~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 06/10/09





நைட் ஷிபிட்ல வேலை பார்க்குறது எவ்வளவு கொடுமை தெரியுங்களா?? போன வாரம் எல்லாம் நைட் ஷிபிட் நைட் 10pm - 6am. பதிவாளர் சந்திப்பு முடிச்சிட்டு அப்படியே ஆபீஸ் வந்துட்டேன், அங்க மழைல நனைத்து ஆபீஸ் வந்தால் AC கும்முன்னு ஓடிட்டு இருக்கு கொஞ்ச நேரம் கை கால் எல்லாம் நடுங்க ஆர்மிசிடுச்சி பொறுக்க முடியாம செக்யூரிட்டி கிட்ட சொல்லி AC ஆப் பண்ண சொன்னேன். வெயில் அருமை அப்போது தான் தெரிந்தது. நைட் புல்லா தூங்கமா இருந்தது காலைல வீட்டுக்கு போகும் போதே தூக்கம் கண்ணை சொருகுது, அம்மா சாப்பிட்டு தூங்கு என்று சொல்லுவதை எல்லாம் என்னோட காதுல விழவே இல்ல. அப்படியே மட்டை ஆகிட்டேன் எழுந்து பார்த்தா மணி மாலை 5. வயிறு கப கபன்னு எரிது அப்பறம் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பி போனேன். தினமும் காலை உணவு என்பது 9 அல்லது 10 மணிக்கும் தான் எங்கள் வீட்டில் தயார் ஆகும், ஆனா போன வாரம் பாருங்க 8 மணிக்கும் எல்லாம் அம்மா எதாவது ரெடி பண்ணி வச்சிடுறாங்க. அவ்வளவு பாசம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



அக்டோபர் 2 என்பது காந்தி ஜெயந்தி டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொல்லி அரசு உத்தரவு போட்டு இருகாங்க அப்படியே பார்ரையும் மூட சொல்லுங்கப்பா. எங்க ஏரியால இருக்குற தலை சிறந்த குடிகாரர் தொல்லை தாங்க முடியல. அன்னைக்கு நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கும் போது குறுக்கே வந்து கொஞ்ச நேரம் காதை புண் ஆகி விட்டு சென்றார். அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் தான் என்னை இப்படி ஒரு கோரிக்கை வைக்க சொன்னது. காந்தி ஜெயந்தி அன்னிக்கு கவேர்மேன்ட் டாஸ்மாக் மட்டும் தான் மூட சொல்லி இருக்காங்க பார்ர இல்ல கடைல இருக்குற சரக்கு எல்லாம் சைடுல இங்க வந்துடுது அப்பறம் எதுக்கு டாஸ்மாக் மட்டும் மூட சொல்லுராங்க ?? மத்த நாள்ல எப்படி சேல்ஸ் ஆகுமோ இல்லையோ இந்த மாதுரி விடுமுறை நாட்களில் மட்டும் டபுள் சேல் ஆகுது. பேசாம சனி இரவு எல்லாம் கடை திறந்து வைத்து இருந்தால் அரசுக்கு குடுத்தால் லாபம் கிடைக்கும். இதையும் கொஞ்சம் பரிசிலிங்க .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சண்டே நைட் விஜய் டிவில கலக்க போவது யாரு ஜூனியர் நிகழ்ச்சியை எதற்ச்சியா பார்க்க நேர்ந்தது. அதுல வைதேகி என்கிற சிறுமி பரத நாடிய டிரஸ் போட்டுட்டு வந்து நின்னாங்க, எதோ மொக்கையா பண்ண போறாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன் ஆனா அவங்க வெஸ்டர்ன் , குத்து பாட்டுக்கு பரத நாட்டியம் சூப்பர்ரா ஆடினாங்க. நாக்க முக்கா , கத்தாழ கண்ணால, பாட்டுக்கு பரத நாட்டியம் ஆடி கலகிட்டாங்க . ஒரு பக்கம் சிரிப்பு தாங்கல இன்னொரு பக்கம் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு இப்படி எல்லாம் கூட நடனம் ஆட முடியுமா என்று. Hats off Vaidegi .

அதே மாதுரி நீயா நானா நிகழ்ச்சில மாணவர்களுக்கு எதிராக காலேஜ்ல நடக்குற அடக்குமுறை பற்றி சுடா விவாதிக்கபட்டது . மாணவர்கள் சைடுல இருந்தவங்க முக்கியமா சென்னைல இருக்குற முக்கியமான ஒரு கல்லூரியில் நடக்கும் அகிரமங்களை அடித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிய அந்த காலேஜ் டீன் பார்த்து கொஞ்சம் திரிந்தினால் தேவலாம்.


"சத்யமா" நான் எந்த காலேஜ் பத்தியும் பேசலைங்க .. ஹி ஹி ஹி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போன வாரம் நடந்த சென்னை பதிவாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்து கொண்டவர்கள் எழுதி இருந்த பதிவு எல்லாம் அருமை. கேபிள் சங்கர் படங்கள் போடு அசதி இருந்தாரு அதே மாதுரி எவனோ ஒருவன் பதிவு படிச்சு சிரிக்காம இருக்க முடியல. யாருக்கு எனது பெயர் நினைவு இருந்ததோ இல்லையோ பதிவாளர் முரளி கண்ணன் ராஜாராஜன் என்று அறிமுகம் படுத்தியதில் இருந்து விடை பெற்று போகும் வரை பார்க்கும் போது எல்லாம் பெயர் சொல்லி கூப்பிட்டார். நானும் இங்க சொல்லி கொள்கிறேன் " அடுத்த தடவை மழை , வெயில்யில் இருந்து தப்பிக்க ஏதுவான இடமா பாருங்க" .

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலையரசன் என்கிற பதிவாளரின் வலைபூவை அடிகடி படிப்பேன். நேத்து அவர் ஒரு பதிவு போடு இருந்தார் ஐயோ என்ன கொடுமை சார் அது. பாகிஸ்தானில் நடந்த மனித உரிமை மீறல் பற்றியது. இந்த சுட்டிய சொடுக்கி பாருங்க..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக்


சின்ன ஏமாற்றம் நம்மை கலங்க வைக்கும


சின்ன பிரிவு நம்மை அழ வைக்கும


ஆனால்



சின்ன வீடு நம்மை குஜால் படுத்தும். ஹி ஹி ஹி








உங்கள் வீட்டு குழந்தைகள் அறை இப்படி இருந்தால் ???











































50 பைசாவும் மாறாத மனிதர்களும்.

இந்த 50 பைசா தொலை இப்ப எல்லாம் ஓவர்ரா இருக்கு. கடைக்காரன் 50 பைசா சில்லற இல்லனா ஒரு முட்டாய் எடுத்துதாரன் அத நாம வேண்டம்ன்னு சொன்னாலும் சில்லற இல்ல நி இருந்ததா கூடு நான் ஒரு ரூபா தரேன்னு சொல்லுறன். நம்ம கிட்ட இருந்த குடுக்கலாம் இல்லேன்னா? அந்த சாக்லேட் இல்லனா ஹால்ஸ் வாங்கிக்கிட்டு போகணும்.

போன வாரம் எங்க ஏரியால இருந்து ஆபீஸ்க்கு வண்டில வந்துடு இருந்தேன். வர வழியில ஒரு டி கடைல வில்ஸ் வாங்கினேன் அதோட விலை 3 ரூபா 50 பைசா நான் குடுத்தோ 5 ரூபா கடைகாரர் மீதி 1 ரூபா குடுத்துட்டு ஒரு ஹால்ஸ் குடுத்தார்.இதற்கு பிறகு எங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை படிங்க .




நான்: வில்ஸ் விலை ஏறிடிச்சா என்ன ?


கடைகாரர்: இல்லையே சார்.

நான்: அப்பறம் ஏன் ஒரு ரூபா மட்டும் தரிங்க ?

கடைகாரர்: அதன் ஹால்ஸ் குடுத்து இருக்கேன்ல .

நான்: நான் ஹால்ஸ் கேட்கலையே .

கடைகாரர்: என்கிட்ட 50 பைசா இல்லையே

நான்: அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?

கடைகாரர்: நீங்க 50 பைசா குடுங்க நான் ஒரு ரூபா தரேன்

நான்: என்கிட்ட இல்லையே !

கடைகாரர்: என்கிட்டையும் இல்லையே ! என்ன சார் பார்த்தா எதோ பெரிய கம்பெனி வேலை செய்றிங்க போல இருக்கு 50 பைசாக்கு பேசிட்டு இருக்கிங்களே.

நான்: அப்ப கண்டிப்பா 50 பைசா கிடைக்காதுன்னு சொல்லுங்க

கடைகாரர்: அப்பறம் எப்படிங்க இந்த ஹால்ஸ் எல்லாம் விக்கிறது? (ஹி ஹி என்று சிரித்தார்)

நான்: உங்க கிட்ட இருக்குற பொருளை மத்தவங்க கிட்ட வித்துகொங்க வேண்டாம் சொல்லல அத ஏன் அவங்க கிட்ட தினிகிரிங்க?

கடைகாரர்: சார் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுக பக்கதுல இருக்குற கடைல எங்கையாவது 50 பைசா இருக்குமான்னு பார்க்குறேன் இருந்தா வாங்கி தரேன்.

நான்: அது எல்லாம் வேண்டாம் இந்த கடைக்கு நான் எத்தன தடவை வந்து இருக்கேன் ?

கடைகாரர்: இப்பதான் உங்கள பார்க்குறேன்.

நான்: உங்க கடைக்கு இப்பதான் நானும் வரேன். சரி விடுங்க நான் இந்த ஹால்ஸ் எடுத்துக்குறேன். சில்லரை இல்லனா முதல சொல்லிடுங்க அப்பறம் முட்டாய் குடுங்க.


கடைகாரர்: சார் அடுத்த முறை வாங்க கண்டிப்பா முதலே சொல்லிடுறேன்.

நான்: என்ன முட்டாய் எடுத்துகோங்கனா?

கடைகாரர்: இல்ல சார், சில்லற இல்லைன்னு .

அடுத்த நாள் அதே கடை அதே சிகரட் ...

கடைகாரர்: சார் 50 பைசா இல்லையே.

நான் : இன்னைக்குமா ?

கடைகாரர் : யாருமே 50 பைசா குடுக்குறது இல்லையே.

நான்: அப்ப இந்தாங்க 50 பைசா எனக்கு ஹால்ஸ் வேண்டாம் ஒரு ரூபா தாங்க .

கடைகாரர் : சார் இந்த காசு செல்லாது ..

நான் : என்னது? ரெண்டு 25 பைசா செல்லாதா? ஏன் ? கவர்மென்ட்ல எதாவது சட்டம் போட்டு இருகுறங்கள என்ன?

கடைகாரர்: இந்த ஏரியால ஓடுறது எல்லாம் லாரி வண்டி தான் , முக்கா வாசி ஆந்திரல இருந்து தான் வராங்க அங்க
எல்லாம் 25 பைசா வாங்கிக்க மாட்டாங்க. அதனால இங்க கடைகளையும் அவங்க வாங்குறது இல்ல.

நான்: அவங்க வாங்காம போனா எனக்கு என்ன? நீங்க வாங்கிகோங்க .

கடைகாரர்: அத நான் எப்படி சார் மாத்துறது?

நான் : ஆந்திரகாரங்க தானே வாங்க மாட்டாங்க? தமிழ்நாட்டுகாரங்க வாங்குவங்கள ? அவங்ககிட்ட குடுங்க .

கடைகாரர்: என்ன சார் உங்களோட ஒரே தொந்தரவா போச்சு.

நான்: நான் என்ன உங்க சொத்தையா கேட்டேன்? என்னோட 50 பைசா தானே கேட்டேன்.

கடைகாரர்: இருந்தா கண்டிப்பா குடுப்பேன் சார். என்கிட்ட இல்லையே.

நான்: சரி அப்ப இந்த ஹால்ஸ் வாங்கிகோங்க. நேத்து நீங்க குடுத்தது .

கடைகாரர்: இது எல்லாம் வாங்கிக்க முடியாது சார்.

நான்: காசு குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுரிங்க, சரி உங்க பொருளே குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன்னு சொன்ன என்ன அர்த்தம்?

கடைகாரர்: சார் நான் வியாபாரி. என்கிட்ட காசு கொடுத்து பொருள வாங்கிகோங்க.

நான்: என்ன மாதுரி ஆளுங்க உங்க கடைக்கு வரத்து நாளதான் நீங்க வியாபாரி. ஒருதரும் கடைக்கு வரலைனா? நீங்களும்
எங்களை போல சாமானியன் தான்.

கடைகாரர்: சரி சார் இப்ப நான் இத வாங்கிகுறேன் அடுத்த முறை வரும் போது இந்த மாதுரி எல்லாம் பண்ணாதிங்க. சில்லரை கரெக்டா குடுத்து பொருள வாங்கிகோங்க.

நான்: பஸ்ல எல்லாம் ஒட்டி இருக்குற மாதுரி நீங்களும் பேசாம "சரியான சில்லரை குடுத்து பொருளை வாங்கவும்" சைடுல எங்கையாவது எழுதிவைங்க. இல்லனாஎன்ன மாதுரி ஆளுங்க நிறைய பேரு கிளம்பிடுவாங்க.

கடைகாரர்: முதல நீங்க கிளம்புங்க சார். வியாபாரத்த கெடுகாதிங்க.


டென்ஷன் ஆனவர் அவரே போய் ஒரு டீ போட்டு குடித்தார், வடிக்கையளர் இல்லாத கடையில்..