நின்று கொண்டு இருந்தேன், எனது கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வந்ததை பொருட்படுத்தாமல் எங்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசை கண்கள் இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்தேன்.

கடந்த 9 மாதங்களாக நான் மற்றும் என் மனைவி பட்ட வேதனைகளுக்கும் , சந்தோஷங்களுக்கும் ஒரு வழியாக விடை கிடைத்தது.

" அழகான விடை "


அடுத்து "ப்பா" என்று அவன் சொல்லும் அந்த வார்த்தைக்காக காத்து கொண்டு இருக்கிறேன் .

பிடித்தது & பிடிக்காதது - 10 ***தொடர் விளையாட்டில் நானும்***

மாதவராஜ் இந்த விளையாட்டை ஆரமிக்கும் போது நினைத்தேன் கண்டிப்பா யாரவது ஒருத்தர் நம்மை இந்த ஆட்டதில் சேர்ந்து விளையாட சொல்லுவார்கள் என்று அதே போன்று நண்பர் கார்த்திகேயன் என்னை அழைத்து இருக்கிறார் அவருக்கு நன்றியை சொல்லி விளையாட்டை ஆரமிகிறேன்..


1.இசையமைப்பாளர்

பிடித்தது - இளையராஜா
பிடிக்காதது - எஸ். எ . ராஜ்குமார்.

2. கவிஞர்கள்

பிடித்தது -தபு சங்கர்
பிடிக்காதது - கவிதை என்கிற பெயரில் புரியாத ஒன்றை எழுதும் பின்நவினத்துவ கவிஞர்கள்.

3. சமுக ஆவலர்கள்

பிடித்தது - நம்மாழ்வார்
பிடிக்காதது - சமுக ஆர்வலர் என்கிற போர்வையை போற்றிக்கொண்டு இருக்கும் பல கிரிமினல்கள்.

4.கதாநாயகர்கள்

பிடித்தது - கமல்
பிடிக்காதது - சுண்டு பொண்டு எல்லாம் கதாநாயகன் ஆகா நடிக்கும் படங்கள்.

5.எழுத்தாளர்கள்

பிடித்தது - சாரு
பிடிக்காதது - அனுராதா ரமணன்


6.உணவு

பிடித்தது - அம்மாவின் சமையல்
பிடிக்காதது - துரித உணவு

7.அரசியல்வாதி

பிடித்தது - கலைஞர்
பிடிக்காதது - ஜெயலலிதா

8.இயக்குனர்

பிடித்தது - பாலா
பிடிக்காதது - பேரரசு


9.பதிவர்

பிடித்தது - பரிசல்
பிடிக்காதது - ஏதும் இல்லை

10.இடம்

பிடித்தது - கொடைக்கானல்
பிடிக்காதது - ஊட்டி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த தொடர் விளையாட்டில் பங்கு பெற

நிலாமதி , விக்னேஸ்வரி மற்றும் ரம்யா அலைகிறேன்.


இவங்கள இது முன்னாடி யாரவது கண்டிப்பா அழைத்து இருபார்கள் , அப்படி அழைத்து இருந்தாலும் என்னோட பெயரயும் அதுல சேர்த்துகோங்க ..


இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்


2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்.


3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ரயில் பயணங்கள் - 2

பயணங்கள் - 2






சென்ற கட்டுரையில் கோவைக்கு சென்றதை எழுதி இருந்தேன், இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி கோவையில் இருந்து சென்னைக்கு வந்தது.

கும்பலாக இருந்து கும்மி அடித்து கொண்டு இருந்தோம் கல்யாணத்தில் , அத்தை மகள் ஒருத்தியை பார்த்ததும் ரொம்ப ஆச்சரியப்பட்டு போனேன். அவளின் கலயாணத்துக்கு முன்பு தேவதை போல இருந்தாள். நல்ல வளத்தி, ஒல்லியாக ரொம்ப அழகாக இருப்பாள். அவளின் இரண்டு கன்னங்களில் விழும் அந்த குழியை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதற்காகவே அவளை சிரிக்க சொல்லுவேன் அது பள்ளி காலத்தில். அப்போது அவளின் மேல் எந்த ஒரு ஆசையும் இல்லை ஒரு சிறுவன் சிறுமி விளையாட்டு போல இருந்தது . அவள் கல்யாணம் முடிந்து போன பிறகு அவளை பார்க்கவே இல்லை கிட்டதட்ட 3 வருடங்கள் கழித்து இந்த கல்யாணத்தில் சந்தித்த போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. உடம்பில் சதை போட்டு இருந்தாள் பார்ப்பதற்கு 30 வயது போல இருந்தாள். என்னால் நம்பவே முடியவில்லை இவளா என்று. நான் இருப்பதை எங்கிருந்தோ பார்த்தவள் ரொம்ப சந்தோசமாக வந்து என்னருகில் வந்து அமர்ந்தாள் குழந்தையுடன். வெகு நாட்களுக்கு பிறகு பார்த்ததினால் வார்த்தைகள் ஆதிகமாக வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரமித்தோம். பேச்சு நீண்டு கொண்டு இருந்தது எங்களின் தற்போது வாழ்கை எப்படி செல்கிறது என்கிற கேள்வி எழும் போது அவள் உச் கொட்டினாள் சென்னை போன்ற பரபரப்பு நகரத்தில் வளர்ந்தவள் குமாரபாளையத்தில் கல்யாணம் கட்டி கொண்டு சென்றதால் வந்த விரக்தி. . இந்த தருணத்தில் எதாவது பேசி சங்கட பட வைக்க வேண்டம் என்று வேறு பேச்சு பேச ஆரமித்தோம். கடைசியாக விடைபெறும் நேரத்தில் அவளை சிரிக்க சொன்னேன் எதற்கு என்றவளின் கன்னங்களை பார்த்தேன் அந்த குழி மட்டும் மாறவில்லை.


அன்று மதியமே கோவை எக்ஸ்பிரஸ்ல் அப்பா, அம்மா உடன் கிளம்ப வேண்டிய கட்டாயம். முன்பே முன்பதிவு செய்ததினால் இந்த தடவை டிக்கெட் பரிசோதகரை எதிர் பார்க்காமல் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சொந்த பந்தங்கள் உடன் நிறைந்து இருந்த கல்யாண மண்டபத்தில் இருந்த சந்தோஷம் இப்பொது காணாமல் போனதை உணர்ந்தேன். இந்த மாதிரி மதியம் செல்லும் ரயில் பயணத்தில் ஒரு சவுகரியம் ரயில்க்குள்ளே விற்றுக்கொண்டு வரும் திண்பண்டங்கள் தான். கட்லெட், சமோசா , வடை, நிமிடத்துக்கு ஒரு முறை வரும் டீ, காபி , கூல் ட்ரிங்க்ஸ், மாலை வேளையில் வரும் தக்காளி சூப் , மசால் தோசை, பிரட் அம்லேட் தின்னுவதற்கே 200 ருபாய் அழவேண்டும். ரயிலில் வரும் மற்ற விற்பனையாளர்கள் புத்தகங்கள் , குழந்தைகளுக்கு ஆனா விளையாட்டு பொருட்கள், முறுக்கு, கண் தெரியாதவர்கள் விற்றுக்கொண்டு இருந்த டோர கலரிங் புக் இவைகளுடன் புது படங்களை கூட ஒருவர் விற்றுக்கொண்டு வந்தார்.



தூக்கம் கண்ணை முடியதால் திருப்பூர் தாண்டி சேலம் வரை நன்றாக தூங்கி கொண்டு வந்தேன் உட்கார்ந்தபடியே. சேலத்தில் கூட்டம் கொஞ்சம் ஏறியது படிப்பதற்கு புத்தகம் ஏதும் இல்லாமல் ரொம்ப எரிச்சலாக இருந்தது. பகல் நேர பயணங்களில் புத்தம் இல்லாமல் நான் புறப்படமாட்டேன் அன்று அவசரம் காரணமாக ஏதும் எடுத்து கொண்டு வரவில்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது சிறிது நேரம் கதவு அருகில் நின்று கொண்டு வருவது என்று நேரத்தை கழித்து கொண்டு வந்தேன். வண்டி ஆம்பூர் தாண்டி சென்று கொண்டு இருந்தது. கழிவறை செல்ல எழுந்தேன் அதன் அருகில் சிலர் கீழே எதோ பார்த்து கொண்டு இருந்தார்கள் என்னவாக இருக்கும் என்கிற ஆவலில் நானும் பார்த்தேன் பார்வையற்றவர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் என்னவென்று விசாரித்தேன். கதவுக்கு நடுவில் இருக்கும் ஜன்னல் முடும் போது இவரின் விரல்கள் அடி பட்டு விட்டது என்றார். ரயில்களில் இரண்டு ஜன்னல்கள் இருக்கும் ஒன்று கண்ணாடியால் ஆனது , மற்றொன்று இரும்பால் ஆனது. இரும்பால் ஆனா ஜன்னல் தான் இவரின் விரல்களை பதம் பார்த்து இருந்தது.


கூடி இருந்த ஒருவர் கூட அவருக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. அந்த விரல்களை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு சுற்றி இருந்தார். ரத்த போக்கு அதிகமாக இருந்ததை அவர் பேன்ட் காமித்தது , ரத்தத்தை அவர் பேண்டில் துடைத்து இருந்தார் போல. பார்த்ததும் என்னால் இவர்களை போல வேடிக்கை பார்க்க முடியவில்லை. கும்பலில் இருந்த ஒருவர் முதலுதவி பெட்டி எங்கு இருக்கும் என்று டீ விற்கும் ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார். இது எல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவர் எழுப்பி விரல்களில் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் கவர்யை நீக்கினேன். ரத்தம் உறைந்து போய் இருந்தது அவர் கை முழுக்க ரத்த கறைகள். சுற்றி இருந்தவர்களின் அலச்சியம் அப்போது தான் தெரிந்தது. அவரின் உடை ரொம்ப அழுக்காகி இருந்தது ஒருத்தரும் உதவிக்கு வராதது கண்டு என்னை அறியாமல் கோவப்படேன். ஒரு இளைஞர் கொஞ்சம் போல பஞ்சு கொண்டு வந்தார் அதை தண்ணிரில் நனைத்து உறைந்து போன ரத்த கறைகளை சுத்தம் பண்ணினேன். அந்த பஞ்சு போதுமானதாக இல்லை. எனது கைக்குட்டையை தண்ணிரில் நனைத்து முடிந்த வரை சுத்த படுத்தினேன். பிறகு அதை வைத்தே அவரின் கைகளை சுற்றி விட்டேன். காட்பாடி சென்றதும் ஸ்டேஷன் மாஸ்டர் ரூம்ல முதலுதவி பெட்டி இருக்கும் அவர்களிடம் மருந்து வைத்து கொள்ளுங்கள் என்றேன். "அது எல்லாம் வேண்டம் சார் அவங்க எங்களுக்கு எல்லாம் உதவ மாட்டாங்க" என்றார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தது அதை சொல்லும் போதே ஒரு வித விரக்தியை அவரின் பேச்சில் தெரிந்தது. சரி டாக்டர் போய் பாருங்க காயம் ஆழமாக இருக்கும் போல இருக்கு என்றேன். சரி என்றார் இதிலும் அதே விரக்தி.

எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன் மனம் அவரின் இந்த நிலைமையை நினைத்து கேள்விகளை அடுக்கிக்கொண்டு சென்றது. தனக்கு எங்கு காயம் பட்டு இருக்கிறது என்று கூட தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியாமல் , ரத்த கரைகளை எப்படி சுத்தபடுத்துவது தெரியாமல் அவரின் கண்களை பறித்த இறைவனை திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் திட்ட மனம் வரவில்லை அதற்கு பதில் நன்றியை தான் சொன்னேன் அவருக்கு என்னால் முடிந்த உதவி செய்ததுக்கு.

காட்பாடி ரயில் நிலைத்தில் அவர் இறங்கினர் , ஓடி சென்று வலியின் திவிரத்தை கேட்டேன். இப்ப வலி இல்ல சார் என்றார். பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு டாக்டரிடம் செல்லுமாறு சொன்னேன். வேண்டாம் சார் என்று எதோ ஒரு ஆயில்மேன்ட் பெயரை சொல்லி அதை பூசினால் சரியாகிடும் என்றார். காயம் ஆழமாக இருக்கிறது எதுக்கோ நீங்க டாக்டர் பாருங்க என்றேன், இப்போதும் அதே போல விரக்தியின் சிரிப்பு. பார்க்கலாம் சார் உங்க உதவிக்கு நன்றி என்றார்.

எனக்கு புரிந்தது அவரிடம் பணம் இல்லை என்று. எனது பாக்கெட்யில் கைவிட்டேன் 120 ருபாய் இருந்தது. 100 ருபாய் எடுத்து அவரிடம் குடுத்தேன், வேண்டாம் என்று ரொம்ப மறுத்தார் , நான் விடாமல் அவரின் சட்டை பாக்கெட்யில் திணித்தேன். முதலில் டாக்டர் பாருங்க என்றேன் ரயில் கிளம்பியது. அவரிடம் இன்னொரு முறை இதே ரயிலில் வரும் போது சந்திக்கலாம் என்று சொல்லி விடைப்பெற்றேன்.

இறைவனுக்கு இன்னொரு முறை நன்றி சொன்னேன் அவருக்கு திரும்ப உதவி செய்ய வைத்ததற்கு.