~~ROMEO~~

Everyday Starts with Happy :)

புத்தக சந்தையில்

படிக்கணும் பாஸ் .. நிறைய படிக்கணும். அலுக்க அலுக்க படிக்கணும். தேடி புடிச்சி படிக்கணும், வெறியா படிக்கணும்..

யாராவது என்னை புத்தகம் படிப்பதை பற்றி கேட்டால் நான் முன்னர் சொன்னது தான் பதிலாக இருக்கும்.

நேற்று புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன் .. ஒவ்வொரு ஸ்டாலாக சென்று என்ன மாதிரியான புத்தகம் இருக்கிறது என்று பார்த்து கொண்டே வந்தேன்.

சிறுவர்களுக்கு என்று நிறைய புத்தகங்கள் இருக்கிறது. சில புத்தகங்களை வாசித்த போது நான் சிறியவனாக இருந்தே இருக்கலாம் என்று தோன்றியது.

மாணவ மாணவியர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட கடைகளில் மொய்த்தார்கள்.

கிழக்கு பதிப்பக நூல்கள், சுஜாதா நூல்கள் தான் நிறைய கடைகளில் இருந்தது. புத்தக கண்காட்சியில் அறிவியல் பற்றிய நிறைய நூல்கள் இடம் பெற்றிருந்தது சந்தோஷமே.


கண்காட்சில் எடுத்த சில புகைப்படங்கள்.

3 மணிக்கு சென்றவன் மாலை 7.30 மணிக்கு தான் வெளியே வந்தேன். 3 மணி முதலே மக்கள் வர ஆரமித்து விட்டார்கள் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே தான் இருந்தது

சாரு, ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்தது சந்தோசமாக இருந்தது. இருவரிடமும் அவர்களின் புத்தகங்களின் பிரதிகளில் கையெழுத்து வாங்கினேன்


உரிமை பதிப்பகத்தில் நிறைய கூட்டம், அதே போன்று கிழக்கு பதிப்பகத்தில்.



கை நிறைய புத்தகங்களுடன் வெளியே வந்தேன், வாங்கிய புத்தகங்கள் பட்டியல்

நக்கீரன் - சேலஞ்ச
நான் சந்தித்த மரணங்கள்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மாமனிதர் நபிகள் நாயகம்
ராஜீவ் கொலை வழக்கு
கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளி
சர்வம் ஸ்டாலின் மயம்
பாரதியார் கதைகள்
ஊறு பசி - ராமகிருஷ்ணன்
காமரூப கதைகள்
ரெண்டாம் ஆட்டம்
கடவுளும் நானும்
அதிகாரம், அமைதி, சுதந்திரம்
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி
மரப்பாச்சியின் சில ஆடைகள்
பெருவெளி சலனங்கள்


பண பற்றாக்குறை காரணமாக வா.மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” , ஜெயமோகனின் ஏழாம் உலகம் , ராமகிருஷ்ணனின் யாமம் புத்தகங்கள் வாங்க முடிவில்லை.



இன்றோ நாளையோ கண்டிப்பாக திரும்ப செல்வேன் என்று நினைக்கிறன்.