~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்க்கிறேன் - 26/10/2009

இரவை கண்டு பயபடாதவர்கள் பத்தில் இரண்டு பேர் தான் இருபார்கள். எனக்கு தனியாக இரவில் தூங்குவது என்பது கொஞ்சம் அல்ல நிறையவே கிலி. எல்லா விளக்குகளையும் எரிய விட்டே தூங்குவேன். எனது சிறிய வயதில் நாங்கள் குடியிருந்த இடத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நான் படித்த டியூஷன் சென்டர். நடந்தே சென்று வந்து விடுவேன். வழி எங்கும் தெரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தாலும் ஒரு குறிப்பிட இடத்தில மட்டும் கும் இருட்டு மையம் கொண்டு இருக்கும் அது ஒரு 50 அடி தூரமே இருந்தாலும் எனக்கு அந்த இடம் தாண்டி தனியாக செல்ல ரொம்ப பயம். அந்த இருட்டு துடங்கும் இடத்தில நின்று கொண்டு இருப்பேன், ஏதேனும் வண்டி வந்தால் அந்த வண்டியை வேகமாக பின்னாடியே ஓடுவேன் அந்த இடம் கடக்கும் வரை. போன வாரம் அந்த வழியாக நான் பைக்கில் சென்றேன் அதே இடம் ஆனால் அங்கு வேறொரு பையன் நின்று கொண்டு இருந்தான் அவனை நான் கடந்து செல்லும் போது எனக்கு பின்னாடி ஓடி வந்தான். எனக்குள் நானே சொல்லி கொண்டேன் "என்னை போல் ஒருவன்".


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதற்கு வாங்கினேன் என்று தெரியாமல் வாங்கிய படங்கள் பலது ரொம்ப நன்றாக இருக்கும். விரும்பி வாங்கிய படங்கள் ரொம்ப சொத்தையாக இருக்கும். அதில் இந்த படத்தை எதற்காக வாங்கினேன் என்று தெரியாமலே வாங்கி வைத்து அது CD pouch ரொம்ப நாட்களாக இருந்தது. போர் அடித்ததால் இதை பார்க்கலாம் என்று படத்தை பார்த்தேன். படத்தின் பெயர் Roman Holidays - 1953 ஆம் ஆண்டு வெளிவந்தது ,


Wow .. Super ...
படத்தின் சுருக்கம் : இளவரசி ஆனி தனக்கு இருக்கும் வேலை பளுவை தாங்கிக்க முடியாமல் ஒரு நாள் அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி விடுகிறார். வந்தவர் ஒரு நாள் முழுவதும் அரண்மனைக்கு செல்லாமல் ரோம் நகரை ஹீரோவுடன் சந்தோசமாக வளம் வருகிறார். பின்பு ஹீரோவிடம் காதல கொண்டு வெகு சிரமத்துடன் அவரை பிரிந்து தனது அரண்மனைக்கு செல்கிறார்.


படத்தில் எனக்கு பிடித்து முன்று விஷயங்கள்
1. ஒளிப்பதிவு . 1953 எடுத்த படம் கருப்பு வெள்ளையில் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து இருப்பது அருமை. கண்டிபாக ஜக்கி சேகர்க்கு இந்த படத்தை பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன்.

2. படத்தில் உள்ள நகைச்சுவை. ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லாவற்றிலும் நகைச்சுவையை அழகாக கையாண்டு இருகிறார்கள்.

3. படத்தில் கிளைமாக்ஸ் , தமிழ் அல்லது இந்திய சினிமா போன்று இல்லாத ரொம்ப எதார்த்தமான கிளைமாக்ஸ். நாம் எதிர் பார்ப்பை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அழகாக முடித்து உள்ளார்கள் .


அருமையான படம் . DVD கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கவும் .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் நண்பன் சந்தோஷ் உடன் தம் அடிக்க அடிகடி செல்வேன். போன வாரத்தில் நாங்கள் தம் அடித்து விட்டு லிப்டில் ஏறினோம் எங்கள் உடன் எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் உடன் வந்தார். நாங்கள் இறங்க வேண்டிய ப்ளோர் வந்ததும் சந்தோஷ்யிடம் இருந்த மொபைல் போன் பார்த்து அவர் இது Nokiaவா இல்ல blackberryயா என்று கேட்டார். நான் அவன் பதில் சொல்வதற்கு முன் " சார் இது கொரியன் செட் " என்று உண்மையை சொல்லி சிரித்து விட்டேன் . கேட்ட உடன் அவரும் சிரித்துவிட்டார் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. நண்பனை டம்மியாகியத்தில் . ஹா ஹா ஹா என்று ஹால் அதிர சிரித்து கொண்டு வந்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் சொல்லி கொஞ்ச நேரம் வாய் விட்டு சிரித்தேன். பாவம் சந்தோஷ் தான் கொஞ்சம் கடுபாகிடான். மேட்டர் நடந்தது மாலையில் அடுத்த நாள் ஆபீஸ்க்கு மதியம் வந்த போது காலை ஷிபிடில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஒரு தோழி " என்ன ராஜன் நேத்து சந்தோஷ் மானத்த வங்கிடிங்க போல" என்று கேட்டார். மேட்டர் அதுக்குள் இந்த ஷிபிட் ஆளுக்கு எல்லாம் தெரிஞ்சுடிச்சா என்று சிரித்து கொண்டே அந்த கதையை மறுபடியும் சொன்னேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரயில் பயணங்கள் என்கிற தலைப்பில் வாரம் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் அவ்வளவு கதைகள் , சம்பவங்களை உள்ளது என்னிடம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் ஒரு மொக்கை + விடுகதை.
" ஒரு தகர பெட்டிக்குள் 50 மோகினி பிசாசுகள் "

அது என்ன ?
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


"லேடீஸ் காலேஜ் பஸ் "


நான் இப்ப எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

தனி மனித சுதந்திரம், MP3 Player அல்லது ஊளையிடுவது


தனி மனித சுதந்திரம் என்றால் என்ன ? உனது செயல் மற்றவர்களை துன்புருத்தாத எந்த ஒரு செயலும் அது தனி மனித சுதந்திரம். ஆனால் ஒருவர் தனது இஷ்டம் போல ஒரு பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு தெரியாமல் செய்யும் செயல் தனி மனித சுதந்திரம் ஆகுமா?

FM ரேடியோ, MP3 பிளேயர் உள்ள மொபைல் போனில் இருக்கும் சௌகரியம் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். தொலைதூர பயன்களில் நம்மை சுட்டு எரிக்கும் வெயிலோ அல்லது இரவில் தூக்கம் வராமல் பயணத்தை மேற்கொள்ளும் போது நமக்கு மட்டுமே கேட்கும் படி நமக்கு பிடித்த பாடல்களை ஹியர் போனில் கேட்டவாறு பயணத்தை ரசித்து கொண்டே செல்லலாம். ஆனால் இந்த மாதிரியான வரமே நமக்கு இம்சை ஆனால் ??

மின்சார ரயிலில் தினமும் பயணம் செய்வதால் புத்தகம் இல்லாத சமயங்களில் அவ்வபோது ஹியர் போனில் பாடல்கள் கேட்டு செல்வேன். கையில் எதாவது புத்தகம் இருக்கும் எனில் அன்று எனது சிந்தனை எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கும்.

நேற்று இரவு பணி முடித்துக்கொண்டு கிண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார வண்டியில் ஏறினேன். கையில் சாரு எழுதிய "முடு பனி சாலை". இந்த புத்தகத்தை இதற்கு முன்னர் இரண்டு முறை படித்து இருந்தாலும் திரும்ப படிக்க துண்டியது. புத்தகத்தை இரண்டு பக்கங்கள் கூட படித்து இருக்க மாட்டேன் எனக்கு பின்னால் இருந்த ஒரு அன்பர் "அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று தனது மொபைல் போனில் லௌட் ஸ்பீக்கர்ல போட்டுவிட்டார்.அவர்கள் பார்ப்பதற்கு முரட்டு ஆசாமி போல இருந்தார்கள். சந்தோசமாக பாடலை ரசித்தார்கள் என்பதை அவர்களின் வாய் முணுமுணுபு காட்டியது.

அவர்களின் சந்தோசம் என்பது என்னை எரிச்சல் அடைய வைத்தது. பெட்டியில் இடம் காலியாக இருந்ததினால் வேறு ஒரு இடம் மாறி உட்கார்ந்தேன். விட்ட இடத்தில் இருந்து ஆரமித்தேன், 10 பக்கங்கள் கூட தாண்டி இருந்து இருக்க மாட்டேன் "கருத்த மச்சான் " காதில் வந்து விழுந்து மண்டை காய வைத்தது. இப்பொழுது எனக்கு எதிரில் இருந்த இன்னொரு அன்பர். இங்கயுமா என்கிற கேள்வியுடன் அவரை ஒரு பார்வை பார்த்தேன், என்னை ஏற்எடுத்து பார்த்தவர் அந்த பாட்டுக்கு தனது கால்களில் தாளத்தை போட்டார். அவருடைய தாளம் என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தியது.

அவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒலியை அதிகமாக வைத்து பாடல் கேட்டு கொண்டு இருந்தார். எனது சிந்தனை எல்லாம் இப்பொழுது அந்த பாடலில் வரும் "ட்ட்யே ட்ட்யே" என்கிற BGM மேல் இருந்தது. இவரும் அந்த கோஷ்டி ஆள் போலவே இருந்தார். இரவில் செல்லும் அனைத்து ரயில் வண்டிகளிலும் பெண்கள் பெட்டியில் ஒரு போலீஸ்காரர் இருப்பார் இது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இதை பேசாமல் பொது பெட்டியிலும் அமல்படுத்தினால் தேவலாம் இந்த மாதிரியான இம்சைகளிடம் இருந்து நம்மை காப்பற்றி கொள்ள. கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு அவரிடம் படலை நிப்பாட்ட சொல்ல நினைத்தேன். அதற்கு வேலையில்லை என்பது போல அவருக்கு யாரோ போனில் கூப்பிட்டர்கள்.
அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது எனக்கு அவரின் வாயால் "ஹல்லோலோ" என்று அவர் போட்ட சத்தம் அந்த பெட்டியில் இருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு அவரின் பேச்சை அந்த பெட்டியே கேட்கும் படி ஊளையிட்டார் . படிக்கும் சுவாரசியமே எனக்கு போய்விட்டது , புத்தகத்தை மூடி வைத்து கதுவு அருகில் வந்து நின்று கொண்டேன். ரயில் செல்லும் வேகத்துக்கு காற்று பலமாக எனது முகத்தில் மோதியது இருந்தாலும் அந்த காற்றில் இருந்த ஈர பசையை ரசித்தேன்.


திரும்பி பார்த்தேன் ஊளை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ...

அட பார் ரா... லுக் - 6


அட பார் ரா ஹா ஹா ஹா என்று கிளாஸ் ரூம் அதிர சிரித்து மச்சி அப்ப எஸ்கேப்ன்னு சொல்லு, இனி எவனும் நம்ம கிட்ட வேலை காட்ட மாட்டாங்க என்று சந்தோஷத்தில் இருந்தான் கணேஷ்

அப்படி சொல்ல முடியாது மச்சி யாருன்னு தெரியாத வரைக்கும் நாம எஸ்கேப் தெரிந்தன்னு வை அப்பயும் நாம எஸ்கேப் தான் காலேஜ் விட்டு. சரி விடு அடி வாங்கினவனே போலீஸ் கிட்ட ஏதும் சொல்ல வேண்டம்ன்னு சொல்லிட்டான் அப்பறம் என்ன.
சரி அந்த பையன் ஏன்டா உங்கிட்ட அடிவாங்கினது யாருகிட்டையும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்னு தான் தெரியலையே.
எங்க ஊரு பசங்க சில பேரு அவனுக்கு தெரியுமா டா அதனால்தான் யார்கிட்டையும் சொல்லிடாதன்னு சொன்னான்.
எங்களின் பேச்சு கொஞ்ச நேரம் நிடித்து அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்ததும் நின்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு எங்க சீனியர் பசங்க கொஞ்சம் அடக்கியே வசித்தார்கள் . அவர்களை குறிவைத்து தாக்க நினைத்து வேறு ஒருவன் மாட்டி கொண்டது அவர்களிடம் கொஞ்சம் பயம் கொள்ள வைத்தது. அதன் பிறகு எங்களை ராக்கிங் என்கிற பெயரால் யாரும் தொந்தரவு செய்ய வில்லை.
முதலாம் ஆண்டு முடியும் வரை நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எங்களுக்கு பிறகு வந்த ஜூனியர் மாணவர்களிடம் நாங்கள் நட்புடனே பழகினோம். அதே சமயம் சீனியர் என்கிற கேத்து கொஞ்சம் கூட குறையாமல் வளம் வந்தோம்.
பிரிவு உபசார விழாவின் கண்களை கசக்கி கொண்டே விடை பெற்றோம். சரக்கு என்றால் அரை கிலோமீட்டர் ஓடும் அப்புராணி பசங்க கூட ஒரு பெக் அடித்து எங்கள் உடன் ஒரு இரவு வாந்தியுடன் அடுத்த நாள் காலை பிரிந்தது எங்கள் நினைவின் இருந்து நீங்கா இடம் பெற்றது.
இன்று எங்கள் உடன் படித்த நண்பர்கள் வட்டம் ரொம்ப சுருங்கி போய்விட்டது. குமார் மற்றும் கணேஷ் மட்டுமே எப்போதும் தொடர்பு எல்லைக்கு உள்ளே இருகிறார்கள். மற்றவர்கள் அவுட் ஆப் ரீச் தான்.
வேலை நிமித்தமாக நான் சென்னை வந்தது குமார் இருக்கும் தைரியம் தான். அவன் என்னை போல் இல்லாமல் கல்லூரி படிப்பு முடித்தவுடன் கம்ப்யூட்டரில் VB, Java, C, C++ என்று படித்து இப்பொது முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்கிறான். மேன்சன் வாசியா இருந்தாலும் அவன் தங்கி இருக்கும் அறை ரொம்ப சுத்தமாக இருந்தது. ஹிந்து நாளிதழில் வந்த வேலை வாய்ப்பு பகுதியை எனக்காக எடுத்து வைத்து இருந்தான். அதில் எனக்கு எது செட் ஆகும் என்று தேடி 10 கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
அவன் மேன்சன் மேனேஜர்யிடம் ஏற்கனவே பேசி எனக்கான ஒரு ரூம் தேர்வு செய்து வைத்து இருந்தான். அவர் வந்ததும் என்னிடம் பெயர் , விலாசம் என்று எல்லா குறிப்புகளையும் வாங்கி கொண்டு குமார் ரூம்க்கு இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூம்மை எனக்காக ஒதுக்கி தந்தார்.

ரூம் பிரச்சனை திர்ந்தது.

அடுத்தது வேலை ..