~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சிலவற்றை திரும்பி பார்கிறேன் (3)

எங்கேயோ ஆரமிச்சு கதை எங்கயோ போயிட்டு இருக்கு , நாட்கள் உருண்டு ஓடியது , நட்பின் ஆழம் மறைந்து வாழ்கையின் ஆழம் புரிய ஆரமித்தது. படிப்பு மற்றும் வேலை காரணமாக நான் கோவை இருந்த 8 வருடங்கள் அவனை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது . என்னக்குள் இருந்த நியாபகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்மாக மறைந்தது . 2006 ஆம் வருட தொடக்கத்தில் சென்னை வந்து வேலை பார்க்கலாம் என்று வந்தேன் . ராயபுரம் ஏரியா தாண்டும் பொது எல்லாம் . பழைய நினைவுகள் சற்றே பின்னோக்கி செல்ல துண்டியது, இப்பொது இருக்கும் நண்பர்கள் யாரேனும் அவனை பற்றி தெரிந்து வைத்து இருபார்கள் என்ற நம்பிக்கையுடன் சில நண்பர்கள் இடம் கேட்டேன் . சுதாகர் மட்டும் அவனை திருவல்லிகேணி பக்கம் பார்த்தாக சொன்னான். நாட்கள் உருண்டு ஓடியது, எனக்கு வேலையும் கிடைத்தது எப்போது பைக் சவாரி செய்யும் நான் ஒரு முறை பஸ்சில் செல்ல நேர்ந்தபோது என் கண்ணில் அகபட்டன் சரவணன். நான் பஸ்சில் அவன் பல்சர் பைக்கில் போனதை பாத்தேன் . ஒரு டிராபிக் சிக்னலில் எனது பஸ் முன்னால் நின்று கொண்டு இருந்தான். ஆள் வாடசடமாக இருந்தான் . எப்படியும் அவனை பிடித்து விடலாம் என்று பஸ் விட்டு இறங்கி நடந்தேன் . அவனது தோளில் கை வைத்தேன், போலீஸ்காரன் தான் தன்னை மீது கை வைத்தானோ என்று ஒருவித பயத்துடன் திரும்பி பார்த்தான். எனது முகத்தை மறந்து இருப்பான் என்று நினைத்தேன், ஆனால் சரியாக கண்டு பிடித்துவிடான், அவனது சந்தோசம் முகத்தில் தெரிந்தது . பைக் பின்னாடி ஏறிக்கொண்டேன், நேராக திருவலிகேணி நோக்கி சென்றோம். ஒரு டீ கடை வாசலில் நின்ற்து அவனை பார்த்தும் கல்லாவில் இருந்தவர் சிநேகமாக புன்னகைதார் . அவன் என்னை பற்றி கேட்டு கொண்டே டீ மற்றும் சிகரெட் வாங்கினான், அவனை பற்றி விசாரிதேன் , +2 படிக்கும் போதே அவனது அப்பா மஞ்சள் கமலை நோயால் இறந்து விட்டாராம், தம்பி , தங்கை , அம்மா என்று இவனை எதிர்பார்க்க ஆரமித்தது . +2 பிறகு அவன் படிப்பிற்கு டாட்டா சொல்லிவீட்டு அப்பாவின் கடை எடுத்து நடத்த ஆரமித்துவிட்டன் . Painter தொழில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் இவனையும் விட்டு வைக்கவில்லை. மதத்தில் 15 வேலை இருந்தாலே பெரிது . அப்படி இப்படி என்று கொஞ்சம் பணம் சேர்த்து DTP, Photoshop என்று கற்று கொண்டு, ஒரு டிஜிட்டல் போர்டு தயாரிக்கும் கம்பெனி வேலைக்கு சேர்ந்து விட்டன் . இப்பொது வாழ்கையில் தும்பம் ஏதும் இல்லை. சந்தோசம் என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை . பாதிக்கு பாதி என்றே சொல்லலாம்.

சிலவற்றை திரும்பி பார்கிறேன் (2) ....

சரவணன் தேடி கிளாஸ்க்கு வந்தேன் அவன் இப்பொது எப்பயும் போல அவன் இடத்தில இருந்தான் , ஆனால் அவன் முகம் மட்டும் கவலையின் ரேகை படர்ந்து இருந்தது . அவன் பக்கத்தில் உட்கார்ந்தேன், அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவனிடம் இருந்து விசும்பல் சத்தம் கேட்டது . என்னடா ஆச்சு என்று கேட்டேன் அவன் கண்கள் இரண்டும் சிவந்து பொய் இருந்தது . சுற்றி முற்றும் பாத்தேன் இவனை யாராவது பார்க்கிறகள் என்று, இரண்டு கண்கள் மட்டும் என்னையும் அவனையும் பார்த்துக்கொண்டு இருந்தது முதல் வரிசையில் இருக்கும் பெண்கள் இடம் இருந்து, அட நம்ம சரவணன் ஆளு என்னை எதுக்கு இந்த லுக் விடுகிறாள் . சரவணன் இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரும் குரல் எடுத்து அழுவன் என்றே தோன்றியது. முதலில் இவனை பார்க்கலாம் என்று அவனிடம் ஏன்டா அழுற என்று கேட்டேன் . அவன் கண்கள் இப்பொது அவனின் ஆளு பக்கம் சென்றது . என்னடா ஆச்சு கேக்குறேன் ஏதும் பேசமாட்டேன் என்பதை போல முகத்தை வைத்து கொண்டு இருந்தான் வந்த கோபத்தில் அவன் ரெண்டு கண்களையும் விரல விடு நோண்டலாம் போல இருந்துச்சு. 

அவனே ஆரமித்தான், அவன் காதலிக்கு ( அதன் முருக கடவுள் மனைவி பெயரை கொண்ட பெண்) காதல் கடிதம் எழுதி அதை எனோட ரெகார்ட் நோட் புக்குள்ள மறந்து வச்சுட்டன் . அடப்பாவி உன்னோட லைப்காக என்னோட லைப் போகபோதே என்று நினைத்த உடன் என்னோட கண்களில் இருந்து கண்ணிர் வர ஆரமித்தது . என்ன இருந்தாலும் நீ என்னோட நண்பன் உன்னை இக்கட்டில்மாட்டி விடமாட்டேன் என்று சத்யம் செய்து குடுத்தேன். இதுல என்னோட சுயநலம் இருந்தது இப்ப இவன நான் மாட்டிவிட்டால் கண்டிபா இவன் எனக்கு ஏதும் வரைந்து தரமாட்டான். சரி இதுக்கு என்ன பண்ணி இவனையும் என்னையும் காப்பாற்றுவது ??? மதியம் PT கிளாஸ் நேரதுல டீச்சர் கிட்ட பேசலாம் . மதியம் சாப்பிடவில்லை இரண்டு பெரும் ஆளுக்கு ஒரு ஐடியா ரெடி பண்ணி வச்சு இருந்தோம்.

சரவணன் என்னைப்போல இல்லை நன்றாக படிக்கும் மாணவன் எப்பயும் வகுப்பில் முதல் 5 இடங்கள்குள் வந்து விடுவான் . நான் என்னதான் படிச்சு , பிட் அடிச்சாலும் ரேங்க் பட்டியல்ல இருக்கமாட்டேன் . சயின்ஸ் பரிச்சைக்கு வரலாறு புக் பிட் பேப்பர் எடுத்துட்டு போன எங்க பொய் பாஸ் ஆகுறது . இதுல என்னோட பெயர் ஸ்கூல் முழுக்க பரவி இருந்தது, என்னை பார்த்தாலே பொண்ணுக எல்லாம் 10 அடி முன்னால் அல்லது பின்னால் நடபர்கள் . ஒரு வாருங்கள ரவுடி ரெடி ஆகி கொண்டு இருந்தான் என்றே சொல்லலாம் . சரி இப்ப இந்த மேட்டர் நாம சுமுகமா முடிச்சு குடுத்தா நம்ம பேரு கொஞ்சம் போல உயரும் நண்பர்கள் மத்தியில். PT வகுப்பு ஆரமித்து விட்டது இந்த டைம்ல டீச்சர் கண்டிபா ரூம்ல தான் இருபாங்க. என்னோட நேரம் டீச்சர் நல்ல துங்கிட்டு இருந்தாங்க, எப்படி இவங்கள எழுபுறது . சரி வந்தாச்சு இனி நாடகத்த ஆரமிசுடலம் . 

போத் என்று கேட்ட சத்தில் டீச்சர் துக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார். சுற்றும் முற்றும் பார்த்தார், யாரும் இல்லையே என்ன சத்தம் என்று திரும்ப துங்க போனவர் தன் காலடியில் ஏதோ ஒன்று இருபதை பார்த்து திடுகிட்டார் . நான் தான் என்று தெரிந்த பின்னர் பார்வையில் என்னை பொசுக்கி விடுவர் போல இருந்தது .
ஏன் இங்கு வந்தாய் என்று வினவினார் . ( கோர்ட்ல எல்லாம் உண்மை தவற வேற ஏதும் பேசமாட்டேன் என்று சொல்லிட்டு பொய் வேசுவங்க , இங்க எல்லாம் உல்டா பொய் தவிர வேறு ஏதும் பேசமாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டேன் )  டீச்சர் என்னோட ரெகார்ட் புக்ல இருந்த லெட்டர் என்னுடையது இல்ல அது எங்க ஏரியால இருக்கும் ஒரு அண்ணா எங்க எதிர் வீட்டு அக்கா கிட்ட குடுக்க சோனக. அத குடுக்க மறந்து ரெகார்ட் நோட்ல வச்சிட்டேன் . டீச்சர் என்னை நம்பவே இல்லை, சரி டீச்சர் என்னோட கையெழுத்தும அந்த லெட்டர்ல இருக்குற கையெழுத்தும சரியாய் இருகிறதா பாருங்கள் . 

டீச்சர் சரி பார்த்தார் இரண்டுக்கும் சம்பதமே இல்லை , இருந்தாலும் அவர் என்னை விடுவதா இல்லை . படிக்குற வயசுல எதுக்கு இந்த மாதுரி வேலை பாக்குற இத எல்லாம் உங்க அப்பா கிட்ட சொலிகுறேன் நீ நாளைக்கு உங்க அப்பாவை இல்லாம வராத என்று கூறிவிட்டார்.  இனியும் அமைதியா இருந்தால் வேளைக்கு ஆகாது, போத் இந்த முறை கண்டிபா மனம் இறங்கி விடுவர் என்கிற நம்பிக்கையுடன் அழுது புரண்டேன் . டீச்சர் இது எங்க அப்பாக்கு தெரிந்தால் என்னை துளைத்து கட்டுவர் அது மட்டும் இல்லாம எனோட படிப்பும் நீறுதிவிடுவர். இதற்கு பிறகுதான் அவரின் மனம் இறங்கி வந்தது. சரி இனி மேல இந்த மாதுரி எல்லாம் தப்பு பண்ண கூடது என்று பத்து நிமிட மொக்கைகு பிறகு அவரிடன் இருந்த லெட்டர் வாங்கி கொண்டு வந்தேன் . மேட்டர் சுமுகமா முடிந்தது, சரவணன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை டான்ஸ் அடியது . அந்த லெட்டர் எங்கே என்றுகேட்டான் அதை டீச்சர் கிழிச்சு போடு விட்டார் என்று ஒரு பொய் சொல்லி விட்டேன் ( இது என்னைக்காவது உதவும் என்று ) .

சிலவற்றை திரும்பி பார்கிறேன் ....



என்னுடையே முதல் பதிவான இதில் எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும் ...


நம்ம ஏரியால எல்லாம் முக்குல ஒரு painter இருபாரு . M.G.R , Shivaji, Rajini , Kamal இப்படி எதாவது ஒரு நடிகன் கண்டிபா அவரோட கடைல போஸ் குடுத்து இருபாங்க. நல்ல தத்துரூபமா இருக்கும் இவங்க வர்ணம் எல்லாம் . இவங்க எங்கையாவது ஒரு சுவத்துல பெயிண்ட் பண்ணும் போது அத வேடிக்கை பார்க்க ஒரு கும்பல் இருக்கும் . அண்ணா சாலைல நிறைய ரச்சசா விளம்பர போர்டுக இருந்த நேரத்துல இவங்களுக்கு நல்ல வேலையும் , நல்ல சம்பளம் கிடைத்தது . எவ்வளவு பெரிய விளம்பர பலகை ஆனாலும் இவர்கள் அநாயசமாக கயுறு கட்டி தொங்கிடே அடிகுரத பார்க்க எதோ ஜெமினி சர்க்கஸ் பாக்குறது மாதுரி இருக்கும் . இவங்க பிரதான தொழில் பெயிண்ட் அடிக்குறது , விளம்பரங்கள் எழுதுகிறது என்று இவர்கள் வாழ்கையில் எதோ ஒன்று கண்டிபாக தங்கள் வகிற்று பிழைப்புகாக இருந்தது. ஆனால் இன்று இவர்களது நிலைமை ? எத்தனையோ புதிது புதிது டெக்னாலஜி வந்து நாம் அதை பெரியதாக கொண்டாடும் இந்த வேளையில் இவர்கள் வாழ்கை மட்டும் அதாலபலதில் கொண்டு சென்றுவிட்டது .
எப்போ பிளேக்ஸ் போர்டு , டிஜிட்டல் போர்டு , வினையல் போர்டு இப்படி நிறைய புது புது டெக்னாலஜி வந்துச்சோ இவங்க வாழ்க்கையில் மிக பெரிய சரிவை கொண்டு வந்து உள்ளது . டெக்னாலஜி பயன்படுத்த தெரிந்த சிலரை அது எங்கோ கொண்டுபோய் விட்டது நல்ல பணம் , நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. ஆனால் அது எலோருக்கும் கிட்டவில்லை .

என்னுடன் படித்த ஒரு பள்ளி தோழனின் அப்பா painter நன்றாக வரைவர் . தன்னுடைய அப்பா painter என்பதில் அவனுக்கு எந்த ஒரு சங்கடம் இல்லை. பள்ளியில் சயின்ஸ் ரெகார்ட்ஸ் எல்லாம் இவன் வரையும் படங்கள் எந்த ஒரு அடித்தல் கிறுக்கல் இல்லாமல் இருக்கும் . அவனின் அப்பா அவனுக்கு சிறிய வயதில் இருந்தே வரைவதி ஆர்வம் கொண்டு வந்து உள்ளார் . அதனால் என்னமோ இவனின் பின்னல் மட்டும் கூட படிக்கும் பெண்கள் எல்லாம் தனியாக ஒரு பார்வை இருக்கும் . 

பள்ளியில் முருகன் மனைவின் பெயர் கொண்ட பெண் ஒருத்தி எங்கள் வகுப்பில் படித்தல் . நன்றாக படிபள் அதனால் என்னமோ என்னை மாதுரி மக்கு பசங்கள பார்த்த எதோ ஒரு ஜந்துவ பார்த்து ஒதுங்குற மாதுரி போவாள் . மாணிக்க வேண்டும் எனது நண்பனின் பெயர் சொல்ல மறந்துட்டேன் . அவன் பெயர் சரவணன் . அந்த முருக கடவுள் பெயர் கொண்ட பெண்ணை இவனுடன் இணைத்து பேசுவது எனது முக்கியமானது வேலை ஆனது . சரவணன் எதும் எதிர்த்து பேசமாடன் . அவனுக்கு தெரியும் நான் கிண்டலுக்கு தன் பேசுறேன் . ஆனால் காதல் யாரை விட்டு வைத்தது பத்தாவது படிக்கும் போதே இவர்கள் காதலில் விழுந்துவிட்டார்கள் . சரவணன் இதை பற்றி எதும் என்னிடம் சொல்லவே இல்லை. 

சயின்ஸ் டீச்சர் வரைய சொன்ன ஒரு அண்டோமி படம் அவனிடம் குடுத்து வரைய சொனேன் . சரவணன் எனக்கு வரைந்து குடுக்கும் படம் மட்டும் கொஞ்சம் அடித்து அடித்து வரைவான் இல்லை என்றால் டீச்சர் கண்டிபாக கண்டுபிடித்து விடுவர். டீச்சர் எல்லோரையும் ரெகார்ட் நோடேயும் தனது டேபிள் வைக்க சொன்னார்கள். எனது நோடே சரவணன் இடம் இருந்து வாங்கி ரொம்ப தெனாவட்டு ஆகா அவரின் முன்னால் வைத்து திரும்பினேன் . சனி என்னோட உச்சன் தலையில் வந்து உக்காந்துதாறு என்று சொல்ல வேண்டும்.

என்னோட ரெகார்ட் தன் முதலில் எடுத்து பார்த்த டீச்சர் எதோ பேயி அறைந்த மாதுரி முளிச்சாங்க . ஏனடா இப்படி முளிகுரங்க நீ எதாவது மாதி வரஞ்சு வச்சியா என்று சரவனிடம் கேட்டால் அவன் அந்த இடத்திலே இல்லை . கடைசி பெஞ்ச்ல எதோ அட்டை போல் முகத்தை மறைத்து ஒளிந்து இருந்தான் புரிந்து விட்டது எடகுடமா எதோ நடந்து விட்டது என்று. ஆனால் என்ன என்று தான் தெரிய வில்லை .

டீச்சர்ரின் முகம் Dinosaur முகம் போல ஆத்திரத்தில் பெருசாகி கொண்டே இருந்தது . என்னை பொசுக்கி விடுவது போல பார்த்து முறைத்தார் . சரவணன் இன்னும் அங்கயே ஒட்டி ஒண்டு இருந்தான் . டீச்சர் என்ன நினைத்தாரோ எனோட ரெகார்ட் நோட் மட்டும் கடைசில் வைத்து விட்டு மற்ற எல்லா ரெகார்ட் நோட் பார்த்து மார்க் போடு கொண்டு இருந்தார் .அவரின் வகுப்பு முடியே 10 நிமிடங்கள் இருக்கும் போதே கிளம்பியவர் என்னோட ரெகார்ட் நோட் கையோட எடுத்து கொண்டார் போகும் போது என் அருகில் வந்து தன்னுடன் வர சொல்லி சொன்னார் . இந்த தடவை நான் சரவணனை பார்க்காமல் அவருடன் கிளம்பினேன் . எந்த ஒரு தப்பு செய்யும் போதும் அதுக்கு அதாரம் இல்லாம செய்யணும் ( இது எனோட LKG முதல் படிக்கும் நண்பன் கார்த்திக் சொன்னது ). அவரின் பினளே சென்று என்னுடைய ரெகார்ட் நோட் புக் குடுத்து போ என்று சொன்னவர் , திரும்பும் போகும் போது நாளை எனோட அப்பாவை பள்ளிக்கு குட்டிட்டு வர சொன்னார் . என்னடா இது ஒன்னும் புரியாமல் விழித்தேன் . சரி இதுல சரவணன் கை வண்ணம் இருக்குது முதல அவன கவனிப்போம் என்று கிளாஸ்க்கு வந்தேன். 


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ....